Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Wednesday, August 31, 2011

SPIRITUAL FRAUD


We request the Tamil readers to post (as comment) an English translation of this article, for the benefit of the non-Tamil readers.





ட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊழலை விசாரிக்கவும் உடனடியாகத் தண்டனையை நிறைவேற்றவும் வலியுறுத்தி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. அதிகாரத்தி லிருப்பவர்களுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு அவர்களே அதிர்ந்து போகுமளவுக்கு ஊழல் செய்பவர்களும் தப்ப முடியாதபடி ஊழல் ஒழிப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அதற்கொரு உதாரணம், நித்யானந்தா.

தனது பக்தர்கள் வழங்கும் நிதியெல்லாம் தன்னுடைய ஆசிரமத்தின் ஆன்மிகப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும், இது லாபநோக்கமில்லாத (non#profitable) நிறுவனம் என் றும் சொல்லி, இந்தியாவிலும் அமெரிக்காவிலும் தங்களுடைய வருமா னத்திற்கு வரிவிலக்கு பெற்றிருக்கிறது நித்யானந்தா தரப்பு. பக்தர்கள் தரும் நிதியை ஆசிரமக் கணக்கில் மட்டுமே சேர்ப்பதாகவும், தன் பெயரில் வங்கிக் கணக்கு எதுவும் இல்லை என்றும் நித்யானந்தா சொல்லி வருகிறார். அது 100% பொய் என்பது ஆவணங்கள் மூலமாகவே நிரூபணமாகியிருக்கிறது.

நித்யானந்தாவின் ஆசிரமம் கர்நாடக மாநிலம் பிடதி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கிளையில் நித்யானந்தாவுக்கு பர்சனல் அக்கவுண்ட் உண்டு. ஸ்ரீபரமஹம்ச நித்யானந்தா என்ற பெயரில் உள்ள அவருடைய அக்கவுண்ட்டின் நம்பர் 008401004313 என்பதாகும். இந்தக் கணக்குப் பெயரளவுக்குத் தொடங்கப்பட்டதல்ல. பேரளவுக்கு பணப்புழக்கம் நடந்துள்ளது.

2006ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ந் தேதி முதல் 2010 ஏப்ரல் 5-ந் தேதி வரையிலான ஏறத்தாழ 4 ஆண்டு காலத் தில் பிடதி ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கிளையில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் பணத் தின் மதிப்பு 6 மில்லியன் 370ஆயிரத்து 850 அமெரிக்க டாலர். இதன் இந்திய மதிப்பு 32கோடியே 10 லட்சத்து 92ஆயிரத்து 735 ரூபாய் 67 பைசா. (நித்யானந்தாவின் வங்கிக் கணக்கு பற்றிய நயா பைசா சுத்தமான விவரத்தை ஆதாரத்துடன் காண்க)

மலைக்க வைக்கும் இந்த 32 கோடியே சொச்ச ரூபாயை அவர் அமெரிக்காவிலுள்ள ஆசிரமத்தின் கணக்கிலிருந்து பிடதியில் உள்ள தன் பெயரிலான கணக்கிற்குக் கொண்டு வந் துள்ளார். ஆசிரமத்தின் வளர்ச்சிக்காக வும் ஆன்மீக சேவைக்காகவும் நிதி திரட்டுகிறேன் என்று இந்தியாவில் உள்ள நடுத்தரவர்க்கத்தின் உயர் சம் பளக்காரர்கள், பெரிய தொழிலதிபர்கள், திரையுலகைச் சார்ந்தவர்கள் எனப் பலரிடமும் காணிக்கை பெறுவதுடன், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிட மும், மனஅமைதிக்காக ஆன்மீகத்தை நாடும் அமெரிக்கர்களிடமும் மில்லியன் களில் டாலரையும் அவர்களுக்கு சொந்தமான இடங்களையும் ஆசி ரமத்திற்கென்று வாங்கி, அதனைத் தன் பெயரில் மாற்றிக்கொள்வதுதான் நித்யா னந்தாவின் வழக்கம் என்கிறார்கள் அமெரிக்காவில் அவரிடம் ஏமாந்த பக்தர்கள்.


ஆன்மிகப் பணிகளுக்கான நிதியை வசூலிக்கும் நித்யானந்தா பவுன்டேஷன் என்ற லாபநோக்கில்லாத நிறுவனத்தி லிருந்து, நித்யானந்தா எக்ஸ்போர்ட் அண்ட் இம்ப்போர்ட் என்ற நிறுவனத் திற்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்தை உருவாக்கி அதனை நிர்வகித்து வருபவர் நித்யானந்தாவின் சகோதரர் ஆவார். இந்த நிறுவனம் மூலமாக சிலைகளை ஏற்றுமதி செய்வது -விற்பனை செய்வது போன்ற வேலைகள் நடந்துள்ளன.

உதாரணத்திற்கு, 2010 ஏப்ரல் 17 அன்று நித்யானந்தா தியானபீடம் ஆலயம் மற்றும் கலாச்சார மையம் என்ற நிறுவனத்திற்கு நித்யானந்தா ஏற்றுமதி-இறக்குமதி என்ற நிறுவனத்தின் சார்பில் 5 லட்சத்து 50ஆயிரத்து 386.82 டாலருக்கு சிலைகள் வழங்கப்பட்டதாக இன்வாய்ஸ் போடப்பட்டுள்ளது. ஆனால், அந்த சிலைகளின் மொத்த மதிப்பு 1 லட்சம் டாலரைக்கூடத் தாண்டாது என்று நித்யானந்தா பவுண்டேஷன் மீதும் மா நித்ய சதானந்தா மற்றும் சிவா வல்லபஹனேனி ஆகியோர் மீதும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில உயர்நீதிமன்றத்தில் (சுப்பீரியர் கோர்ட்) பொபட்லால் கே.சாவ்லா என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில் தெரிவித் துள்ளார். (காண்க : பொபட்லால் தாக்கல் செய்துள்ள மனு)

தன்னுடைய சொத்துகளை நித்யானந்தா தரப்பிலிருந்து மீட்பதற்காகப் போராடும் இவர், தனது சார் பிலும் தன்னைப்போல பாதிக்கப்பட்டவர்களின் சார்பிலும் 2010 ஜூலை 26-ந் தேதியன்று இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அமெரிக் காவில் மட்டும் பிளிஸ் இன் வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன், லைஃப் ப்ளிஸ் பவுண்டேஷன், நித்யானந்தா அன்னா மந்திர், நித்யானந்தா ஸ்ப்ரிட்ச்சுவல் ஹீலிங் ரிசர்ச் பவுண்டேஷன், நித்யானந்தா யோகா அண்ட் மெடிட்டேஷன் யுனிவர்சிட்டி, நித்யானந்தா யோகா பவுண்டேஷன், ஆனந்தா பிசி னஸ் சொல் யூஷன்ஸ், ஆனந்தா கன்சல்ட் டிங், நித்யானந்தா இன்வெஸ்ட்மெண்ட்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களை நித்யானாந்தா பவுன்டேஷன் வெவ்வேறு பெயர்களில் நடத்தி வருகிறது. இவற்றில் பலவற்றுக்கு கலி ஃபோர்னியா கார்ப்பரேஷன் பதிவு எண் உண்டு. சிலவற்றுக்கு பதிவு எண் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விவரங்களையும் கலிபோர்னியா சுப்பீரியர் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருக்கும் பொபட்லால் கே. சாவ்லா, அமெரிக்காவிலேயே உள்ள நித்யானந்தா சம்பந்தப்பட்ட மற்ற நிறுவனங்களும் கனடா நாட்டில் உள்ள நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.


பவுண்டேஷனுக்கு பல்வேறு வழிகளில் நிதியைத் திரட்டி அவற்றை ஆசிரமத்தின் சார்பிலான லாப நோக்கமில்லாத நிறுவனங்களின் கணக்கில் போட்டு, பிறகு கடவுள் சிலைகள் வாங்கி யது உள்ளிட்ட பலவித கணக்குகளைக் காட்டி, அதற்காகக் கொடுத்ததாக ஆவணங்களை தயார் செய்து, அந்தப் பணத்தை நித்யானந்தாவின் சகோதரர் நடத்தும் எக்ஸ்போர்ட்-இம்ப்போர்ட் கம்பெனிக்கு மாற்றி, சொந்த லாபம் அடைந்துள்ளார் நித்யானந்தா என்றும் பொபட்லால் குற்றம்சாட்டியுள்ளார்.
பிடதியில் உள்ள நித்யா னந்தா பவுன்டே ஷனுக் கான கட்டிடத்தை சிறப்பாகக் கட்டுவதற்காக அமெரிக்கா வில் உள்ள பக்தர்களிடம் பல வழிகளிலும் நிதி திரட்டப் பட்டது. (பொபட்லால் உள் ளிட்டவர்களும் நிதியளித்துள்ளனர்) பவுண் டேஷன் பெயரில் நிதியைத் திரட்டினாலும், பிடதியில் கட்டப்பட்ட கட்டடம் நித்யா னந்தாவின் சொந்தப் பெயரில் கட்டப் பட்டுள்ளது என்பதும் பொபட்லாலின் குற்றச்சாட்டுகளின் முக்கியமானதாகும். ஆன்மீக விழாக்களில் மட்டுமே பங்குபெறு வதாக அனுமதி பெற்று அமெரிக்காவுக்கு வந்த நித்யானந்தா அங்கு மிகப்பெரிய அளவில் நிதி திரட்டியது பற்றியும் பொபட்லால் வெளிப்படுத்தியுள்ளார்.

பொய்யானத் தகவலைக்கூறி அனுமதி பெற்ற நித்யானந்தா, அமெரிக்காவில் கொடுத்த சில டாக்குமெண்ட்டுகளில் தன்னுடைய பிறந்த தேதி 1.1.1978 என்று கொடுத்துள்ளார். அவருடைய பாஸ் போர்ட்டிலோ நித்யானந்தாவின் பிறந்ததேதி 13.3.1977 என்று பதிவாகியுள்ளது. தவறான ஆவணங்கள், பொய்யான தகவல்கள் ஆகியவற்றைக் கூறி அமெரிக்காவில் ஆன்மீக நிகழ்ச்சிகள் என்ற பெயரில் பெருமளவில் நிதி திரட்டிய நித்யா னந்தா அவற்றை அங்கேயே முதலீடு செய்வதற்காக 2007 நவம்பர் 26-ல் நித்யானந்தா கேபிட்டல் மேனேஜ்மெண்ட் இன்க் என்ற நிறுவனத்தையும், அதுபோல நித்யானந்தா இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்ட் என்ற நிறுவனத்தையும் 2008 ஏப்ரல் 8-ல் நித்யா அட்வைசர்ஸ் என்ற நிறுவனத்தையும் ஆரம்பித்திருக்கிறார். ஆசிரமத்தில் உறுப்பினராகிறவர்களுக்கு கொடுக்கப்படும் ஒப்பந்தப் பத்திரத்தில், செக்ஸ் மற்றும் பாலியல் சம்பந்தப்பட்ட பொருட்கள் வழங்குவதும் ஆன்மீகச் செயல்பாட்டில் அடக்கம் என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும் பொபட்லால் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்மிகத்தின் பெயரால் நிறுவனம் நடத்துவதாகக் காட்டிக்கொண்டு, அதற்கு வரும் அபரிமிதமான நிதிக்கு வரிவிலக்கும் பெற்று, அந்த நிதியை இன்வெஸ்ட்மெண்ட்ஸ், எக்ஸ்போர்ட் அண்ட் இம்போர்ட், அட்வைசர்ஸ், கன்சல்டண்ட் என்று லாபம் தரும் நிறுவனங்களுக்கும் தனது சொந்த பெயரிலான அக்கவுண்ட்டுக்கும் மாற்றி, இந்திய-அமெரிக்க அரசாங்கத்தை ஏமாற்றி பல கோடிகளைக் குவித்துள்ளார் நித்யானந்தா. இவை போக ஷேர் மார்க்கெட்டிலும் முதலீடு செய்யப் பட்டுள்ளது. சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலும் வியாபாரத் தொடர்பு உள்ளது.

அன்னா ஹசாரே போன்றவர்கள் வலியுறுத்தும் ஜன்லோக்பால் சட்டத்தில்கூட கண்டறிய முடியாத ஊழல் களை செய்து, அதன் மூலம் கிடைத்துள்ள பல கோடிகளை கையில் வைத்துக்கொண்டு சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து மிரட்டிக்கொண்டிருக்கிறார் நித்யானந்தா. பணம் பாதாளம் மட்டும் பாயும் என்று அவரது தரப்பு ஆட்டம் போட்டு வருகிறது. நீதி நிதானமாக எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது. பாதாளத்தில் நுழைந்தாலும் ஆகாயத்தில் புகுந்தாலும் அக்கிரமக்காரர்களை நிச்சயம் தண்டித்தே தீருவான் நீதிதேவன்.


http://www.nakkheeran.in/

"So Called Healer" Nithyananda Rushed to Hospital for Some Healing?!!!




Swami Nithyananda has reportedly suffering from chest pain and has been admitted to Narayana Hrudayala, Hosur road Bangalore. It is for the second time chest pain is bothering the swamiji.

Credits: OneIndia Kannada


Apparently, Nithyananda's healing powers can work only on those who have utter faith in him and lot of "good Karma"!!! We wonder if he had to be rushed to hospital because his own healing powers failed to work on him!!! ;-)

Saturday, August 6, 2011

RANJITHA; COMPLAINT PROCEEDINGS STAYED

Proceedings stayed
The High Court on Thursday stayed further court proceedings against Lenin Karuppan, the complainant in the sex scandal involving self-styled godman Nithyananda.

A lower court in Ramanagara had taken cognisance of offence against Lenin and others, based on the private compliant filed by actor Ranjitha, accusing the former car driver of Nithyananda, and his two associates, of extortion and acts intended to insult the modesty of women.

The three accused, as per the private compliant by the actor, are charged under the Section 354, 384, 506 and 509 of the IPC. Lenin had approached the high court challenging the action of the Ramanagara court. 
http://www.deccanherald.com/content/181735/clear-buildings-swds-month-hc.html

Friday, August 5, 2011

Triumph of Truth

The honorable High Court of Karnataka has granted an Interim "Stay Order" against the private complaint filed by actor Smt. Ranjitha against Dharmananda (alias Lenin Karuppan) and others. Earlier the Ramnagara Court issued a non-bailable warrant for Dharmananda (Lenin Karuppan).

நித்யானந்தாவை மக்கள் புறக்கணிக்க வேண்டும்

சேலம் : தவறான அறிவுரைகள் வழங்கி வரும் நித்யானந்தாவை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நாளை கல்வி உரிமை மீட்பு மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளது.

மாநாட்டில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தவும், சமச்சீர் கல்வியை உடனடியாக நடைமுறை படுத்தவும், தனியார் பள்ளி அருகே உள்ள ஏழை குழந்தைகளுக்கு 25 % இடங்களை அப்பள்ளிகள் ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படும்.

 குற்ற வழக்கில் கைதான நித்யானந்தர் மக்களை தவறான பாதைக்கு திருப்புகிறார். இவரின் உபதேசங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சாமியார்களை அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். . இவ்வாறு கொளத்தூர் மணி கூறினார்.

http://wap.dinakaran.com/News_detail_2011.asp?Nid=2695

Thursday, August 4, 2011

குதிப்பதுதான் குண்டலினியா?

திருவண்ணாமலையில் ராஜசேகரன் என்ற ஒரு இளைஞன். சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி காவிகளுடன் அலைந்து திரிந்தான். அந்தக் காவிகளின் எல்லாப் பழக்கங்களும் தொற்றிக்கொண்டு நான்தான் ரமணரின் அவதாரம் என்று கூறிக்கொண்டு நித்யானந்தா என்று புதுப்பெயர் சூடிக்கொண்டான்; ஆசிரமம் அமைத்தான். சாமியார் தொழில்தான் எப்போதும் நல்லாக் கல்லாக் கட்டும் தொழில் ஆயிற்றே. கல்லாப் பெட்டி நிரம்பியது. பக்தி வியாபாரம் படு ஜோர். காலத்திற்குத் தகுந்தவாறு நவீனத் தொழில் நுட்பங்களைக் கையாண்டு பக்த கோடிகளைச் சேர்த்துக் கொண்டார். பேச்சில் வல்லவராகப் பேசப்பட்டார். அப்படிப் பேச இவரே பணம் கொடுத்து பலரையும் கிளப்பிவிட்டார். புத்தகங்கள் போட்டார். பல எழுத்து வியாபாரிகள் பணம் பெற்றுக்கொண்டு எழுதிக் கொடுத்ததையெல்லாம் இவரது பெயரிலேயே வெளியிட்டுக் கொண்டார். கதவைத் திற காற்று வரும் என்று முன்னணி ஏட்டில் தொடரும் வந்தது.

உடல் உழைப்பில்லாதவர்கள், மனம் சோர்ந்தவர்கள், குடும்பத்தோடு, குழந்தைகளோடு வீட்டில் சரியாகப் பேசாதவர்கள், தனிமையில் இருப்பவர்கள், கணவனை அல்லது மனைவியை விட்டுப் பிரிந்தவர்கள், முதியவர்கள் என வாழ்க்கையை ரசிக்கத் தெரியாத ரகத்தினர், சமூகச் சிந்தனை இல்லாதவர்கள் இந்த மாதிரிச் சாமியார்களைச் சரணடைவதுதான் சில ஆண்டுகளாக ஒரு பேஷன். அந்த பேஷன் இந்தச் சாமியாருக்கும் கை கொடுக்க கூட்டம் கூடியது. பணமும் சேர்ந்தது. கீதா உபதேசத்திலிருந்து பிரம்மச்சரியம் வரை வாய் கிழியப் பேசுவது நித்யானந்தாவின் சிறப்பு. கூடவே தியானம், யோகம் போன்ற எளிதான உடற்பயிற்சிகளும் சொல்லித் தரப்பட்டன. ஊர் ஊருக்கு அமைப்புகள் உருவாயின. உபதேசங்களுக்குப் பயணமும் சென்றார். சகல வசதிகளுடன் வாழ்க்கை முறை அமைந்தது. மனிதனின் உடல் தேவையும் ஏற்பட்டது சாமியாருக்கு.
ஒரு மார்க்கெட் இழந்த நடிகை ஆசிரமத்தில் அடைக்கலமானார். அவரே சாமியாருக்குப் பணிவிடைகள் செய்தார். இது நித்யானந்தாவே  சொல்லிய வாக்குமூலம். ஆசிரமத்துக்குள் சிக்கல் உருவாக சாமியாரின் அந்தரங்கம் சி. டி.யில் பதிவாகி இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக ஒளிபரப்பானது. நக்கீரன் பத்திரிகையில் நித்யானந்தாவின் உண்மை முகத்தை அவரது சீடர் லெனின் கருப்பன் என்ற தர்மானந்தா வெளிக்கொணர்ந்தார்.
ஒரு ஆணுக்கு ஒரு பெண் துணை தேவைதான். அதனை உலகம் ஏற்றுக்கொள்ளும். ஆனால், பிரமச்சரியம் பற்றிப் பேசியவர் அப்படி இருக்கலாமா என இந்து மதத்தினரே கேள்வி எழுப்பினர். நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழ இவரது பிடதி ஆசிரமம் கருநாடகாவில் இருப்பதால் வழக்குப் பதிவானது. சில நாள் வட மாநிலங்களில் ஓடி ஒளிந்து பின் கைது செய்யப்பட்டு சாமியார் கம்பி எண்ணினார். அவருடன் இருந்த நடிகை ரஞ்சிதாவோ தலைமறைவானார். வழக்கில் ஜாமீன் பெற்று ஆசிரமம் திரும்பியவருக்கு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட தைரியம் இங்கு பேட்டி கொடுக்கும் அளவுக்கு வந்தது.
கடந்த ஜூலை 13 அன்று எல்லா பத்திரிகையாளர்களையும் அழைத்து, தனது தரப்பு கருத்துகளைச் சொல்லிய நித்யானந்தா அந்த சி.டி.யில் இருப்பது நான் இல்லை; அது முழுக்க போலியானது; என்னிடம் பணம் பெற பேரம் பேசப்பட்டது; இதையெல்லாம் காவல்துறையிடம் புகாராக அளித்துள்ளேன் என்று கூறினார். இவ்வளவு பேசியவர் நமது உண்மை நிருபரின் எந்தக் கேள்விக்கும் விடை அளிக்கவில்லை. இன்னும் சிலர் கேட்ட தனது சொத்து விவரம் குறித்த கேள்விக்கும் விடை சொல்லவில்லை. ஆதாரத்தைத் தருகிறேன் என்று கூறியவர் அதனைத் தராமலேயே பேட்டியை முடித்தார். (பேட்டி முழு விவரம் பெரியார் வலைக்காட்சியில் காணலாம்: www.periyar.tv)
நித்யானந்தா ரஞ்சிதாவுடன் உள்ள வீடியோவை உலகமே பார்த்துவிட்டது. youtube இணைய தளத்தில் ஒரு பகுதியை மட்டுமே பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். டெல்லியில் உள்ள Forensic Science Laboratory, Govt. of NCT of Delhi ஆய்வு மய்யம் அந்த வீடியோவில் இருப்பது நித்யானந்தாவும் ரஞ்சிதாவும்தான் என்று சான்றிதழும் அளித்துவிட்டது. ஆனால், அப்பட்டமாகப் பொய் கூறும் இவர், இழந்த மதிப்பை - மரியாதையைத் திரும்ப மீட்க குண்டலினி யாகம் செய்யப்போவதாக அந்தப் பேட்டியின் போது கூறினார்.  அதன்படியே ஜூலை 15 அன்று அந்த நாடகத்தை தனது பிடதி ஆசிரமத்தில் அரங்கேற்றினார்.
பக்தர்களைக் கூட்டிவைத்துக் கொண்டு குண்டலினி யாகம் என்று கூறி மந்திரங்கள் ஜெபித்து கையை உயர்த்தி சைகை காட்டினார். ஏற்கெனவே பயிற்றுவிக்கப்பட்ட சிலர் கால்களை மடக்கி உட்கார்ந்தவாறே குதித்தனர். தவளை போலத் தவ்வினார்கள். இதுதான் குண்டலினி சக்தி என்பதுபோல நித்யானந்தாவும் சிரித்தபடியே உஷ்..உஷ்.. என்றார். ஆனால், சர்வசக்தி உள்ளதாகவும், தமக்கு எல்லா யோகாசனங்களும் தெரியும் என்றும் புற்று நோயையே குணப்படுத்தும் ஆற்றல் பெற்ற வித்தைகள் தெரியும் என்றும் பேட்டியில் பீற்றிக்கொண்ட நித்யானந்தா குண்டலினியைச் செய்துகாட்டவில்லை.
குறைந்தபட்சம் அந்த பக்தர்கள் குதித்ததுபோலக் கூடக் குதிக்கவில்லை. சிறிது நேரம் குதித்த அந்த பக்தர்கள் சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டனர். இந்த நிகழ்ச்சியை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க அமெரிக்காவில் இருந்தும் டெல்லியில் இருந்தும் பெங்களூருவில் இருந்தும் ஆய்வு நிறுவனங்கள் வர இருக்கின்றன. அவர்களின் முன்னிலையிலும், பத்திரிகையாளர்களின் முன்னிலையிலும் செய்துகாட்டப்போவதாகச் சொன்னார். எந்த நிறுவனத்தினரும் வந்ததாகத் தெரியவில்லை. அந்தத் தகவலை நித்யானந்தா தரப்பும் அறிவிக்கவில்லை. ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு சில பத்திரிகையாளர்கள் சென்றிருந்தனர். இவர்களில் கர்நாடகாவைச் சேர்ந்த கிரண் என்ற பத்திரிகையாளரும் ஒருவர். இவர் அங்கு என்ன நடந்தது என்பதை விவரிக்கிறார். கடந்த 15ஆம் தேதி குரு பூர்ணிமாவை முன்னிட்டு பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்குச் செய்தி சேகரிக்கச் சென்றேன். அப்போது, நித்யானந்தா, குண்டலினி யாகம் நடத்தினார். அதில், மனிதனுக்குள் தெய்வீக சக்தியை வரவழைத்து ஒரு அடி உயரம் அந்தரத்தில் பறக்க வைக்க முடியும் என அறிவித்தார். இதை யார் வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்றார். நானும் முயற்சி செய்தேன். எதுவும் நடக்கவில்லை.
உடனே அவரிடம், எனக்குப் பறப்பது போன்று எந்த உணர்வும் ஏற்படவில்லை. நீங்கள் மக்களை ஏமாற்றுகிறீர்கள். அதற்காக, ஆட்களை நியமித்து நாடகம் நடத்துகிறீர்களா? கம்ப்யூட்டர் யுகத்தில் இது சாத்தியம் இல்லாதது என்றேன். அதற்கு அவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். எனது உடல் அமைப்புதான் இளைஞனைப் போன்றது. உணர்வுகள் 6 வயதுச் சிறுவனைப் போன்றது. எனவே, எனது சக்தி அபரிமிதமானது என்று சம்பந்தம் இல்லாமல் எதைஎதையோ பேசினார். இது குறித்து ரஞ்சிதாவிடமும் கேட்டேன். ஆனால், அவர் மழுப்பலாக சிரித்தார். எனது இந்த அனுபவத்தின் மூலம், நித்யானந்தா போலிச் சாமியார் என்பதைத் தெரிந்து கொண்டேன். குண்டலினி யோகா என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார். பிடதியில் விவசாயம் செய்வதற்காக வழங்கப்பட்ட நிலத்தில், அவர் ஆசிரமம் அமைத்து மக்களை ஏமாற்றி வருகிறார். இது குறித்து அரசுக்குப் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இனிமேலாவது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
யோகாசனங்களில் பல வகை உண்டு. அதில் குண்டலினி யோகாசனமும் ஒன்று என்று ஏடுகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாகச் செய்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஏனென்றால், நித்யானந்தா சொல்வதுபோல புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக உடலை சில அடிகள் உயர்த்தி அந்தரத்தில் பறப்பதுதான் குண்டலினி. இது சாத்தியமா என்பதே அந்தக் கேள்வி. யோகாசன வகுப்பு நடத்துபவர்களும் இதுவரை இப்படிச் செய்து காட்டியதில்லை. அதுவே முழு வேலையாக இருப்பவர்களுக்கே இன்னும் சாத்தியப்பாடாதபோது இந்த மோசடிப் பேர்வழிக்கு எப்படிச் சாத்தியப்படும் என்று பகுத்தறிவாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
காவி அணிந்து கொண்டு ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருந்து வெட்டவெளிச்சமான ஒரு ஆபாசக்கூத்தைக் கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி ஒருவரால் வெளிப்படையாக வந்து போலியாக மறுக்கமுடிகிறது என்றால் மக்கள் எவ்வளவு மடையர்களாக இருக்கிறார்கள் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்? இதுவே காவி அணியாத வேறு ஒரு துறையைச் சேர்ந்தவராக இருந்தால் இப்படிப் பேசியிருக்க முடியுமா? வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பேட்டி கொடுக்க முடியுமா? இன்னும் எத்தனைக் காலத்திற்குத்தான் இந்தக் காலிகள் ஏமாற்றுவார்கள்?
http://www.unmaionline.com/new/24-unmaionline/unmai2011/aug-01-15/357-

Monday, August 1, 2011

பரமஹம்சர் என்பதை நீக்காவிட்டால் நித்தியானந்தா ஆசிரமத்தை முற்றுகையிடும் போராட்டம்

8/1/2011 0:39:48கருத்துகளை தெரிவிக்க சென்னை : போலி சாமியார் நித்தியானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி, சென்னை மெமோரியல் ஹால் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி செயலாளர் ராமேஸ்வரம் சரவணன் தலைமை தாங்கினார். மாநில அமைப்புக்குழு செயலாளர் கணபதி ரவி முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ஞானசம்பந்தம், திராவிட பறையர் முன்னேற்றக் கழக தலைவர் ராஜசேகர், தமிழ் மாநில சிவசேனா கட்சித் தலைவர் திரவியப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்து மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஞானசம்பந்தம் பேசியதாவது: போலி சாமியார் நித்தியானந்தாவை உடனே கைது செய்ய வேண்டும். அவரை தமிழகத்துக்குள் வர விட மாட்டோம். அவருக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நித்தியானந்தா, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் மனைவியை இழிவுபடுத்தி பேசியிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது.

ஆன்மிகத்தில் ஈடுபட போகிறேன்; குண்டலினி யோகம் மூலம் ஆகாயத்தில் பறக்க வைக்கப் போகிறேன் என்று கூறி, இந்து பெண்களை கேலி கூத்தாக்கியிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. ஆன்மிக ஒளி ராமகிருஷ்ண பரமஹம்சர் பெயரில் இருப்பதைப்போல், தனது பெயருக்கு பின்னால் நித்தியானந்த பரமஹம்சர் என்று போட்டுள்ளதை நீக்க வேண்டும். இல்லையென்றால், அவரது ஆசிரமத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு ஞானசம்பந்தம் கூறினார்.

http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=2419

இந்து மதத்தில் இருந்து நித்தியானந்தா ஓடிவிட வேண்டும்

August 1st, 2011,
Image

இந்து மக்கள் கட்சியின் மாவட்ட இளை ஞர் அணி சார்பில், சுவாமி நித்யானந்தாவை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மாநில செயலாளர் ஞானசம்பந்தன் பேசியதாவது: இந்து மதத்தை விட்டு நித்யானந்தா வெளியேற வேண்டும். ஆன்மீகவாதியாக தன்னை காட்டிக்கொண்டு இந்துமத தாய்மார்களையும், பெண்களையும் அந்தரத்தில் பறக்கவிடுகிறேன் என மோசடி செய்து வருகிறார்.

அவரது மோசடிகளை அம்பலப்படுத்தி வரும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். இதை நாங்கள் வன்மை யாக கண்டிக்கிறோம்.

உண்மையான இந்து மதத்தின் ஆன்மீக வாதி தனது பெயரில் எந்த சொத்துகளையும் வைத்துக்கொள்ளக்கூடாது. தனது பிரசாரம் மூலம் நித்யானந்தா சம்பாதித்த சொத்துகளை உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அவரை சுவாமி நித்யா னந்தா என்று அழைப்பதை விட காதல் மன்னன் நித்யா னந்தா என்ன அழைப்பதே பொருத்தமானது. அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து கைது செய்ய வேண்டும். இந்து மதத்தில் இருந்து அவர் ஓடிவிட வேண்டும். இவ்வாறு மாநில செயலாளர் ஞான சம்பந்தன் கூறினார்.

http://www.padukai.com/topic26630.html