Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Saturday, October 20, 2012

ஒரு பைசா கூட கொடுக்கவில்லை நித்தி சொல்வதெல்லாம் முழு பொய் : அருணகிரிநாதர் ஆவேச போட்டி

ராஜினாமா செய்யசொன்னபோது மறுத்து விட்டார்: நித்தியானந்தா சொன்னதெல்லாம் முழுப்பொய்: அருணகிரி நாதர்


மதுரை ஆதீனம் அருணகிரி நாதர், இளைய ஆதீனம் பதவியில் இருந்து நித்தியானந்தாவை கடந்த 19.10.2012 அன்று இரவு நீக்கினார்.
இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்களும், இந்து அமைப்பினரும் மதுரை ஆதீன மடத்தில் 20.10.2012 அன்று குவிந்தனர். அவர்கள் ஆதீனத்தை சந்தித்து, வாழ்த்து பெற்றனர். மடத்தின் முன்பு தேங்காய்களை உடைத்தனர். ஆதீனமும் சிறப்பு பூஜைகளை செய்தார். அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.
அப்போது பக்தர்கள் மத்தியில் ஆதீனம் பேசியதாவது:-

திருஞானசம்பந்தர் தோற்றுவித்த ஆதீன மடம் 1,500 ஆண்டுகளாக போற்றி காக்கப்பட்டு வருகிறது. ஆதீனத்திற்கு பல ஆயிரம் கோடி சொத்துகள் இருப்பதால், அதை நிர்வாகம் செய்ய நித்தியானந்தா சரியானவராக இருப்பார் என்று நினைத்து அவரை நியமித்தேன்.
நான் எப்போதும் தருமபுரம் ஆதீனம் ஆலோசனைகளை பெறுவது வழக்கம். இந்த விவகாரத்தில் அவரது பேச்சை கேட்கவில்லை. இதனால் அவர்களும், இந்து அமைப்பினரும் எதிர்த்தனர்.

ஆதீன மரபுப்படி நித்தியானந்தா நடந்து கொள்ளவில்லை. என் பேச்சை மீறி செயல்பட்டார். ஆதீனத்தின் பழம் பெருமைக்கு என்னால் எந்த களங்கமும் ஏற்பட்டு விட்டு விடக்கூடாது என்பதற்காகவும், மடத்தின் பெருமையை நிலைநாட்டவும் நித்தியானந்தாவை நீக்கினேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து அருணகிரி நாதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பழமை வாய்ந்த ஆதீன மடத்தின் நெறிகளையும், சொத்துகளையும் காக்க கடந்த ஏப்ரல் மாதம் நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்தோம். தற்போது அந்த பதவியில் இருந்து அவரை நீக்கியுள்ளோம். இதுவும் இறைவனின் செயல் தான். நித்தியானந்தாவின் சீடர்கள் உடனடியாக மடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.

நித்தியானந்தா நீக்கப்பட்டதால், கடந்த சில மாதங்களாக நான்பட்ட மனக்கஷ்டத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ளேன். இப்போது சுதந்திரமாக உள்ளேன். மதுரை ஆதீனத்தின் கதவுகள் எப்போதும் போல் திறந்திருக்கும். வழக்கம் போல் அனைத்து பூஜைகளும் நடைபெறும். எந்த நேரமும் பக்தர்கள் வழிபாடு செய்யலாம்.

நித்தியானந்தாவை ராஜினாமா செய்ய நான் உத்தரவிட்ட போது, முதலில் ஒப்புக்கொண்டார். அதன் பிறகு மறுத்து விட்டார். நல்ல நாள் பார்த்து ராஜினாமா செய்வதாக கூறினார்.

நல்ல காரியங்களுக்குத்தான் நல்ல நேரம், நட்சத்திரம் எல்லாம் பார்க்க வேண்டும். ராஜினாமா செய்வதற்கு எதற்கு நல்ல நாள் பார்க்க வேண்டுமா? ராஜினாமா செய்திருந்தால் நான் நீக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

முக்கியமாக ஆதீன பெருமை அழியாமல் நிலை நாட்டும் நோக்குடன் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆதீன வளர்ச்சிக்கு ரூ.100 கோடி கொடுப்பதாகவும், முதல் தவணையாக ரூ.5 கோடி தருவதாகவும் நித்தியானந்தா கூறினார். ஆனால் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. அவர் சொன்னதெல்லாம் முழுப்பொய்.
இவ்வாறு அவர் கூறினார்.


http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=84641



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
மதுரை: ஆதீன மடத்துக்கு ஆரம்பத்தில் ரூ.100 கோடி கொடுப்பதாக சொல்லி முதலில் ரூ.5 கோடி கொடுப்பதாக சொன்னதெல்லாம் முழுப்பொய். ஒரு பைசா கூட கொடுக்கவில்லை என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் ஆவேசமாக கூறினார். மதுரை ஆதீன மடத்தில் இருந்த நித்யானந்தா சீடர்கள் மடத்தை விட்டு நேற்று இரவு வெளியேறியதை தொடர்ந்து, தனது விசுவாசிகளை அருணகிரிநாதர் பணியில் அமர்த்தினார். இன்று நித்யானந்தா மதுரைக்கு வருவதாக இருந்தது. அவரை டிஸ்மிஸ் செய்து போலீசில் புகார் கொடுத்ததை தொடர்ந்து நித்யானந்தா வரவில்லை. இன்று ஆதீனம் சிவ பூஜை நடத்தினார். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஞானபால் வழங்கினார். பின்னர் அருணகிரிநாதர் அளித்த பேட்டி: ஆதீனத்தை சிவபெருமான் காப்பாற்றி விட்டார். என் மனக் கவலை தீர்ந்தது. நிம்மதியாக பூஜை செய்தேன். அடுத்து நடப்பதை சிவபெருமான் பார்த்துக் கொள்வார்.

திருவண்ணாமலையில் நித்யானந்தா அளித்துள்ள பேட்டியில் “நீக்கியதற்காக அதிர்ச்சி அடையவில்லை, நல்ல நாள் பார்த்து நானே ராஜினாமா செய்வதாக இருந்தேன், அதற்குள் ஏன் நீக்கினார் என தெரியவில்லை?’’ என்று கூறி உள்ளாரே? ராஜினாமா செய்ய உத்தரவிட்டபோது ஒப்புக் கொண்டார். பிறகு மறுத்து விட்டார். நல்ல காரியங்களுக்கு தான் நல்ல நாள், நல்ல நேரம், நட்சத்திரம் பார்க்க வேண்டும். ராஜினாமாவுக்கு நல்ல நாள், நல்ல நேரம் எதற்கு? தேவையில்லையே. ராஜினாமா செய்து இருந்தால் நீக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. நீக்கும் அளவுக்கு என்ன நெருக்கடி என நீங்கள் கூற வேண்டும் என்கிறாரே? 1,500 ஆண்டு கால பாரம்பரிய ஆதீனமடத்திற்கு சோதனையே நித்யானந்தா தானே.

அதனால் தான் நீக்கினேன். முக்கியமாக ஆதீன பெருமை அழியாமல் நிலை நாட்டும் நோக்குடன் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வாய்ப்பு கிடைத்தால் உங்களை சந்திப்பேன் என்று நித்யானந்தா கூறி உள்ளாரே? நீக்கிய பிறகு அவருக்கும் ஆதீனத்திற்கும் எந்த தொடர்பு கிடையாது. எனவே சந்திக்க என்ன இருக்கிறது. இங்கு வரமாட்டார். அதற்கு தேவையும் இல்லை. வாரிசாக நியமிக்கப்பட்டபோது ஆதீனத்திற்கு ரூ.5 கோடி கொடுப்பதாக நித்யானந்தா சொன்னாரே? ஆதீன வளர்ச்சிக்கு ரூ.100 கோடி கொடுக்க போவதாகவும், முதலில் ரூ.5 கோடி கொடுப்பதாவும் சொன்னார். ஒரு பைசா கூட என்னிடம் கொடுக்கவில்லை. அவர் சொன்னதெல்லாம் முழுப் பொய். இவ்வாறு ஆதீனம் கூறினார்.


 http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=35115

ரூ.100 கோடி தந்தாரா? நி‌த்யான‌ந்தா சொ‌ன்னதெ‌ல்லா‌ம் முழு‌ப் பொ‌ய்- மதுரை ஆ‌தீன‌ம் சொ‌ல்‌கிறா‌ர்

ஞாயிறு, 21 அக்டோபர் 2012( 09:30 IST )


ஆதீன வளர்ச்சிக்கு ரூ.100 கோடி கொடுப்பதாகவும், முதல் தவணையாக ரூ.5 கோடி தருவதாகவும் நித்யானந்தா சொன்னதெல்லாம் முழுப்பொய்'' எ‌ன்று மதுரை ஆ‌தீன‌ம் அருண‌கி‌ரி நாத‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இளைய ஆதீனம் பதவியில் இருந்து நித்யானந்தாவை நீக்கியதை தொட‌ர்‌ந்து ஆ‌தீன‌த்‌தி‌ல் நட‌ந்த சிறப்பு பூஜை‌யி‌ல் ஏராளமான ப‌க்த‌ர்க‌ள் கு‌வி‌ந்தன‌ர். அவ‌ர்களு‌க்கு ஆ‌சி வழ‌ங்‌கிய அருண‌கி‌ரி நாத‌ர் பேசுகை‌யி‌ல், திருஞானசம்பந்தர் தோற்றுவித்த ஆதீன மடம் 1,500 ஆண்டுகளாக போற்றி காக்கப்பட்டு வருகிறது. ஆதீனத்திற்கு பல ஆயிரம் கோடி சொத்துகள் இருப்பதால், அதை நிர்வாகம் செய்ய நித்யானந்தா சரியானவராக இருப்பார் என்று நினைத்து அவரை நியமித்தேன்.

நான் எப்போதும் தருமபுரம் ஆதீனம் ஆலோசனைகளை பெறுவது வழக்கம். இந்த விவகாரத்தில் அவரது பேச்சை கேட்கவில்லை. இதனால் அவர்களும், இந்து அமைப்பினரும் எதிர்த்தனர். ஆதீன மரபுப்படி நித்யானந்தா நடந்து கொள்ளவில்லை. என் பேச்சை மீறி செயல்பட்டார்.

ஆதீனத்தின் பழம் பெருமைக்கு என்னால் எந்த களங்கமும் ஏற்பட்டு விட்டு விடக்கூடாது என்பதற்காகவும், மடத்தின் பெருமையை நிலைநாட்டவும் நித்யானந்தாவை நீக்கினேன் எ‌ன்று அருண‌கி‌ரி நாத‌ன் க‌ண்‌‌ணீருட‌ன் கூ‌றினா‌ர்.

இதைத்தொடர்ந்து செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், பழமை வாய்ந்த ஆதீன மடத்தின் நெறிகளையும், சொத்துகளையும் காக்க கடந்த ஏப்ரல் மாதம் நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்தோம். தற்போது அந்த பதவியில் இருந்து அவரை நீக்கியுள்ளோம். இதுவும் இறைவனின் செயல் தான். நித்யானந்தாவின் சீடர்கள் உடனடியாக மடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.

நித்யானந்தா நீக்கப்பட்டதால், கடந்த சில மாதங்களாக நான்பட்ட மனக்கஷ்டத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ளேன். இப்போது சுதந்திரமாக உள்ளேன். மதுரை ஆதீனத்தின் கதவுகள் எப்போதும் போல் திறந்திருக்கும். வழக்கம் போல் அனைத்து பூஜைகளும் நடைபெறும். எந்த நேரமும் பக்தர்கள் வழிபாடு செய்யலாம்.

நித்யானந்தாவை ராஜினாமா செய்ய நான் உத்தரவிட்ட போது, முதலில் ஒப்புக்கொண்டார். அதன் பிறகு மறுத்து விட்டார். நல்ல நாள் பார்த்து ராஜினாமா செய்வதாக கூறினார். நல்ல காரியங்களுக்குத்தான் நல்ல நேரம், நட்சத்திரம் எல்லாம் பார்க்க வேண்டும். ராஜினாமா செய்வதற்கு எதற்கு நல்ல நாள் பார்க்க வேண்டுமா? ராஜினாமா செய்திருந்தால் நான் நீக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

முக்கியமாக ஆதீன பெருமை அழியாமல் நிலை நாட்டும் நோக்குடன் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆதீன வளர்ச்சிக்கு ரூ.100 கோடி கொடுப்பதாகவும், முதல் தவணையாக ரூ.5 கோடி தருவதாகவும் நித்தியானந்தா கூறினார். ஆனால் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. அவர் சொன்னதெல்லாம் முழுப்பொய் எ‌ன்று மதுரை ஆ‌தீன‌ம் கூறினார். 


http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1210/21/1121021001_1.htm

4 comments:

  1. பல ஆயிரம் கோடி சொத்து இருக்கு அதை நிர்வகிக்க நித்தியானந்தா சரியான ஆள் என்கிறார்! அப்புறம் ஆதின வளர்சிக்கு நூறு கோடி தருவதாக சொன்னார் தரவில்லை.என்ன நடக்குது இங்கு.வியாபரம் போனியாகவில்லை கிழஸ்க்கு.னூறு கோடி கனவில் இருந்தால் தனது கோமனமுல் இல்லாமல் போகும் நிலை தமிழ்நாடு அரசு எடுத்திடும் என்று முந்திட்டார் கிழஸ்.

    ReplyDelete
  2. நூறு கோடி கொடுத்து இருந்தால் நீக்கி இருக்க மாட்டேன்னு சொல்ல வர்றீங்களா ? உங்கள் கதை பகவானுக்கே வெளிச்சம்.

    ReplyDelete
  3. உச்சகட்ட பேத்தல். ஏற்கனவே பல ஆயிரம் கோடி சொத்துக்களை கொண்ட மதுரை ஆதினத்தின் வளர்ச்சிக்கு(?) நூறு கோடி கொடுப்பதாக நித்யானந்தா சொன்னாராம். இவரும் அதை நம்பி அவரை நியமித்தாராம். என்ன கொடுமை சார் இது.

    ReplyDelete
  4. நித்தியை நியமிக்கும்போது சிவன் வந்து நித்தியை நியமிக்குமாறு சொன்னார் என்றார்.நீக்கும்படி பார்வதி சொன்னாரோ?

    ReplyDelete