Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Showing posts with label மதுரை ஆதீனம். Show all posts
Showing posts with label மதுரை ஆதீனம். Show all posts

Monday, April 25, 2016

மதுரை ஆதீனத்துக்கு இளைய ஆதீனம் நியமனம்




இந்து மதத்தில் சைவ பிரிவை தழைத்தோங்கச் செய்தவர்களில் திருஞான சம்பந்தர் குறிப்பிடத் தகுந்தவர். மதுரையை ஆட்சி செய்த கூன் பாண்டிய மன்னன் காலத்தில் சமண மதம் பரவியது. இதையடுத்து, கூன்பாண்டியன் மனைவி சுந்தரேஸ்வரரை மனம் உருக வேண்டினார். மன்னனுக்கு வெப்பு நோயை ஏற்படுத்தினார் இறைவன். இந்நோயை சமணர்களால் குணப்படுத்த முடியவில்லை. இதையடுத்து ஞான சம்பதருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் மதுரைக்கு வந்து, கூன் பாண்டியனின் வெப்பு நோயை நீக்கினார்.


இதையடுத்து, மதுரையில் சைவ மதத்தை வளரச் செய்யும் வகையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் ஆதீனத்தை நிறுவினார் ஞானசம்பந்தர். திருஞான சம்பந்தரால் நிறுவனப்பட்ட மதுரை ஆதீனத்தின் 292வது ஆதீனமாக அருணகிரி உள்ளார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுவாமி நித்தியானந்தர், மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்படுவதாக அருணகிரி அறிவித்தார். இதில் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து நித்தியானந்தரை இளைய ஆதீனம் பதவியில் இருந்து நீக்கி, அருணகிரி உத்தரவிட்டார்.
 

இந்நிலையில், மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனத்தை நியமனம் செய்வது தொடர்பாக கடந்த சில நாட்களாக ஆலோசனை நடந்தது. இந்நிலையில், இன்று காலை மதுரையில் நிருபர்களை சந்தித்த ஆதீனம் அருணகிரி, “மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் பட்டம் சூட்டப்படுவதாக முறைப்படி அறிவித்தார். அருணகிரி மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானமாக வந்த பின்னர், இப்போது நான்காவது முறையாக மதுரை ஆதீனத்துக்கு இளைய ஆதீனம் நியமிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


credit: jannalmedia

Sunday, April 24, 2016

ஜெயலலிதாவுடன் மதுரை ஆதீனம் சந்திப்பு; சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தார்

                   
ஞாயிறு, ஏப்ரல் 24,2016, 3:10 AM IST

சென்னை,

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை மதுரை ஆதீனம் நேற்று சந்தித்தார். அப்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

ஜெயலலிதாவுடன் சந்திப்பு

இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தல் 16.5.2016 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவை, மதுரை ஆதீனம் நேரில் சந்தித்து, அ.தி.மு.க.வுக்கு தமது மனப்பூர்வமான ஆதரவை தெரிவித்ததோடு, அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, தாம் தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதற்கு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். இந்த சந்திப்பின் போது மதுரை ஆதீனத்துடன், இளைய ஆதீனம் மற்றும் ஆதீனத்தின் முதன்மை செயலாளர் எம்.ஆர்.எம்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தபின், மதுரை ஆதீனம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்த நீங்கள், எப்போதில் இருந்து பிரசாரம் செய்ய இருக்கிறீர்கள்?

பதில்:- அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். எங்களுடைய பிரசாரம் மேடை பிரசாரமாக இருக்கும். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா சொல்வது படி நாங்கள் பிரசாரம் செய்வோம்.

கேள்வி:- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

பதில்:- நிச்சயமாக அவர் வெற்றி பெற்று மீண்டும் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார்.

பூஜை, தியானம்...

கேள்வி:- ஆதீனம் சார்பாக ஜெயலலிதா வெற்றி பெறுவதற்கு யாகங்கள் ஏதாவது நடத்தப்படுமா?

பதில்:- சிறப்பு யாகம் என்ற திட்டம் எதுவுமில்லை. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்காக தினமும் பூஜை, தியானம் செய்து வருகிறோம்.

கேள்வி:- நித்யானந்தாவை பற்றி ஒரு கேள்வி கேட்கலாமா?

பதில்:- நித்யானந்தா முடிந்து போன கதை. அதை பற்றி பேச ஒன்றுமில்லை.

இவ்வாறு அவர் பதிலளித்தார்


credit: dailythanthi.





Thursday, August 7, 2014

"I Am The Next Heir Of Madurai Adheenam" : Trial On Nithyananda's Petition Adjourned To Aug 13th


நான் இன்னமும் மதுரை ஆதீனமாகவே இருக்கிறேன்!: நித்தியானந்தா

தாம் இன்னமும் மதுரை இளம் ஆதீனமாகவே நீடிப்பதாக, நித்தியானந்தா மதுரை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மதுரை ஆதீனத்தின் இளம் ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தாவை,மதுரை ஆதீனம் திடீரென்று நீக்கம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடமும், நித்தியானந்தாவை நீக்கிவிட்டதாக பகிரங்க அறிவிப்பு விடுத்தார். இந்நிலையில் தாம் இன்னமும் மதுரை ஆதீனத்தின் துணை ஆதீனமாக நீடிப்பதாக நீதிமன்றத்தில் நித்தியானந்தா மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் தமக்கும் மதுரை ஆதீனத்துக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவிவருகிறது என்றும், இது நீங்கிவிட்டால் பிரச்சனைத் தீர்ந்து விடும் என்றும் நித்தியானந்தா கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மதுரை ஆதீனம் இதுக்குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
http://www.4tamilmedia.com/newses/india/24959-2014-08-07-06-27-16
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நித்யானந்தா மனுவுக்கு பதிலளிக்க ஆதீனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு


First Published : 07 August 2014 07:26 AM IST
நித்யானந்தா மனுவுக்குப் பதில் அளிக்குமாறு மதுரை ஆதீனம் உள்ளிட்ட 3 பேருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
 மதுரை ஆதீனமடத்தின் மடாதிபதியாக நித்யானந்தாவை கடந்த 2012-ல் நியமித்து ஆதீனம் அறிவித்தார். இதற்கு இந்து அமைப்புகள் சார்பில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. சென்னையைச் சேர்ந்த மணிவாசகம், கும்பகோணம் தியாகராஜன் ஆகியோர் நித்யானந்தாவின் நியமனத்தை எதிர்த்து மதுரை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.  
இதற்கிடையே நித்யானந்தாவை ஆதீனத்திலிருந்து நீக்கியதாக மதுரை ஆதீனம் அறிவித்தார்.
ஆனால், வழக்கின் விசாரணை கடந்த ஜனவரியில் நடந்தபோது, நித்யானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தான் மடாதிபதிபதவியிலிருந்து நீக்கப்படவில்லை எனவும், ஆதீனத்துக்கும், தனக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும், இந்து சமய அறநிலையத்துறை 59 வது விதிப்படி மனு உரிய அனுமதியின்றி தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் நிலைநிறுத்தத் தக்கதல்ல என குறிப்பிடப்பட்டிருந்தது.
  மேலும், வழக்கில் தான் பாதிக்கப்பட்டிருப்பதால் ஆதீனத்தை 3 வது எதிர்தரப்பாகச் சேர்த்து விசாரிக்கவேண்டும் என மனுவில் கூறியிருந்தது.  விசாரணையில் மதுரை ஆதீனம் தரப்பில் தாக்கலான பதிலில் நித்யானந்தா நீக்கப்பட்டதால் வழக்கைத் தொடர்ந்து நடத்த விரும்பவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
 இந்தநிலையில், மனு விசாரணை புதன்கிழமை வந்தபோது, நித்யானந்தா மனு குறித்து வரும் 13-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மதுரை ஆதீனம் மற்றும் எதிர் மனுதாரர்கள் மணிவாசகம், தியாகராஜன் ஆகியோருக்கு நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.
http://www.dinamani.com/latest_news/2014/08/07/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/article2368245.ece
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=126646

கம்யூனிஸ்டு கட்சியினர் பற்றி விமர்சனம்: நித்யானந்தா உருவபொம்மையை எரிக்க முயற்சி

கோவை, ஆக. 7–
கர்நாடக மாநிலம் பிடதியில் நடந்த கூட்டத்தில் நித்யானந்தா கம்யூனிஸ்டு கட்சியினரை விமர்சித்து பேசியதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். செயலாளர் வக்கீல் திருஞானம், மாவட்ட பொருளாளர் பூபதி உள்பட பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் திடீரென நித்யானந்தாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
பாதுகாப்புக்கு நின்ற போலீசார் உருவ பொம் மையை கைப்பற்றினர். நித்யானந்தா வருகிற 3–ந் தேதி கோவைக்கு வர இருக்கிறார். அப்போது அவருக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
http://www.maalaimalar.com/2014/08/07123325/defamation-about-communist-pro.html
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திருவண்ணாமலை: நித்தியானந்தாவை கண்டித்து கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை: நித்தியானந்தாவை கண்டித்து கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, ஆக.7–
திருவண்ணாமலை கம்யூனிஸ்டு கட்சியினரை நித்தியானந்தா இழிவாக பேசியதாக அவரை கண்டித்து நேற்று திருவண்ணாமலையில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர்கள் சுப்பிரமணி, சந்திரசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர்கள் எம்.வீரபத்திரன், தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நித்தியானந்தாவை கண்டித்து பேசினர்.
இதில் சிவகுமார், பாரி, பலராமன், ஜோதி உள்பட பலர் கலந்துகொண்டு நித்தியானந்தாவை கண்டித்து கோஷமிட்டனர். நித்தியானந்தாவின் உருவப் படத்தையும் எரித்தனர்.
http://www.maalaimalar.com/2014/08/07151805/tiruvannamalai-communist-demon.html

Sunday, December 22, 2013

மதுரை ஆதீனம் சொத்துக்கள் எவ்வளவு? அடுத்த ஆதீனம் யார்? : தகவலளிக்க ஐகோர்ட்டில் மனு

மதுரை ஐகோர்ட் கிளையில் இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைகண்ணன் தாக்கல்செய்த மனுவில்,  ‘’ மதுரை ஆதீனம் மடம் 1500 ஆண்டுகள் பழமையானது. பக்தர்கள் தங்க, நன்கொடைகள் மூலம் மடம் அருகே மண்டபம் மற்றும் அறைகள் கட்டப்பட்டன. ராஜா பாஸ்கர சேதுபதி தானமாக ஒரு பங்களாவை, ஆதீனத்திற்கு வழங்கினார். 

அதை தற்போதைய 292 வது ஆதீனம் அருணகிரிநாதர், "சிமாப்' என்ற நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டார். பங்களாவை தற்போது விடுதியாக மாற்றியுள்ளனர். மதுரை கலெக்டர் மற்றும் விளக்குத்தூண் போலீசில் புகார்செய்தேன். விசாரணை நிலுவையில் உள்ளது. மடத்தின் வரவு- செலவு கணக்குகளை, ஆதீனம் முறையாக பராமரிப்பதில்லை. இந்து மதத்தை வளர்க்க, பக்தர்கள் தரும் நன்கொடையையும், மடத்தின் நிதியையும், சுயலாபத்திற்காக ஆதீனம் பயன்படுத்துகிறார்.


மடத்திற்கு சொந்தமாக தமிழகத்தில் உள்ள சொத்துக்கள், மாத வருவாய், செலவு எவ்வளவு? அடுத்த ஆதீனமாக யாராவது அறிவிக்கப்பட்டுள்ளனரா? என்பன உட்பட 17கேள்விகளை தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ், அறநிலைய இணை கமிஷனரிடம் கோரினேன். அவர், ஆதீனத்திற்கு அனுப்பினார். 

ஆதீனம், "இது பொது அதிகார அமைப்பு அல்ல. மடத்திற்கு, தகவல் உரிமைச் சட்டம் பொருந்தாது,'' என மறுத்து, அறநிலையத்துறைக்கு பதில் அனுப்பினார். மாநில தகவல் கமிஷனர்கள், "யூகத்தின் அடிப் படையில், திசை திருப்பும் வகையில், அதிக கேள்விகள் கேட்டு உள்ளீர்கள். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என பிப்.,13ல் உத்தரவிட்டனர். 

மாநில தகவல் ஆணையத்தில் ஆஜராகுமாறு, எனக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை. மாநில தகவல் கமிஷனர்களின் உத்தரவை ரத்து செய்து, விபரங்கள் தர உத்தரவிட வேண்டும்’’ என குறிப்பிட்டார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=113224

Saturday, March 2, 2013

Nithyananda is banned to enter Madurai adeenam mutt


Interim order passed by the Madurai district court says that Nithyananda is banned from entering the Madurai Adeenam Mutt.
 Madurai Adeenam Arunagirinathar has filed a petition in the Discrit court-I emphasizing the ban on entering the Madurai adeena mutt by Nithyananda. On hearing this petition, Judge Guruvaiya passed an interim order saying that Nithyananda and his subordinates are banned from entering the Madurai adeena mutt and not to involve in any tasks related with the mutt.
 The judge also ordered, Nithyananda and his subordinates that they are not entitled to sell any property which is in charge of the adeenam mutt
http://sathiyam.tv/english/general/nithyananda-is-banned-to-enter-madurai-adeenam-mutt

Nithyananda restrained from entering Madurai Adheenam

Principal Sub-Judge K. Guruviah, on Tuesday, passed interim orders restraining Nithyananda from entering the mutt of Madurai Adheenam and interfering in the functioning of the mutt.

The Sub-Judge passed the order on hearing the petition filed by Adheenam Arunagirinatha Desikar to restrain Nithyananda and his followers from entering the 1500-year-old Saivaite mutt and to direct the sub-registrar of Madurai South to cancel the registration of the trust he formed in collaboration with Nithyananda.

In yet another interim order, the Sub-Judge also instructed the Adheenam not to sell or transfer the properties of the mutt until final orders are pronounced in a case filed by the Department of Hindu Religious and Charitable Endowments (HR and CE) seeking the removal of the incumbent Madurai Adheenam.
The HR and CE’s case has been posted for further hearing on March 22.

http://www.thehindu.com/todays-paper/tp-national/nithyananda-restrained-from-entering-madurai-adheenam/article4457180.ece


 மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய இடைக்காலத் தடை: மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றம் உத்தரவு

மதுரை, பிப்.28- 
 
தமிழக இந்து அறிநிலையத்துறை ஆணையர் சார்பில் மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், இந்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் ஆதீனம் தரப்பில் மதுரை ஆதீனம் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
எனவே மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அடுத்த ஆதீனம் நியமிக்கப்படும் வரை மடத்தின் பொறுப்புகளை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
 
இந்த முக்கிய மனு நிலுவையில் இருக்கும் வரை, மதுரை ஆதீனம் அறக்கட்டளை செயல்பட தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த அறக்கட்டளை மூலமோ அல்லது தனிப்பட்ட வகையிலோ ஆதீனத்துக்கு சொந்தமான சொத்துக்களை மதுரை ஆதீனமோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட நபர்களோ விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இதற்கிடையே மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், அதே கோர்ட்டில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தா அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து உருவாக்கப்பட்ட மதுரை ஆதீனம் அறக்கட்டளை கலைக்கப்பட்டுள்ளது.
 
அதன் பதிவினை ரத்து செய்ய சார் பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். மதுரை ஆதீன மடத்தில் நித்தியானந்தாவோ அவரது தரப்பினரோ நுழைய நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். அத்துடன் மடத்தின் பணிகளில் அவர்கள் குறுக்கீடு செய்யாமல் இருக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
 
இந்த மனுக்கள் நீதிபதி குருவையா முன்பாக விசாரணைக்கு வந்தன. விசாரணை முடிவில் 2 இடைக்காலத் தடை உத்தரவுகளை நேற்று நீதிபதி பிறப்பித்தார். அதன்படி இந்த வழக்கு முடிவுக்கு வரும்வரை மதுரை ஆதீனத்தின் பொறுப்பில் உள்ள சொத்துக்களை அவரோ, அவரால் நியமிக்கப்பட்டவர்களோ வேறு யாருக்கும் விற்பனை செய்வது, குத்தகைக்கு வழங்குவது உள்பட எந்தவித வில்லங்கமும் செய்யக்கூடாது.
 
அதேபோல நித்தியானந்தாவும், அவரது தரப்பினரும் மதுரை ஆதீனத்திற்குள் நுழைவதற்கும், ஆதீன பணிகளில் ஈடுபடுவதற்கும் இடைக்காலத்தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். இந்து அறநிலையத்துறை மற்றும் ஆதீனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரதான மனுக்கள் மீதான விசாரணை அடுத்த மாதம் (மார்ச்) 22-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


http://www.maalaimalar.com/2013/02/28090954/madurai-adheenam-madam-nithiya.html


Saturday, February 16, 2013

நித்தியானந்தா குளிக்க போகும் போது துப்பாக்கி!

Posted on 15.2.13
நம்ம நித்தி சுவாமிகள் மீண்டும் ஒரு ரவுண்ட் வர தயாராகிவிட்டார். அதற்கு புத்துணர்ச்சி ஏற்றிக்கொள்ள மகா கும்பமேளாவின் மிக முக்கியமான ராஜ குளியலில் கலந்து கொள்ள மவுணி அமாவாசை தினத்தன்று அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் ஆஜரானார், நித்தியானந்தா. திரிவேணி சங்கமத்தின் கரையில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 75 கூடாரங்களில், சினிமா செட் போல பளபளத்தது நித்தியின் சுமார் 100 பக்தர்களை பெங்களூருவில் இருந்து அழைத்து வந்து இறக்கி அசத்தினார் நித்தி. நட்சத்திர ஹோட்டலுக்குக் குறைவில்லாத வசதிகளுடன் இருந்த நித்தியின் கூடாரத்தில், கடுமையான கட்டுக் காவல். அனுமதி இன்றி உள்ளே யாரும் நுழைய முடியாது.

ராஜக் குளியல் செய்வதற்காக நித்தி, ஆளுயர ரோஜா மாலையுடன் வித்தியாசமான கெட்டப்பில் ஊர்​வலமாக வந்தார். ஊர்வலத்துக்காக செட்டப் செய்யப்பட்டிருந்த ரதத்தில் நித்திக்காக வெள்ளி சிம்மாசனம் வைக்கப்பட்டிருந்தது.
நித்திக்குப் பாதுகாப்பாகத் துப்பாக்கி ஏந்திய இரு கமாண்டோக்களும் உடன் வந்தது அங்கு வந்திருந்த சாதுக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. யார் இந்த வி.ஐ.பி. சாது என்று அக்கம் பக்கத்தில் விசாரித்துக் கொண்டனர்.

சரி.. துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு கொடுத்தது யாரு? மத்திய அரசா? உ.பி. அரசா ?

நித்தி வட்டாரங்களில் விசாரித்தபோது, தனியார் பாதுகாப்பு ஏஜென்சி ஒன்றுக்கு பணம் கொடுத்து பெறப்பட்ட பாதுகாப்பு என்றார்கள். இதற்கு அந்த மாநில அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்கிறார்கள். பாதுகாப்பு ஏஜென்சியின் யூனிபார்மில் இல்லாமல், கமாண்டோ பாணியில் உடையணிந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பது, நித்தி விடுத்த கோரிக்கையாம்! (அந்த டிரெஸ்ஸூக்கு மேலதிக கட்டணம் உண்டு)

அட, இப்படியொரு செட்டப்பில் மதுரை வந்து, அருணகிரியாரை மிரள வைக்கலாமே!

http://www.cinekolly.com/2013/02/blog-post_2224.html

Sunday, February 3, 2013

Nithyananda files petition against Madurai Adheenam: Contests his removal

இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து என்னை நீக்கியது தவறு - நித்தியானந்தா வழக்கு


Posted by: Shankar Published: Saturday, February 2, 2013, 11:13 [IST]

மதுரை: மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து தன்னை நீக்கியது தவறு என்றும், மதுரை ஆதீன மடத்தில் பூஜைகள் நடத்த தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டு மதுரை நீதிமன்றத்தில் நித்தியானந்தா மனு தாக்கல் செய்துள்ளார். 

மதுரை ஆதீனத்திற்கு எதிராக மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நித்தியானந்தா புதிதாக 2 வழக்குகளை தாக்கல் செய்தார். அவற்றில் முதல் மனுவில், "நான் மதுரையின் 293-வது இளைய ஆதீன மாவேன். என்னை இளைய ஆதீனமாக நியமித்து பல்வேறு பணிகளை செய்யும்படி கூறிய ஆதீனம் திடீரென்று எந்தவித அறிவிப்பும் இல்லாமல், என்னை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி விட்டதாக அறிவித்துள்ளார். 

மடத்தின் சட்ட விதிகளின்படி இது தவறாகும். எந்த குறைபாடுகளும் இல்லாத நிலையில் என்னிடம் விளக்கம் பெறாமல் என்னை நீக்குவதற்கு மதுரை ஆதீனத்திற்கு உரிமை இல்லை. 

அத்துடன் இளைய ஆதீனமான நான் மடத்திற்குள் பூஜைகளை நடத்த வேண்டும். ஆனால் நானும், எனது தரப்பினரும் மடத்திற்குள் வருவதற்கு மதுரை ஆதீனம் தடையாக உள்ளார். எனவே என்னையும் என் தரப்பினரையும் மதுரை ஆதீனத்திற்குள் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும்,"' என்று கூறப்பட்டுள்ளது. 

அதேபோல மற்றொரு மனுவில், ‘‘இளைய ஆதீனமான என்னிடம் கலந்து பேசாமல் திடீரென்று தம்புரான் ஒருவரை மதுரை ஆதீனம் நியமனம் செய்துள்ளார். இதுபோல தம்புரான் நியமிக்கும் வழக்கம் மதுரை ஆதீனத்தின் விதிகளில் இல்லை. எனவே விதிகளுக்கு மாறாக உள்ள அந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்.'' என்று கூறப்பட்டுள்ளது. 

இநத மனுக்கள் நீதிபதி கே.குருவையா முன்பாக விசாரணைக்கு வந்தன. அப்போது ஆதீனம் தரப்பு வக்கீல்கள் வி.நாகேந்திரன், ஜெ.ராமமூர்த்தி ஆகியோர் ஆஜராகி, இந்த வழக்குகளுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். 

இதையடுத்து நித்தியானந்தா தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.


English summary: Nithyananda filed petition against the removal of him and his supporters from Madurai Aatheenam.


Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/02/tamilnadu-nithyananda-files-petition-against-madurai-aatheenam-169030.html

Tuesday, January 29, 2013

Nithyananda plea against Madurai adheenam rejected

English summary Madurai principal sessions court has dismissed Nithyananda's petition against Madurai Aadheenam.

ஆதீனத்திற்கு எதிரான நித்தியானந்தாவின் வழக்கு மதுரை கோர்ட்டில் தள்ளுபடி 

Posted by: Sudha Published: Tuesday, January 29, 2013, 12:01 [IST]

மதுரை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மீது நித்தியானந்தா தொடர்ந்த வழக்கை மதுரை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.

 தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால், மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அதில், இந்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் ஆதீனம் தரப்பில் மதுரை ஆதீனம் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எனவே மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அடுத்த ஆதீனம் நியமிக்கப்படும்வரை மடத்தின் பொறுப்புகளை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

இதையடுத்து அருணகிரிநாதர், அதே கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், மதுரை ஆதீனம் அறக்கட்டளை கலைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த பெயரில் பதிவாளர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும், மதுரை ஆதீன மடத்தில் நித்தியானந்தாவும், அவருடைய தரப்பினரும் நுழைய நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் நித்தியானந்தா, ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், மதுரை ஆதீனம் அறக்கட்டளையை நானும், அருணகிரிநாதரும் சேர்ந்து சட்டப்படி உருவாக்கினோம். அறக்கட்டளையை கலைக்க விரும்பினால் முதன்மை அரசு வக்கீலிடம் முன் அனுமதி பெற வேண்டும். அறக்கட்டளையில் உள்ள எனக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். 

ஆனால், அதுபோன்று எந்தவித அனுமதியும் பெறாமல் அறக்கட்டளை கலைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கலைத்தது தவறு. சட்டப்படி அறக்கட்டளையை கலைக்காமல் அறக்கட்டளைக்கான பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று அருணகிரிநாதர் தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்கக்கூடாது. அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

 இதற்கு அருணகிரிநாதர் தாக்கல் செய்த பதில் மனுவில், சாதாரணமாக உருவாக்கப்படும் அறக்கட்டளைகளுக்குத்தான் நித்தியானந்தா கூறியுள்ள விதிமுறைகள் பொருந்தும். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் மதுரை ஆதீனம் போன்ற மடங்களில் அமைக்கப்படும் அறக்கட்டளைகளை கலைக்க அந்த விதிகள் பொருந்தாது. எனவே சட்டப்படியான அடிப்படை காரணங்கள் இல்லாததால் நித்தியானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

இந்த மனுக்கள் நீதிபதி கே.குருவையா முன்பாக விசாரணைக்கு வந்தன. ஆதீனம் தரப்பில் வக்கீல் நாகேந்திரன், ராமமூர்த்தி ஆகியோர் ஆஜரானார்கள். முடிவில் ஆதீனம் மனுவை தள்ளுபடி செய்யக்கோரிய நித்தியானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

 http://tamil.oneindia.in/news/2013/01/29/tamilnadu-madurai-court-dismisses-nithyanantha-168788.html




DINAMALAR NEWS

மதுரை ஆதீனத்திற்கு எதிரான நித்யானந்தா மனு தள்ளுபடி
 ஜனவரி 29,2013,00:59 IST

மதுரை: மதுரை ஆதீனத்துக்கு எதிராக, நித்யானந்தா தாக்கல் செய்த மனுவை, முதன்மை சப்கோர்ட் நீதிபதி குருவைய்யா, தள்ளுபடி செய்தார். மதுரை ஆதீனத்தை அரசிடம் ஒப்படைக்கவும், நித்யானந்தா-ஆதீனம் இணைந்து துவக்கிய அறக்கட்டளை பதிவை ரத்து செய்ய உத்தரவிடவும், மடத்தின் சொத்துகளை ஆதீனமோ, அவர் தரப்பினரோ வேறு நபருக்கு விற்க, பதிவு செய்ய இடைக்காலத் தடை விதிக்கவும் வலியுறுத்தி, இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால், முதன்மை சப்கோர்ட்டில் மனு செய்தார். நித்யானந்தா இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டதை ரத்து செய்யவும், ஆதீன அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்யவும், ஆதீன மடத்தில் நித்தியானந்தா நுழைய தடை விதிக்கவும் கோரி, ஆதீனம் தரப்பு, அதே கோர்ட்டில் மற்றொரு மனு செய்தது. அறக்கட்டளையை பதிவு செய்த தெற்கு சார்பதிவாளரையும் இணைக்க வலியுறுத்தி, நித்யானந்தா தரப்பு, மனு செய்தது. ஒரே நேரத்தில் தாக்கலான, மூன்று தரப்பினரின் வெவ்வேறு மனுக்கள் மீதான விசாரணை, நடந்து வருகிறது. இதற்கிடையில், ஜன.,8ல், நித்யானந்தா தரப்பு புது மனுவை தாக்கல் செய்தது. 
அதில்,"மதுரை ஆதீனத்திற்கு வழக்கு போடும் உரிமை இல்லை. அவர் மனு செய்தது சட்டப்படி செல்லாது. அரசின் முன் அனுமதி பெறாமல் அறக்கட்டளையை களைத்தது, விதிகளுக்கு முரணானது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என கூறியிருந்தனர். இதுதொடர்பாக, நேற்று நடந்த விசாரணையில், நித்யானந்தா தரப்பின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி குருவைய்யா, பிற மனுக்கள் மீதான விசாரணையை, பிப்., 1 க்கு தள்ளிவைத்தார்


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=636025