Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Thursday, January 31, 2013

Petition filed by Nithyananda dismissed



MADURAI, January 30, 2013 
Staff Reporter 

Principal Sub-judge K. Guruviah, on Monday, dismissed a petition filed by Nithyananda, seeking to thwart a bid by Madurai Aadheenam Arunagirinathar to dissolve a trust formed in association with the former.

According to Nithyananda, the Aadheenam did not consult him before attempting to dissolve the trust registered in both their names. Therefore, the court should pass orders forbidding the Aadheenam from dissolving the trust, he pleaded. 

However, the Aadheenam claimed that the trust was formed under the Madurai Mutt and hence there was no necessity to get approval from Nithyananda. 

The judge held that Nithyananda’s claims were unwarranted and dismissed the petition.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/petition-filed-by-nithyananda-dismissed/article4359370.ece

Tuesday, January 29, 2013

Nithyananda plea against Madurai adheenam rejected

English summary Madurai principal sessions court has dismissed Nithyananda's petition against Madurai Aadheenam.

ஆதீனத்திற்கு எதிரான நித்தியானந்தாவின் வழக்கு மதுரை கோர்ட்டில் தள்ளுபடி 

Posted by: Sudha Published: Tuesday, January 29, 2013, 12:01 [IST]

மதுரை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மீது நித்தியானந்தா தொடர்ந்த வழக்கை மதுரை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.

 தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால், மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அதில், இந்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் ஆதீனம் தரப்பில் மதுரை ஆதீனம் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எனவே மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அடுத்த ஆதீனம் நியமிக்கப்படும்வரை மடத்தின் பொறுப்புகளை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

இதையடுத்து அருணகிரிநாதர், அதே கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், மதுரை ஆதீனம் அறக்கட்டளை கலைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த பெயரில் பதிவாளர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும், மதுரை ஆதீன மடத்தில் நித்தியானந்தாவும், அவருடைய தரப்பினரும் நுழைய நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் நித்தியானந்தா, ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், மதுரை ஆதீனம் அறக்கட்டளையை நானும், அருணகிரிநாதரும் சேர்ந்து சட்டப்படி உருவாக்கினோம். அறக்கட்டளையை கலைக்க விரும்பினால் முதன்மை அரசு வக்கீலிடம் முன் அனுமதி பெற வேண்டும். அறக்கட்டளையில் உள்ள எனக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். 

ஆனால், அதுபோன்று எந்தவித அனுமதியும் பெறாமல் அறக்கட்டளை கலைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கலைத்தது தவறு. சட்டப்படி அறக்கட்டளையை கலைக்காமல் அறக்கட்டளைக்கான பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று அருணகிரிநாதர் தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்கக்கூடாது. அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

 இதற்கு அருணகிரிநாதர் தாக்கல் செய்த பதில் மனுவில், சாதாரணமாக உருவாக்கப்படும் அறக்கட்டளைகளுக்குத்தான் நித்தியானந்தா கூறியுள்ள விதிமுறைகள் பொருந்தும். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் மதுரை ஆதீனம் போன்ற மடங்களில் அமைக்கப்படும் அறக்கட்டளைகளை கலைக்க அந்த விதிகள் பொருந்தாது. எனவே சட்டப்படியான அடிப்படை காரணங்கள் இல்லாததால் நித்தியானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

இந்த மனுக்கள் நீதிபதி கே.குருவையா முன்பாக விசாரணைக்கு வந்தன. ஆதீனம் தரப்பில் வக்கீல் நாகேந்திரன், ராமமூர்த்தி ஆகியோர் ஆஜரானார்கள். முடிவில் ஆதீனம் மனுவை தள்ளுபடி செய்யக்கோரிய நித்தியானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

 http://tamil.oneindia.in/news/2013/01/29/tamilnadu-madurai-court-dismisses-nithyanantha-168788.html




DINAMALAR NEWS

மதுரை ஆதீனத்திற்கு எதிரான நித்யானந்தா மனு தள்ளுபடி
 ஜனவரி 29,2013,00:59 IST

மதுரை: மதுரை ஆதீனத்துக்கு எதிராக, நித்யானந்தா தாக்கல் செய்த மனுவை, முதன்மை சப்கோர்ட் நீதிபதி குருவைய்யா, தள்ளுபடி செய்தார். மதுரை ஆதீனத்தை அரசிடம் ஒப்படைக்கவும், நித்யானந்தா-ஆதீனம் இணைந்து துவக்கிய அறக்கட்டளை பதிவை ரத்து செய்ய உத்தரவிடவும், மடத்தின் சொத்துகளை ஆதீனமோ, அவர் தரப்பினரோ வேறு நபருக்கு விற்க, பதிவு செய்ய இடைக்காலத் தடை விதிக்கவும் வலியுறுத்தி, இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால், முதன்மை சப்கோர்ட்டில் மனு செய்தார். நித்யானந்தா இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டதை ரத்து செய்யவும், ஆதீன அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்யவும், ஆதீன மடத்தில் நித்தியானந்தா நுழைய தடை விதிக்கவும் கோரி, ஆதீனம் தரப்பு, அதே கோர்ட்டில் மற்றொரு மனு செய்தது. அறக்கட்டளையை பதிவு செய்த தெற்கு சார்பதிவாளரையும் இணைக்க வலியுறுத்தி, நித்யானந்தா தரப்பு, மனு செய்தது. ஒரே நேரத்தில் தாக்கலான, மூன்று தரப்பினரின் வெவ்வேறு மனுக்கள் மீதான விசாரணை, நடந்து வருகிறது. இதற்கிடையில், ஜன.,8ல், நித்யானந்தா தரப்பு புது மனுவை தாக்கல் செய்தது. 
அதில்,"மதுரை ஆதீனத்திற்கு வழக்கு போடும் உரிமை இல்லை. அவர் மனு செய்தது சட்டப்படி செல்லாது. அரசின் முன் அனுமதி பெறாமல் அறக்கட்டளையை களைத்தது, விதிகளுக்கு முரணானது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என கூறியிருந்தனர். இதுதொடர்பாக, நேற்று நடந்த விசாரணையில், நித்யானந்தா தரப்பின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி குருவைய்யா, பிற மனுக்கள் மீதான விசாரணையை, பிப்., 1 க்கு தள்ளிவைத்தார்


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=636025




Friday, January 11, 2013

Nithyananda 'Returns' to Bidadi Dhyanapeetam: TV9 News

Nithyananda returned to Bidadi after a failed attempt to celebrate his Birthday in a grand way in Tiruvannamalai. The Tamil Nadu government refused to grant permission for Nithy's grand public celebrations and public discourse. Following the fiasco in Tiruvannamalai, Nithy promptly cancelled his 4 day meditation program in Salem. It appears Nithy has now shifted his program to his Bidadi ashram. But Nithy is facing trouble once again in Karnataka too as Kannada groups have protested against fraud godman.


protest demanding Nityananda exiled- tv9 news


நித்யானந்தா பிடதியிலிருந்து வெளியேற வேண்டும்-கன்னட அமைப்பு போராட்டம்



பெங்களூர், பிடதி ஆசிரமத்திலிருந்து நித்தியானந்தா உடனடியாக வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கன்னட அமைப்பு ஒன்று போராட்டத்தில் குதித்துள்ளது. இதனால் நித்தியானந்தா மீண்டும் வெளியேறும் நிலை உருவாகியுள்ளது.
முன்னதாக பெங்களூர் அருகே உள்ள பிடதியில் நித்யானந்தாவுக்கு ஆசிரமம் உள்ளது. மதிரை மடாதிபதியின் இளைய ஆதினமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதால் அவர் மதுரை வந்து பதவி ஏற்றார். ஆனால்,  அங்கு அவருக்கு எதிராக கடும் எதிர்ப்பு தோன்றியதால் அருணகிரிநாதர் நித்யானந்தாவின் பதவியைப் பறித்து விட்டார்.
இதனிடையே, நித்தியானந்தா பிடதி வந்துள்ளார் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து கநாடக நவநிர்மான் சேனா அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பிடதிமுன் திரண்டு “நித்தியானந்தா வெளியேறு” என கோஷமிட்டு போராட்டத்தில் குதித்தனர். அவருடையே பதாகைகளில் கரி பூசினர். இதனைத் தொடர்ந்து போலீஸார் வந்து கூட்டத்தைக் கலைத்து விட்டனர்.

http://news.vikatan.com/index.php?nid=11972#cmt241
http://vanakkammalaysia.com/permalink/4909.html

Thursday, January 10, 2013

Protest demanding Nityananda exiled


ನಿತ್ಯಾನಂದ ಗಡಿಪಾರಿಗೆ ಆಗ್ರಹಿಸಿ ಪ್ರತಿಭಟನೆ




ರಾಮನಗರ: ಬಿಡದಿ ಬಳಿಯ ಧ್ಯಾನಪೀಠದಲ್ಲಿ ನಿತ್ಯಾನಂದ ಇ¨ªಾನೆ ಎಂಬ ಸುಳಿವು ಕೊರೆಯುತ್ತಿದ್ದಂತೆ ಕನ್ನಡ ಪರ ಸಂಘಟನೆಗಳು ನಿತ್ಯಾನಂದನ ಗಡಿಪಾರಿಗೆ ಆಗ್ರಹಿಸಿ ಮತ್ತೆ ಪ್ರತಿಭಟನೆ ನಡೆಸಿ¨ªಾರೆ. ಬುಧವಾರ ಕರ್ನಾಟಕ ಜನಪರ ವೇದಿಕೆಯ ರಾಜಾÂಧ್ಯಕ್ಷ ರಮೇಶ್‌ ಗೌಡರ ನೇತೃತ್ವದಲ್ಲಿ ಕಾರ್ಯಕರ್ತರು ಧ್ಯಾನಪೀಠದ ಮುಂಭಾಗ ಧರಣಿ ಕುಳಿತು ನಿತ್ಯಾನಂದನ ಗಡಿಪಾರಿಗೆ ಆಗಹಿಸಿದರುÅ. ಆರತಿರಾವ್‌ ಮತ್ತು ರಂಜಿತ ಪ್ರಕರಣದ ನಂತರ ಈತನಿಂದಾಗಿ ರಾಜ್ಯಕ್ಕೆ ಕಳಂಕ ಬಂದಿದೆ. ಈತನನ್ನು ರಾಜ್ಯದಿಂದಲೇ ಹೊರದಬ್ಬುವಂತೆ ಅವರು ಸರ್ಕಾರವನ್ನು ಆಗ್ರಹಿಸಿ¨ªಾರೆ. ಮುಚ್ಚಳಿಕೆ ಧಿಕ್ಕರಿಸಿದ್ದಾನೆ, ಆಕ್ರೋಶ: ಕೆಲವು ತಿಂಗಳುಗಳ ಹಿಂದೆ ನಿತ್ಯಾನಂದ ಧ್ಯಾನಪೀಠದಲ್ಲಿ ಯಾವುದೇ ಕಾರ್ಯಕ್ರಮವನ್ನು ನಡೆಸುವುದಿಲ್ಲ ಎಂದು ಮುಚ್ಚಳಿಕೆ ಬರೆದುಕೊಟ್ಟಿದ್ದಾನೆ. ಆದರೂ ನಿನ್ನೆ ತಮಿಳುನಾಡಿನಿಂದ ಭಕ್ತರನ್ನು ಕರೆಸಿಕೊಂಡು ಧೀಕ್ಷೆ ಕೊಡುವ ಕಾರ್ಯಕ್ರಮ ನಡೆಸಿ¨ªಾನೆ. ತಮಿಳುನಾಡಿನಲ್ಲಿ ನಡೆಯಬೇಕಾದ ಈ ಕಾರ್ಯಕ್ರಮಕ್ಕೆ ಅಲ್ಲಿನ ಪೊಲೀಸರು ಅವಕಾಶ ನೀಡಿಲ್ಲ. ಹೀಗಾಗಿ ಆ ಭಕ್ತರನ್ನು ಬಿಡದಿಯ ಧ್ಯಾನಪೀಠಕ್ಕೆ ಕರೆಸಿಕೊಂಡಿರುವ ನಿತ್ಯಾನಂದ ಜಿÇÉಾಧಿಕಾರಿಗಳಿಗೆ ಬರದುಕೊಟ್ಟಿರುವ ಮುಚ್ಚಳಿಕೆಯನ್ನು ಧಿಕ್ಕರಿಸಿ¨ªಾನೆ ಎಂದು ರಮೇಶ್‌ ಗೌಡ ಆಕ್ರೋಶ ವ್ಯಕ್ತಪಡಿಸಿ¨ªಾರೆ. 2013ರ ಫೆಬ್ರವರಿ 1ರೊಳಗೆ ನಿತ್ಯಾನಂದ ರಾಜ್ಯವನ್ನು ತೊರೆಯಬೇಕು, ಜಿÇÉಾಡಳಿತವಾದರು ಆತನನ್ನು ಗಡಿಪಾರು ಮಾಡಬೇಕು. ಇಲ್ಲದಿದ್ದಲ್ಲಿ ಸಂಘಟನೆಯ ವತಿಯಿಂದ ಧ್ಯಾನಪೀಠಕ್ಕೆ ಮುತ್ತಿಗೆ ಹಾಕಿ ನಿತ್ಯಾನಂದನ್ನು ರಾಜ್ಯದಿಂದ ಓಡಿಸುವ ಕಾರ್ಯಕ್ರಮ ಹಮ್ಮಿಕೊಳ್ಳುವುದು ಅನಿವಾರ್ಯವಾಗುತ್ತದೆ. ಆಗ ಆಗುವ ಎÇÉಾ ಅನಾಹುತಗಳಿಗೂ ಜಿÇÉಾಡಳಿತ ಮತ್ತು ಪೊಲೀಸ್‌ ಇಲಾಖೆಯ ಕಾರಣವಾಗಲಿದೆ ಎಂದು ಅವರು ಎಚ್ಚರಿಸಿ¨ªಾರೆ. ಇದೇ ದಿನ ಕರ್ನಾಟಕ ನವ ನಿರ್ಮಾಣ ಸೇನೆಯ ಕಾರ್ಯಕರ್ತರು ಕೂಡ ನಿತ್ಯಾನಂದನ ಗಡಿಪಾರಿಗೆ ಆಗ್ರಹಿಸಿ ಪ್ರತಿಭಟನೆ ನಡೆಸಿ¨ªಾರೆ.

http://kannada.yahoo.com/%E0%B2%A8-%E0%B2%A4-%E0%B2%AF-%E0%B2%A8-%E0%B2%A6-%E0%B2%97%E0%B2%A1-%E0%B2%AA-%E0%B2%B0-085658358.html


பிடதி ஆசிரமத்தில் இருந்து வெளியேற வேண்டும்: நித்யானந்தாவுக்கு எதிராக கன்னட அமைப்பு போராட்டம்

Thursday, January 10, 2013, 14:52 [IST]


பெங்களூர்: பிடதி ஆசிரமத்திலிருந்து நித்தியானந்தா வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையுடன் கன்னட அமைப்பு போராட்டத்தில் குதித்துள்ளதால் மறுபடியும் நித்தியானந்தா வெளியேற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பெங்களூர் அருகே உள்ள பிடதியில் நித்யானந்தாவுக்கு ஆசிரமம் உள்ளது. மதுரை மடாதிபதியின் இளைய ஆதினமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதால் அவர் மதுரை வந்து பதவி ஏற்றார். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் அந்தப் பதவியிலிருந்து நித்தியானந்தாவைத் தூக்கினார் அருணகிரிநாதர். அதன் பிறகு 


திருவண்ணாமைலையிலும், பிடதியிலுமாக கேம்ப் மாறிக் கொண்டிருக்கிறார். நேற்று நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிடதி ஆசிரமத்திற்கு நித்தியானந்தா வந்தார். அவருடன் வழக்கம் போல ஆதரவாளர்களும் கும்பலாகப் போனார்கள். அங்கு அவர் அருளுரை என்ற பெயரில் தனது ஆதரவாளர்களிடையே பேசினார். இந்த நிலையில் நித்தியானந்தா வந்திருக்கிறார் என்ற தகவல் பரவியதும் கர்நாடக நவநிர்மான் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டு வந்து நித்தியானந்தாவே வெளியேறு என்று கூறி போராட்டத்தில் குதித்தனர். மேலும் அங்கிருந்த பேனரில் இருந்த நித்தியானந்தா படத்துக்கும் கரியைப் பூசி குதூகலித்தனர். கடைசியில் போலீஸார் வந்து அனைவரையும் அமைதிப்படுத்தி கலைந்துபோகச்  செய்தார்கள்.

http://tamil.oneindia.in/news/2013/01/10/india-kannada-organization-protests-against-nithyanantha-167749.html

http://www.maalaimalar.com/2013/01/10132044/Compaign-aganist-Nithyananda.html

Wednesday, January 9, 2013

NITHYANANDA IN TROUBLE AGAIN, PROTEST IN KARNATAKA


NITHYANANDA IN TROUBLE AGAIN - TV9 NEWS
 

 NITHYANANDA IN TROUBLE AGAIN - SUVARNA NEWS

PROTESTS AGAINST NITHYANANDA - SUVARNA NEWS

மதுரை ஆதினத்துக்கு எதிராக நித்தி வழக்கு

ஜனவரி 08,2013,17:55 IST

மதுரை ஆதீனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா மனு தாக்கல் செய்துள்ளார். நித்யானந்தாவுடன் இணைந்து ஏற்படுத்திய மதுரை ஆதீன அறக்கட்டளையை மதுரை ஆதீனம் கலைத்தார். அறக்கட்டளை அறக்கட்டளை கலைக்கப்பட்டது செல்லாது எனக்கூறி மதுரை கோர்ட்டில் நித்யானந்தா மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நித்யானந்தா மதுரை ஷெசன்ஸ் சப் கோர்ட்டில் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அறக்கட்டளையை அரசின் முன் அனுமதி பெற்றுத்தான் கலைக்க வேண்டும். ஆதீனம் முன் அனுமதியின்றி கலைத்துள்ளார். எனவே அறக்கட்டளை கலைக்கப்பட்டது செல்லாது என கூறியுள்ளார். இதனை விசாரித்த நீதிபதி நித்யானந்தா மனு தொடர்பாக வரும் 10ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி மதுரை ஆதீனத்துக்கு உத்தரவிட்டார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=622316

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=36377
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=89910

Monday, January 7, 2013

நித்தியானந்தாவை நிம்மதி இழக்கச் செய்து விட்டது போலீஸ்



. கெடுபிடி காரணமாக நித்தியானந்தா தனது பிறந்த நாள் விழா வை, திருவண்ணாமலை ஆசிரமத்திலேயே எளிமையாகக் கொண்டாடி முடித்ததில், சீடர் களுக்குப் பலத்த ஏமாற்றம்! உலகம் முழுவதும் ஆசிரமங்களை அமைத்தும் பிரபலம் ஆக முடியாத நித்யானந்தா, ஒரே ஒரு வீடியோவால் தலைமறைவு, தப்பி ஓட்டம், அதிரடிக் கைது என சர்ச்சைகளின் நாயகன் ஆனார். அடுத்து, மதுரை ஆதீனத்தோடு கைகோத்து தன்னை அடுத்த ஆதீனமாக அறிவிக்க வைத்தார். இதனால், மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்கு அடுக்கடுக்காகப் பல பிரச் னைகள் ஏற்பட, நித்தியைக் கை கழுவியதோடு அவரது சீடர்களையும் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றினார். அதைத் தொடர்ந்து தன் பூர்வீக இடமான திருவண்ணாமலை ஆசிரமத்தி​லேயே தங்கினார் நித்தி. அந்த ஆசிரமத்தையும் இந்து அறநிலையத் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர நோட்டீஸ் கொடுத்தனர். ஆடிப்போன நித்தி, மூத்த வழக் கறிஞர்கள் சிலருடன் ஆலோசனை நடத்தி, கோர்ட்டுக்குச் சென்றார். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவர் எங்கே இருக்கிறார் என்றே யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், 

கடந்த 6-ம் தேதி அவருடைய 36-வது அவதாரப் பெருநாள் விழாவை (அதாங்க, பிறந்த நாள் விழா!) பிரமாண்டமாகக் கொண்டாடத் திட்டம் போட்டிருந்தார். அதற்காக அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரே மேடை அமைக்கப்​பட்டு இருந்தது. ஒயிலாட்டம், புலியாட்டம், தாரை தப்பட்டை, கேரள செண்டை மேளம் முழங்க மாட வீதிகளில் உற்சவ மூர்த்திகளுடன் வீதி உலா, ஆசிரம வளாகத்தில் சத்சங்க விழா, பின்னர் பக்தர்​களுக்கு ஆசி வழங்குதல் என ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பிறந்த நாளான 6-ம் தேதி அதிகாலையில் நித்தியின் வருகைக்காக அண்ணாமலையார் கோயிலில் அவரது சீடர்கள் காத்திருந்தனர். நேரம் ஆனதே தவிர, அவர் வரவில்லை. 

பிறந்த நாள் தொடர்பான நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, ஆசிரமத்தை விட்டு வெளியே வராமல் சிறை வைக்கப்பட்டவர்போல் அங்கேயே இருந்தார். நித்தியின் பக்தர்கள் சிலரிடம் பேசியபோது, ''சுவாமியின் பிறந்த நாள் விழாவை எப்போதும் கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம். பிறந்த நாள் அன்று அதிகாலையிலேயே அண் ணாமலையார் கோயிலுக்கு சீடர்களுடன் வந்து அபிஷேகம் செய்வார். அதன்பின், அருண கிரிநாதர் சன்னதிக்குச் சென்று அங்கேயும் பூஜைகள் செய்வார். இந்த முறை அபிஷேகத்துக்கு சுவாமியுடன் ஐந்து பேரைதான் அனுமதிக்க முடியும் என்று கோயில் சார்பில் சொல்லப்பட்டது. இதனால் பிறந்த நாள் அதுவுமாக காலையிலேயே ஏன் வீண் பிரச்னை என்று கோயிலுக்கே வராமல் இருந்து விட்டார். அதற்குப் பதில், பெங்களூரு கருமாரியம்மன் ஆசிரமத்தின் மதுக்கர் சுவாமிகளுடன் அவரது முக்கியச் சீடர்கள் கோயிலுக்கு வந்து பூஜைகள் செய்துவிட்டுச் சென்றனர். மற்ற நிகழ்ச்சிகளையாவது சிறப்பாக நடத்த இருந்தோம். ஆனால், நகரில் எங்களது விழாவுக்கும் ஊர்வலத்துக்கும் அனுமதி தர போலீஸார் மறுத்து விட்டனர். 


இதனால், அந்த நிகழ்ச்சிகளையும் ரத்துசெய்துவிட்டு மாலையில் ஆசிரமத்தில் கொண்டாட இருந்தோம். அதற்காக ஆசிரமத்தில் பெரிய மேடை அமைத்து அலங்காரங்கள் செய்து இருந்தோம். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுவிடும் என்று போலீஸார் அதற்கும் அனுமதி தர மறுத்து விட்டனர். நித்தியானந்தரின் மெழுகு சிலை பொம்மைகளும் ஓரங்கட்டப்பட்டன. கடைசியில், சத்சங்க நிகழ்ச்சியை மட்டும் ஒரு பெரிய ஹாலில் நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு டெல்லியில் இருந்து ஸ்ரீ ஸ்ரீ நாராயண் சாய் சுவாமிகள் வந்து, நித்தியானந்​தரை வாழ்த்திச் சென்றார். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அங்கு இருந்தபடியே சுவாமி ஆசி வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள் பெரிய திரைகளில் ஒளிபரப்பு செய்யப்​பட்டது. பல தடைகளை மீறி, சுவாமி விழாவை நடத்திக் காட்டினார்'' என்றனர். இந்த விழாவுக்காக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஆட் கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர். அவர்களுக்காக நகரில் லாட்ஜ், திருமண மண்டபங்கள் புக் செய்யப்பட்டன. சளைக் காமல் பேட்டி கொடுக்கும் நித்தி, இந்த முறை மீடியாவையைச் சந்திப்பதையே தவிர்த்தார். நித்தி விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து எஸ்.பி. முத்தரசியிடம் கேட்டதற்கு, ''கோயிலைச் சுற்றி யாரும் ஊர்வலம் வரக் கூடாது என் பதால் அனுமதி மறுக்கப்பட்டதே தவிர, அவர்களின் விழாவுக்கு நாங்கள் எந்தத் தடையும் விதிக்கவில்லை'' என்றார்

http://navakirinilavarai.blogspot.in/2013/01/blog-post_8055.html

Police Deny Permission for Nithyananda to Celebrate His Birthday in Public Premises


Police Deny Permission for Nithyananda to Celebrate His Birthday in Public Premises - போலீஸ் கண்காணிப்பு நித்யானந்தா பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு தடை


00:25:17

Monday

2013-01-07






Late in the Night of 5th, Nithya was informed by the local Thruvannamalai police that he is not allowed to enter the main Shiva temple on the 6th morning as per his schedule. Nithya's devotees had erected a huge temporary stage in front of the temple for Nithya to address the gathering and give his birthday message. Late on 5th night the police dismantled the stage and removed the audio system and warned Nithya that he would be arrested if he conducted a public address. So his 6th morning programme of visiting the Main Shiva temple in Thruvannamalai and addressing the devotees and giving his birthday message was cancelled. He never visited the temple. This is the first time perhaps he could not visit the temple on his birthday, from the time he became a so called Swami. 

His evening programme in his Thruvannamalai Ashram also turned out to be a bigger fiasco. He erected a huge temporary stage in the open grounds and decked it up with floral decorations. Dinner for devotees was arranged in an adjoining school ground. His schedule was: At 4.30 PM pada puja and arati was to be performed in the Ananda Sabha by his fully brain washed devotees like Aiyya, Rishi and other fools. At 5.30PM he was supposed to be on the stage to be honored by his devotees. Sat sang and message was for 6.00PM to be followed by individual darshan and dinner. His brainwashed organizers from nearby villages arranged for about 10 bus loads of poor villagers. The organizers paid Rs500.00 per person with free mala, meals and transport. It was a paid holiday trip for the villagers. Nithya wants crowds for advertisement and is willing to pay for them. This is a practice followed by political parties in India. Sad but this is the truth.

 By about 3.00PM a crowd of about 2000 was managed by Nithya's organizers. Most of the crowd were villagers who were paid to attend the programme. The Police about 200 personnel in all arrived in 4 vans at around 3.30PM and surrounded the Ashram. The inspector went inside and told Nithya that he was not permitted to take the stage and address a public gathering. He could only give darshan to his devotees in a room/ hall and accept pada puja. Once the police realized that the majority of the so called devotees were a paid crowd, they promptly dispersed them and sent them back to their villages. Nithya was warned not to take the stage and address the crowd. He promptly cancelled the evening program. As I write this the police are still posted in the Ashram. Tomorrow he has announced an NSP program in nearby Salem District. We need to see if he will take the program as announced or will cancel the same.


போலீஸ் கண்காணிப்பு


நித்யானந்தா பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு தடை




திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நித்யானந்தாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். தொடர்ந்து அவரது நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. பல்வேறு சர்ச்சைகள், வழக்குகளில் சிக்கி தலைமறைவாக வெளிநாடுகளில் இருந்த நித்யானந்தா, தனது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை வந்தார். இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என தெரிவித்து, பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக் க மறுத்துவிட்டனர். மே லும், மாட வீதியில் ஊர்வலமாக செல்லக்கூடாது, 

கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரமத்தில் மேடை அமைத்து பிரசங்கம் செய் யவும், ஒலிபெருக்கிகளை பயன்படுத்தவும் கூடாது என போலீசார் தடை விதித்தனர். மாட வீதியில் மேடை அமைக்கும் முயற்சியையும் இரவோடு இரவாக போலீசார் தடுத்தனர். மேலும், கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், அங்கு எவ்வித விதிமீறல் நடவடிக்கையிலும் நித்யானந்தா ஈடுபடக்கூடாது என ஏற்கனவே திருவண்ணாமலை தாலுகா போலீசில் அறநிலையத்துறை உதவி ஆணையர் புகார் அளித்திருக்கிறார். 

அதனால், விதிமீறல்கள் நடைபெறுகிறதா, கோர்ட் உத்தரவு மீறப்படுகிறதா என அறநிலையத் துறையினரும், போலீசாரும் நேற்று ஆசிரமப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  இதனால் அதிர்ச்சிய டைந்த நித்யானந்தா,  பிறந்த நாள் கொண்டாட்டத் தை தவிர்த்தார். மேலும், திட்டமிட்டபடி நேற்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலுக்கும் அவர் வரவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போ டப்பட்டிருந்தது. 

கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான மே டைக்கும் நித்யானந்தா வரவில்லை. ஆசிரமத்தை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட சீடர்கள், பரபரப்பான சூழ்நிலையால் உடனடியாக திரும்பிச் சென்றனர்.


http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=36180

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=621116

Sunday, January 6, 2013

எச்சரிக்கை செய்த கோயில் நிர்வாகம் மற்றும் போலீஸ்! அதிர்ச்சி அடைந்த நித்தி ஆசிரமத்தில் புலம்பல்!


 


திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நித்யானந்தா பிறந்த நாள் விழா நடத்த போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்
மேலும் அறநிலைய துறை எதிர்ப்பால் கோயிலுக்கு வருவதை தவிர்த்துவிட்டு தனது ஆசிரமத்திலேயே பிரசங்கம் நடத்தினார். பெங்களூர் பிடதியில் தலைமை ஆசிரமத்தை வைத்து நடத்தி வருபவர் நித்யானந்தா.  இவர் பல்வேறு இடங்களில் ஆசிரமங்கள் வைத்துள்ளார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்யானந்தா போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
 ஒவ்வொரு ஆண்டும் நித்யானந்தா தனது பிறந்தநாளை திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தில் கொண்டாடுவது வழக்கம். அதன்படி இன்று காலை தி.மலை அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு தனது சீடர்களுடன் மாட வீதியில் ஊர்வலமாக செல்வது, அங்கேயே மேடை அமைத்து பிரசங்கம் செய்யவும் திட்டமிட்டிருந்தார். இதற்காக போலீசில் அவரது சீடர்கள் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், மாட வீதியில் ஊர்வலம் நடத்தவும், மேடை அமைத்து பிரசங்கம் செய்வதற்கும் போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர்.
 இதற்கிடையில் நேற்று நள்ளிரவு மாட வீதியில் பந்தல் அமைக்கும் பணி நடந்தது. இதையறிந்த போலீசார் அங்கு சென்று அப்பணியை தடுத்து நிறுத்தினர். அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. நித்யானந்தா இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் திட்டத்தையும் கைவிட்டார். தனது அறையிலேயே பிரசங்கம் நடத்தினர். இதில் அவரது சீடர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நித்யானந்தா பிறந்த நாள் விழா நடத்த போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். 
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=36150

நித்தியானந்தா ‘திரு அவதார திருநாளில்’ திருவண்ணாமலை மாட வீதியில் திருதிரு!


இன்று (06.01.2012) பிறந்த நாள் காணும் நித்தியானந்தா எப்போதும்போல் திருவண்ணாமலையில் பந்தா காட்ட நினைத்தார். இன்று காலை அண்ணாமலையால் கோவிலுக்குள் பக்தர்களுடன் வந்து வணங்கிவிட்டு, பின்னர் தன்னுடைய உருவ சிலையை கோயில் மாட வீதியில் வலம் வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை ஏற்பாடு செய்திருந்தார்.

இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், கோயில் நிர்வாகம் கோவிலுக்குள் ஐந்து பேரை மட்டுமே அனுமதிப்போம். கோயிலுக்குள் கூட்டம் போடுவதோ, பேசுவதோ இருந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இதனால் கோவிலுக்குள் வருவதை தவிர்த்துவிட்டார் நித்தியானந்தா.

தொடர்ந்து மாட வீதியில் வலம் வருவதற்கு போலீசாரிடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால் நித்தியானந்தா அனுமதி வாங்காததால், கோயிலுக்கு எதிரே அவரது சார்பில் போடப்பட்டிருந்த பந்தலை போலீசார் பிரித்து போட்டனர். இதனால் அதிர்ச்சியான நித்தியானந்தா அனைத்து நிகழ்ச்சிகளையும் தனது ஆசிரமத்துக்கு மாற்றிக்கொண்டார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=89761

http://viruvirupu.com/2013/01/06/43384/



மடத்துக்குள் நுழைய மாட்டோம்: மதுரை ஆதீனம் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்- நித்யானந்தா கோர்ட்டில் மனு

 -

மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை அருணகிரி நாதர் நியமித்தார். இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இளைய ஆதீனம் பதவியி லிருந்து நித்யானந்தாவை நீக்கி அருணகிரி நாதர் உத்தரவிட்டார். 

இந்நிலையில் மதுரை ஆதீனம் மடத்திற்குள் நித்யானந்தா அவரது சீடர்களை நுழைய தடை விதிக்க வேண்டும் என்று சப்-கோர்ட்டில் அருணகிரி நாதர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவில் நித்யானந்தா நியமனத்தை ரத்து செய்து விட்டேன். அவர் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டபோதும் ஆதீனம் சொத்துக்களை நிர்வகிக்க நானும், அவரும் சேர்ந்து ஏற்படுத்திய அறக்கட்டளை கலைக்கப்பட்டு விட்டது. எனவே அறக்கட்டளை கலைக்கப்பட்டதை பதிவு செய்ய சார்பதிவாளருக்கு உத்தர விட வேண்டும். 

மேலும் மடத்துக்குள் நித்யானந்தாவும் அவரது ஆட்களும் நுழைய தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவுக்கு நித்யானந்தா தரப்பில் பதில் தெரிவிக்க அவகாசம் கோரப்பட்டு வந்த நிலையில் அவரது தரப்பில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் என்னை இளைய ஆதீனமாக நியமித்தது மரபுப்படி சரியானது தான். ஆதீன மடத்துக்கு நானும், எனது ஆதரவாளர்களும் நுழைய மாட்டோம். எந்த தொந்தரவும் எங்களால் ஏற்படாது. எனவே மதுரை ஆதீனத்தின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த மனுவுக்கு பதில் மனுத்தாக்கல் செய்யும்படி ஆதீனம் தரப்பிற்கு நீதிபதி குருவையா உத்தரவிட்டு வழக்கை வருகிற 8-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.


http://www.maalaimalar.com/2013/01/06140343/madurai-aadheenam-petition-to.html

"நித்தி' பிறந்த நாள் ஆடம்பரமாக கொண்டாட முடிவு

ஜனவரி 05,2013,02:07 IST


திருவண்ணாமலை: நித்தியானந்ததா இந்தாண்டு பிறந்த நாளை சிறப்பாக பக்தர்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளார். அவரது நேரடி கண்காணிப்பில் விழா ஏற்பாடு நடந்து வருவதால், திருவண்ணாமலை தியான பீடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நித்தியானந்தாவுக்கு, 2012ம் ஆண்டு மிகவும் சோதனையான ஆண்டாக அமைந்தது. அவர் பல்வேறு இன்னல்களை சந்தித்து, மிகுந்து மன உளைச்சலுக்கு ஆளாகினார். இதில், கடந்தாண்டு ஏப்ரல், 29ம் தேதி, 203வது மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டபோது, மிகுந்து மகிழ்ச்சியில் திளைத்த போதும், மற்றொருபுறம் ஹிந்து அமைப்புகள் , பிற ஆதீனம், பிற மடத்தை சேர்ந்தவர்களின் எதிர்ப்பு போன்றவை இவரது நிம்மதியை பறித்தது.

ஏற்கனவே நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் சர்ச்சை ஓயாத நிலையில், இளைய ஆதீன பொறுப்பு ஏற்றதும் அதற்கு வந்த எதிர்ப்பாளர்களையும் சமாளிக்க முடியாத நிலைஏற்பட்டது. பிடதி ஆசிரமத்தில் நிருபர்களுடன் மோதல் ஏற்பட்டு, கடந்த ஜூன், 12ம் தேதி பிடதி ஆஸ்ரமம் சீல் வைக்கப்பட்டு, மறுநாள் கர்நாடகா போலீஸாரால், நித்யானந்தா கைது செய்யப்பட்டதால், அடுத்த சறுக்கல் ஏற்பட்டது,
நேரடி தலையீட்டால் பரபரப்பு :

அக்டோபர், 16ம் தேதி, "மதுரை ஆதீனத்தின் இளையமடாதிபதியாக நியமித்தது செல்லாது' என, தமிழக அரசு அறிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனால், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நித்யானந்தாவை இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து நீக்கினார். இதனால், கடந்தாண்டு இவருக்கு அடிமேல் அடியாக, ஆண்டு முழுவதும் நித்யானந்தாவுக்கு சோதனையாக அமைந்தது. இவரது சீடர்கள் சிலர் விரக்திக்கு ஆளாகினர். சிலர் நித்யானந்தாவின் சீடர் என சொல்வதை தவிர்த்து அவரிடமிருந்து விலகி செல்ல துவங்கினர். அதனால், அவருக்கு கடந்த காலங்களை போல் சீடர்கள் கூட்டம் இல்லாமல் குறைந்து விட்டனர். இதனால், அவரது சீடர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்து மீண்டும் தன் பழைய இமேஜை கொண்டு வர அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.அதற்காக, 2013ம் ஆண்டில் அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார். அவரது பிறந்த நாள் நட்சத்திரம் நாளை வருவதால் அவரது, 36வது பிறந்தநாளை, 36வது அவதார பெருநாளாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தியான பீடத்தில் கொண்டாட முடிவு செய்துள்ளார். 
இதற்காக தியான பீடத்தில் பிரமாண்டமாக பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது, அன்னதானம் வழங்க, அங்கு போதுமான இடம் இல்லாததால், அவரது தியான பீடத்தின் எதிரில் உள்ள சீனுவாசா உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 
எப்போதும் தியான பீடத்தில் எந்த விழா நடந்தாலும், அவரது சீடர்களே ஏற்பாடு செய்வது வழக்கம், ஆனால், இந்த முறை விழா சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக, மூன்று நாட்களுக்கு முன்னதாகவே திருவண்ணாமலைக்கு வந்துவிட்ட நித்தியானந்தா, விழா ஏற்பாடுகளை தன் நேரடி பார்வையில் செய்து வருகிறார். அவரது ஆஸ்ரமத்திற்கு வெளியூரிலிருந்து, சீடர்கள் வருகை தர துவங்கி விட்டனர். 
இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் ஹிந்து அற நிலையத்துறை அதிகாரிகளும், போலீஸாரும் தியான பீடத்தில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=620006

Thursday, January 3, 2013

நித்தியானந்தா மீது கொலை மிரட்டல் புகார்

பதிவு செய்த நேரம்: 3-1-2013 14:19

சென்னை: நித்தியானந்தா கொலை மிரட்டல் விடுத்ததாக நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யிடம் புகர் அளிக்கப்பட்டுள்ளது.   திருச்செங்கோடு ஜனனி இன்போடெக் நிறுவன அதிபர் செங்கோட்டுவேல் புகார் மனு அளித்துள்ளார். வர்த்தக ஒப்பந்தப்படி தமக்கு நித்தியானந்தா ரூ.35 லட்சம் தரவேண்டியுள்ளதாக புகாரில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவேண்டிய ரூ.35 லட்சத்தை கேட்ட தம்மை செல்போனில் நித்தியானந்தா மிரட்டியதாக குற்றச்சாட்டியுள்ளர்.

 http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=35815

Nithyananda hiding in his ashram, claim Kannada activists



The Ramanagaram district police on Wednesday arrested 20 members of the Karnataka Nava Nirmana Sene, who were staging a protest near the Nithyananda Dhyanapeetam in Bidadi demanding that the self-styled godman be sent out of the State.
Tension prevailed for a while as the protesters tried to force their way into the ashram.
They claimed Nithyananda, who was accused in a sex scandal, returned to the ashram from Madurai and was staying “secretly” at the ashram.
He is facing criminal charges, including rape, and is out on bail. The State government, instead of initiating action against him, is providing security to the ashram, the protesters claimed.
Held
The police arrested sene leader Bhima Shankar Patil and 19 others and released them later.

 http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/nithyananda-hiding-in-his-ashram-claim-kannada-activists/article4267783.ece