Principal Sub-Judge K. Guruviah, on Tuesday, passed interim orders restraining Nithyananda from entering the mutt of Madurai Adheenam and interfering in the functioning of the mutt.
The Sub-Judge passed the order on hearing the petition filed by Adheenam Arunagirinatha Desikar to restrain Nithyananda and his followers from entering the 1500-year-old Saivaite mutt and to direct the sub-registrar of Madurai South to cancel the registration of the trust he formed in collaboration with Nithyananda.
In yet another interim order, the Sub-Judge also instructed the Adheenam not to sell or transfer the properties of the mutt until final orders are pronounced in a case filed by the Department of Hindu Religious and Charitable Endowments (HR and CE) seeking the removal of the incumbent Madurai Adheenam.
The HR and CE’s case has been posted for further hearing on March 22.
http://www.thehindu.com/todays-paper/tp-national/nithyananda-restrained-from-entering-madurai-adheenam/article4457180.ece
மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய இடைக்காலத் தடை: மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றம் உத்தரவு
மதுரை, பிப்.28-
தமிழக இந்து அறிநிலையத்துறை ஆணையர் சார்பில் மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், இந்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் ஆதீனம் தரப்பில் மதுரை ஆதீனம் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அடுத்த ஆதீனம் நியமிக்கப்படும் வரை மடத்தின் பொறுப்புகளை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த முக்கிய மனு நிலுவையில் இருக்கும் வரை, மதுரை ஆதீனம் அறக்கட்டளை செயல்பட தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த அறக்கட்டளை மூலமோ அல்லது தனிப்பட்ட வகையிலோ ஆதீனத்துக்கு சொந்தமான சொத்துக்களை மதுரை ஆதீனமோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட நபர்களோ விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், அதே கோர்ட்டில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தா அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து உருவாக்கப்பட்ட மதுரை ஆதீனம் அறக்கட்டளை கலைக்கப்பட்டுள்ளது.
அதன் பதிவினை ரத்து செய்ய சார் பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். மதுரை ஆதீன மடத்தில் நித்தியானந்தாவோ அவரது தரப்பினரோ நுழைய நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். அத்துடன் மடத்தின் பணிகளில் அவர்கள் குறுக்கீடு செய்யாமல் இருக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதி குருவையா முன்பாக விசாரணைக்கு வந்தன. விசாரணை முடிவில் 2 இடைக்காலத் தடை உத்தரவுகளை நேற்று நீதிபதி பிறப்பித்தார். அதன்படி இந்த வழக்கு முடிவுக்கு வரும்வரை மதுரை ஆதீனத்தின் பொறுப்பில் உள்ள சொத்துக்களை அவரோ, அவரால் நியமிக்கப்பட்டவர்களோ வேறு யாருக்கும் விற்பனை செய்வது, குத்தகைக்கு வழங்குவது உள்பட எந்தவித வில்லங்கமும் செய்யக்கூடாது.
அதேபோல நித்தியானந்தாவும், அவரது தரப்பினரும் மதுரை ஆதீனத்திற்குள் நுழைவதற்கும், ஆதீன பணிகளில் ஈடுபடுவதற்கும் இடைக்காலத்தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். இந்து அறநிலையத்துறை மற்றும் ஆதீனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரதான மனுக்கள் மீதான விசாரணை அடுத்த மாதம் (மார்ச்) 22-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
http://www.maalaimalar.com/2013/02/28090954/madurai-adheenam-madam-nithiya.html