Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Showing posts with label spiritual cult. Show all posts
Showing posts with label spiritual cult. Show all posts

Friday, August 1, 2014

ஆண்மைப் பரிசோதனைக்கு நான் வரமாட்டேன். நித்தியானந்தா கர்ஜனை. சீடர்கள் அதிர்ச்சி

நித்தியானந்தாவுக்கும் பரபரப்பு செய்திகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும்போல தெரிகிறது. சிறிது நாட்கள் நிம்மதியாக இருந்த நித்தியானந்தாவுக்கு தற்போது கோர்ட் வடிவில் புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு பெண் சீடர் ஆர்த்தி ராவ் பிடதி காவல் நிலையத்தில் நித்தி மீது செக்ஸ் புகார் ஒன்றை கொடுத்தார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட பிடதி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து நித்தியை  கைதுசெய்தனர். மைசூர் சிறையில் அடைக்கப்பட்ட நித்தி பின்னர் கஷ்டப்பட்டு ஜாமீன் பெற்று வெளியே வந்தார். 

பின்னர் இந்த வழக்கிற்காக பிடதி போலீஸார் நித்தியானந்தாவுக்கு ஆண்மைப் பரிசோதனை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில்  அனுமதி கேட்டு  மனுதாக்கல் செய்தனர். போலீஸாரின் மனுவை விசாரித்த ராம்நகர் நீதிமன்றம், ஆண்மை பரிசோதனை செய்ய அனுமதி அளித்தது. மேலும் 'நித்தியானந்தா இந்த ஆண்மை பரிசோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த நித்தி, இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.  அவரது மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது.

அதன்பின்னர் ராம்நகர் நீதிமன்றம் ஆகஸ்ட் 6-ம் தேதி பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் நித்தியானந்தாவுக்கு ஆண்மைப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நாளில் நித்தியானந்தா மருத்துவமனைக்கு வந்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என்று வாதிட்டார். அதற்கு நித்தியானந்தா வழக்கறிஞர் முத்து மல்லையா, 'ஸ்வாமி ஆன்மிகப் பயணமாக ஹரித்வார் சென்றிருப்பதால் போலீஸார் திட்டமிட்டுள்ள நாளில் ஸ்வாமி வர இயலாது. ஆகவே அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்றார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹொசகவுடர், 'நித்தியானந்தாவுக்கு போலீஸார் திட்டமிட்ட ஆகஸ்ட் 6-ம் தேதி கண்டிப்பாக ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும். அதையடுத்து 7-ம் தேதி இந்த நீதிமன்றத்தில் அவரை கைதுசெய்து ஆஜர்படுத்த வேண்டும். வெளியே தப்பித்துச் செல்லாமல் இருக்க பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிடுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

''பரபரப்புத் திருப்பங்களாக இருக்கிறதே!''

ஹரித்துவாரில் இருந்த நித்தி. தீர்ப்பைக் கேட்டு ஆடிப் போய்விட்டாராம் நித்தி. 'ஆண்மைப் பரிசோதனைக்கு நான் வரமாட்டேன். என்ன செய்வீர்களோ தெரியாது, இந்தத் தீர்ப்புக்கு ஸ்டே வாங்குங்கள்’ என்றாராம். 'ஏற்கெனவே, கர்நாடக உயர் நீதிமன்றம் வரைக்கும் போய் ஒன்றும் ஆகவில்லை. அதனால் மறுபடியும் உயர் நீதிமன்றம் போக முடியாதே’ என்றார்களாம் வக்கீல்கள். தன்னால் ஆண்மை சோதனைக்கு ஏன் சம்மதிக்க முடியாது என்பதற்காக காரணங்களை அடுக்கினாராம் நித்தியானந்தா. என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார்கள் அவரது சட்ட சீடர்கள்!''
http://www.thedipaar.com/news/masculinity-test-nithyananda/

Tuesday, July 22, 2014

Nithyananda victim Aarthi Rao speaks about cult

Samaya TV, a Kannada Channel working tirelessly for social causes, discussed the recent order from Hon'ble High Court of Karnataka. Discussion included victim & main witness in the case, Aarthi Rao, and Ramesh Gowda, leader of anti-Nithyananda activist group.

Karnataka High Court has delivered a welcome judgment on 16th July 2014, ordering Nithyananda to submit to the mandatory medical test and also to give his voice samples to authenticate his phone conversation (which is Nithyananda's confession to the whistleblower about his acts.

In this discussion, Aarthi Rao shares many insights into cults based on her experiences.

Part 1



Part 2




Part 3



Part 4




Thursday, July 17, 2014

Nithyananda to undergo medical test

பெங்களூர்: ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்ற போலீசாரின் கோரிக்கை யை ஏற்கக் கூடாது என்று நித்யானந்தா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. கர்நாடக மாநிலம், ராம்நகரம் மாவட்டம், பிடதியில் உள்ள தியான பீடத்தின்  மடாதிபதி நித்யானந்தா மீது கர்நாடகாவில் பல வழக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஆண்மை சக்தி இல்லை என்று கூறியிருந்தார். அதை மறுத்த பிடதி போலீசார், நித்யானந்தாவு க்கு ஆண்மை பரிசோதனையும், ரத்த பரிசோதனை நடத்த அனுமதி கோரி ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

அதையேற்று பரிசோதனைக்கு ஒத்துழைக்கும்படி நித்யானந்தாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா மேல்முறையீடு  செய்தார். அதில் ராம்நகரம் மாவட்டம், பிடதி போலீ சார் தன் மீது தொடர்ந்துள்ள ஆண்மை பரிசோதனை, ரத்த பரிசோதனை உள்பட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். அம்மனு நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நித்யானந்தா சார்பில் ஆஜரான வக்கீல் தனது கட்சிக்காரர் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்றார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், நித்யானந்தா மீது பலர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். 

அந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டியது அரசின் கடமை என்பதால் நித்யானந்தா தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்கக் கூடாது என்றார்.இருதரப்பு வாதங்களை யும் கேட்டபின் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், நித்யானந்தா மீது பலர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை மனுதாரர் கண்டிப்பாக சந்திக்க வேண்டும். ஆகவே வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. ஆகவே நித்யானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்கிறேன். மேலும் நித்யானந்தா மீதான வழக்கு விசாரணையை ராம்நகரம் மாவ ட்ட அமர்வு நீதிமன்றம் ஜூலை 28ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணையுடன் தொடங்க வேண்டும். மேலும் நித்யானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்று போலீசார் விரும்பினால், அதை செய்யலாம். அதற்கு நித்யானந்தா ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஒருவேளை அவர் ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தால் கைது செய்து பரிசோதனை செய்ய போலீசாருக்கு அனுமதி வழங்குவதாக தீர்ப்பில் கூறியது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=101054
 

Nithyananda ordered to give up Bidadi ashram Land

Nithyananda has been ordered by Ramanagar District Collector to give up the agricultural land, which he had illegally used for commercial purpose at his Bidadi ashram. As per law, agricultural land must be used only for agricultural purposes. Nithyananda however obtained the land by claiming himself to be an agriculturist!!! Later he applied to convert the 23 acres of land into commercial land. Ramnagar DC yesterday rejected Nithyananda's conversion application, and confirmed that the 23 acres land at his Bidadi  ashram have been illegally used by Nithyananda for purposes other than agriculture. The DC has ordered Nithyananda to surrender all such ashram land immediately and that legal action will be taken against him.


பெங்களூரு: பிடதி ஆசிரம நிலம் தொடர்பாக, மாவட்ட கலெக்டரிடம், சாமியார் நித்யானந்தா தாக்கல் செய்த மனு, நிராகரிக்கப்பட்டது.
 
'பிடதி ஆசிரமம், இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே வாங்கி, நித்யானந்தாவால் கட்டப்பட்டது. பிடதி ஆசிரமத்துக்கு அருகிலிருந்த, 21 ஏக்கர் நிலத்தை, தன் நிலம் எனக்கூறி, நித்தியானந்தா ஆக்கிரமித்து உள்ளார். இந்த நிலம், அரசுக்கு சொந்தமானது. அதை காலி செய்ய வேண்டும்' என, தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.இதை எதிர்த்து, மாவட்ட கலெக்டரிடம், நித்யானந்தா மனு செய்தார். மனுவில், '23 ஏக்கர் நிலம், பிடதி ஆசிரமத்துக்கு சேர்ந்தது என, உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார். இந்த மனுவை, ராம்நகர் மாவட்ட கலெக்டர் நிராகரித்தார்.'பிடதி ஆசிரமத்தை சுற்றியுள்ள, 21 ஏக்கர் நிலத்தை, அரசிடம், நித்தியானந்தா ஒப்படைக்க வேண்டும்' என,உத்தரவிடப்பட்டது.

ஆண்மை பரிசோதனை நடத்த தடையில்லை: பிடதி ஆசிரமத்தை சேர்ந்த பெண் ஒருவர், நித்யானந்தா, தன்னை, பாலியல் பலாத்காரம் செய்தார் என, பெங்களூரு ராம்நகர் போலீசில் புகார் செய்தார். இவ்வழக்கு, ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.அப்போது, தனக்கு ஆண்மை இல்லை. அதனால், ஒரு பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்ய இயலாது என, நித்யானந்தா மனு செய்தார்.இதையடுத்து, அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்யும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், போலீசார் அவரை பலமுறை அழைத்தும், நித்யானந்தா வரவில்லை.
 
இதற்கிடையில், 'ஆண்மை பரிசோதனை, ரத்த பரிசோதனை என, தன் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்' என, நித்யானந்தா, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.இவ்வழக்கின் தீர்ப்பு: அதில், 'நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை, ரத்த பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு அவர், ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால், அவரை, போலீஸ் காவலில் எடுத்து, பரிசோதனைக்கு உட்படுத்தலாம்' என, தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 http://www.dinamalar.com/news_detail.asp?id=1023695

Medical tests: HC dismisses Nithyananda’s plea

Updated: July 17, 2014 00:27 IST 
The Karnataka High Court on Wednesday gave the green signal to the Criminal Investigation Department (CID) to interrogate Nithyananda of Nithyananda Dhyanapeetam, besides subjecting him to medical tests to find out if he was capable of having sexual intercourse, and to collect his voice sample.
Justice S.N. Satyanarayana passed the order while dismissing Nithyananda’s petition, in which he had questioned the 2012 order passed by the Chief Judicial Magistrate (CJM) of Ramanagaram.
The CID in February 2010 had filed charge sheet against him for offences such as rape, unnatural sex, criminal intimidation, and criminal conspiracy based on a complaint from a devotee.
As the CID, after filing of charge sheet, received complaint from more devotees alleging rape, the investigating officer decided to continue the investigation and sought the court’s direction to Nithyananda to appear before the investigating officer and subject him to medical tests.
The CJM’s court on June 18, 2012 allowed CID’s plea and directed Nithyananda to subject himself to medical tests. However, on Nithyananda’s plea, the High Court stayed the permission granted to the CID by the CJM’s court in Ramanagaram.
While dismissing Nithyananda’s plea, the High Court on Wednesday upheld the order of the CJM’s court and permitted the CID to interrogate him.
Meanwhile, the High Court also dismissed the petitions filed by the other accused in the case — Nithya Bhakthananda, Nithya Sadananda, Ma Nithya Sachitananda, and Nithya Sachitananda, who were said to have aided Nithyananda in committing the alleged crime.
 http://www.thehindu.com/news/cities/bangalore/medical-tests-hc-dismisses-nithyanandas-plea/article6218217.ece?utm_source=RSS_Feed&utm_medium=RSS&utm_campaign=RSS_Syndication

Medical test on Nithya: HC vacates stay

Bangalore, Jul 16, 2014, DHNS :
 
The High Court on Wednesday dismissed a batch of petitions filed by Nithyananda, seeking that the investigations against him be quashed.

Justice S N Satyanarayana observed, “This court cannot interfere in the matters and investigations must continue.”

The court vacated the stay order on the order of the Ramanagar court, dated June 18, 2012, for medical test of Nithyananda in connection with rape charges against him. The Court directed the police to take Nithyananda into custody, if he does not comply with the trial court order for medical test.

The Court also vacated the stay on investigations by the Criminal Investigation Department (CID) against Nithyananda, in various cases including the rape charges by Aarthi Rao, one of his devotees.

It also dismissed a petition by devotees Gopala Reddy, Shivavallabhaneni, Ragini and Dhanashekar, who are accused no. 2, 3 4 and 5 in the case filed against Nithyananda by Lenin, his former driver. The case pertains to the self-styled godman’s relationship with actor Ranjitha. It has been referred for CID probe.

http://www.deccanherald.com/content/420125/medical-test-nithya-hc-vacates.html

Nithyananda must undergo potency test and voice test - Karnataka High Court orders




Nithyananda must undergo potency test and voice test - Karnataka High Court orders


Justice has prevailed. Hon’ble High Court of Karnataka has ordered Nithyananda to undergo the medical test and voice test as ordered by Ramangara Court Magistrate in Jun 2012. Court has ordered that he should be taken into custody and tests ordered by Ramanagara court be conducted. Hon’ble court has also dismissed all the petitions filed by Accused 2, 3, 4, and 5 to quash the chargesheet.



All attempts by the accused to stall the process for the last 4 years using their lawyers have failed, as the Hon’ble High Court has seen through their delay tactics. The court on finding their case to be without any merits has dismissed all 4 petitions  by the 5 accused and sent them to face the trial. The Hon’ble Court has further ordered that proceedings in the lower court (at Ramanagara) must commence forthwith starting 28/7/2014.


நித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு



பாலியல் வழக்கில் நித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பிடதியில் அமைந்துள்ள நித்தியானந்தா தியானபீடத்தில் நடிகை ரஞ்சிதாபுடன் ஆபாசமாக நடந்து கொண்டதாக பாலியல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக நித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை செய்ய அனுமதி வழங்கி ராமநகரம் மாவட்ட நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக ராமநகரம் மாவட்ட நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புகளுக்கு எதிராக நித்தியானந்தா தாக்கல் செய்திருந்த 4 மனுக்களைவிசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் ஆண்மை பரிசோதனை, மருத்துவப் பரிசோதனை செய்ய, சிஐடி விசாரணை நடத்த இடைக்கால தடைவிதித்திருந்தது.

இந்நிலையில், நித்தியானந்தா தாக்கல் செய்த 4 மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆண்மை பரிசோதனை, மருத்துவப் பரிசோதனை நடத்துவதற்கு விதித்திருந்த இடைக்கால தடையை நீக்கி நித்தியானந்தாவின் 4 மனுக்களையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஜூலை 28 ஆம் தேதி நித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை மற்றும் மருத்துவப் பரிசோதனை நடத்துமாறும், இந்த வழக்கு விசாரணைக்கு நித்தியானந்தா ஒத்துழைக்காவிட்டால் தங்கள் வசம் எடுத்துக்கொண்டு விசாரணை நடத்துமாறு காவல் துறையினருக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
http://tamil.webdunia.com/
http://www.maalaimalar.com/2014/07/16163013/Karnataka-High-Court-orders-to.html
http://news.vikatan.com/article.php?module=news&aid=30227
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=125323
---------------------------------------------------------------------------

ನಿತ್ಯಾನಂದ ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆಗೆ ಕೋರ್ಟ್ ಅಸ್ತು

ಬೆಂಗಳೂರು, ಜು.16: ಸ್ವಯಂ ಘೋಷಿತ ದೇವ ಮಾನವ ನಿತ್ಯಾನಂದ ಸ್ವಾಮೀಜಿ ಅವರ ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆ ನಡೆಸಲು ಇದ್ದ ತಡೆಯಾಜ್ಞೆಯನ್ನು ಹೈಕೋರ್ಟ್ ಬುಧವಾರ ತೆರವುಗೊಳಿಸಿದೆ. ಈ ಮೂಲಕ ನಿತ್ಯಾನಂದ ಅವರು ಕ್ರಿಮಿನಲ್ ಕೇಸಿಗೆ ಸಂಬಂಧಿಸಿದಂತೆ ಸಿಐಡಿಯಿಂದ ವಿಚಾರಣೆ, ವೈದ್ಯಕೀಯ ಪರೀಕ್ಷೆಗೆ ಒಳಪಡಬೇಕಿದೆ. ನಿತ್ಯಾನಂದ ಆಶ್ರಮವಾಸಿಯಾಗಿದ್ದ ಆರತಿ ಹಾಗೂ ಇನ್ನಿತರು ನೀಡಿದ್ದ ದೂರನ್ನು ಆಧಾರವಾಗಿಟ್ಟುಕೊಂಡು ಸಿಐಡಿ ಪೊಲೀಸರು ಸಿಆರ್ ಪಿಸಿ 53(ಎ) ಅಡಿಯಲ್ಲಿ ಪ್ರಕರಣ ದಾಖಲಿಸಿಕೊಂಡು ವಿಚಾರಣೆ ನಡೆಸಿದ್ದಾರೆ. ಹೈಕೋರ್ಟ್ ನ್ಯಾ. ವಿ ಜಗನ್ನಾಥನ್ ಅವರಿರುವ ನ್ಯಾಯಪೀಠ ನೀಡಿರುವ ಆದೇಶದ ಪ್ರಕಾರ ಸಿಐಡಿ ಪೊಲೀಸರು ಈ ಕೂಡಲೇ ನಿತ್ಯಾನಂದ ಸ್ವಾಮೀಜಿಯನ್ನು ಬಂಧಿಸಿ ವಿಚಾರಣೆಗೆ ಒಳಪಡಿಸಬಹುದಾಗಿದೆ. ಬಿಡದಿ ಧ್ಯಾನಪೀಠದ ನಿತ್ಯಾನಂದ ಸ್ವಾಮೀಜಿಯನ್ನು ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆ, ಧ್ವನಿ ಪರೀಕ್ಷೆ ಸೇರಿದಂತೆ ಇತರರನ್ನು ವೈದ್ಯಕೀಯ ಪರೀಕ್ಷೆಗೆ ಒಳಪಡಿಸಲು ರಾಮನಗರದ ಮ್ಯಾಜಿಸ್ಟ್ರೇಟ್ ನ್ಯಾಯಾಲಯಕ್ಕೆ ಹೈಕೋರ್ಟ್‌ ನಿರ್ದೇಶಿಸಿದೆ. ಜು.28ರಿಂದ ಸಾಕ್ಷಿ ವಿಚಾರಣೆ ನಡೆಸಬಹುದು. ಆರೋಪಿಯನ್ನು ಕಸ್ಟಡಿಗೆ ತೆಗೆದುಕೊಳ್ಳಲು ಅನುಮತಿ ನೀಡಲಾಗಿದೆ ಎಂದು ಆದೇಶದಲ್ಲಿ ಹೇಳಲಾಗಿದೆ. ಲೈಂಗಿಕ ಕಿರುಕುಳ ಹಾಗೂ ಅತ್ಯಾಚಾರ ಆರೋಪಗಳ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆ ನಡೆಸುವಂತೆ ಆದೇಶಿಸಿದ ರಾಮನಗರ ಕೋರ್ಟ್‌ ಆದೇಶ ನೀಡಿತ್ತು. ಈ ಆದೇಶವನ್ನು ಪ್ರಶ್ನಿಸಿ ಬಿಡದಿಯ ನಿತ್ಯಾನಂದ ಸ್ವಾಮೀಜಿ ಸೋಮವಾರ ಹೈಕೋರ್ಟ್‌ಗೆ ಅರ್ಜಿ ಸಲ್ಲಿಸಿದ್ದರು. [ನಿತ್ಯಾನಂದ 'ಗುರು' ಪೂರ್ಣಿಮೆಗೆ ಅಡ್ಡಿ] ಬಿಡದಿ ಧ್ಯಾನದ ಮಠದ ಭಕ್ತಾದಿಗಳು ನಿತ್ಯಾನಂದ ಸ್ವಾಮಿ ವಿರುದ್ಧ ಅತ್ಯಾಚಾರ ಹಾಗೂ ಲೈಂಗಿಕ ಕಿರುಕುಳ ಪ್ರಕರಣಗಳನ್ನು ದಾಖಲಿಸಿದ್ದರು. ತಮ್ಮ ವಿರುದ್ಧದ ಆರೋಪಗಳನ್ನು ತಳ್ಳಿ ಹಾಕಿದ್ದ ನಿತ್ಯಾನಂದ ಸ್ವಾಮೀಜಿ, ತಮಗೆ ಲೈಂಗಿಕ ಚಟುವಟಿಕೆಯಲ್ಲಿ ತೊಡಗುವ ಸಾಮರ್ಥ್ಯವಿಲ್ಲ ಎಂದು ಪ್ರತಿಪಾದಿಸಿದ್ದರು. ಈ ಬಗ್ಗೆ ವಿಸ್ತಾರವಾಗಿ ಅಮೆರಿಕ ವೈದ್ಯರು ನೀಡಿರುವ ಪ್ರಮಾಣ ಪತ್ರವನ್ನು ಆಶ್ರಮ ವೆಬ್ ತಾಣದಲ್ಲಿ ಪ್ರಕಟಿಸಿದ್ದಾರೆ. ಆದರೆ, ನಿತ್ಯಾನಂದ ಸ್ವಾಮೀಜಿಯನ್ನು ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆಗೆ ಒಳಪಡಿಸುವಂತೆ ರಾಮನಗರ ಜೆಎಂಎಫ್ಸಿ ಕೋರ್ಟ್‌ ಜೂನ್‌ 12., 2012ರಂದು ಆದೇಶಿಸಿತ್ತು. ಇದನ್ನು ಹೈಕೋರ್ಟ್‌ನಲ್ಲಿ ಪ್ರಶ್ನಿಸಿದ್ದ ನಿತ್ಯಾನಂದ ಸ್ವಾಮೀಜಿ ಪರ ವಕೀಲರಾದ ಸಿವಿ ನಾಗೇಶ್ ಅವರು, ಜೆಎಂಎಫ್ಸಿ ನ್ಯಾಯಾಲಯದ ಆದೇಶ ರದ್ದು ಮಾಡುವಂತೆ ಕೋರಿದ್ದರು. ಆದರೆ, ತಡೆಯಾಜ್ಞೆ ಮಾತ್ರ ಸಿಕ್ಕಿತ್ತು. ಈಗ ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆ ನಡೆಸುವಂತೆ ಹೈಕೋರ್ಟ್ ಏಕಸದಸ್ಯ ಪೀಠ ಆದೇಶಿಸಿದೆ.

Read more at: http://kannada.oneindia.in/news/bangalore/hc-orders-self-styled-godman-nithyananda-undergo-potency-test-086193.html

Sunday, July 13, 2014

கர்நாடகத்தை விட்டு நித்யானந்தா வெளியேற வேண்டும்: கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம்


சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா கர்நாடகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி, பெங்களூர் அருகே பிடதியில் உள்ள அவரது ஆசிரமம் முன், கன்னட அமைப்பினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெங்களூர் அருகே, ராம்நகர் மாவட்டம், பிடதியில் 'தியான பீடம்' என்ற பெயரில் நித்யானந்தாவின் ஆசிரமம் உள்ளது.
இங்கு சனிக்கிழமை குரு பூர்ணிமா சிறப்பு பூஜை நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. பெங்களூர் - மைசூர் நெடுஞ்சாலையில் சுமார் 25 கி.மீ. தூரம் வைக்கப்பட்டிருந்த பிளெக்ஸ் பேனர்களை கன்னட அமைப்பினர் வெள்ளிக்கிழமை தீயிட்டு கொளுத்தினர்.
கன்னட அமைப்புகளின் எதிர்ப்பை மீறி சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பிடதி ஆசிரமத்தில் குரு பூர்ணிமா பூஜை தொடங்கியது. இதில் கர்நாடகம் மட்டுமன்றி, அண்டை மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.
இதனிடையே கன்னட சலுவளி கட்சி, கன்னட நவநிர்மாண் சேனை, கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பிடதி பேருந்து நிலையத்தில் இருந்து நித்யானந்தாவின் ஆசிரமம் நோக்கி ஊர்வலமாக சென்றன‌ர். பின்னர் ஆசிரமத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து அனைவரும் ஆசிரமம் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். நித்யானந்தா பேனர்களை அவமரி யாதை செய்தும், தீயிட்டு கொளுத்தியும் அவர்கள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து கன்னட சலுவளி கட்சியின் மாநில தலைவர் மது கவுடா கூறும்போது, ஆபாச வீடியோவில் சிக்கி சிறைக்குச் சென்ற போலி சாமியார் நித்யானந்தா, இந்து மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி வருகிறார்.
ஆசிரமம் நடத்துவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து பல குடும்ப பெண் களின் வாழ்க்கையை சீரழித்து வருகிறார். அவர் மீதுள்ள வழக்குகளை உடனடியாக விசாரித்து அவரை சிறையில் அடைக்க வேண்டும். அவரது ஆசிரமத்துக்கு கர்நாடக அரசு உடனே சீல் வைக்கவேண்டும்.
நித்யானந்தா கர்நாடகத்தை விட்டு வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் அவரை துரத்துவோம்” என்றார்.இந்தப் போராட்டம் காரணமாக சனிக்கிழமை மாலை பிடதியில் நடைபெற இருந்த நித்யானந்தாவின் ரத ஊர்வலத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர்.
http://tamil.thehindu.com/
http://www.dinamalar.com/news_detail.asp?id=1020223
http://www.vavuniyanet.com/news/38364

Saturday, July 12, 2014

நித்யானந்தா போஸ்டர்களை கிழித்து எறிந்த கன்னட அமைப்புகள்

நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள குரு பூர்ணிமா பூஜையையொட்டி பெங்களூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்பு போஸ்டர்கள், பிளெக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனை வெள்ளிக்கிழமை கன்னட சலுவளி கட்சியினர் கிழித்து எறிந்தனர்.
சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவின் 'தியான பீடம்' ஆசிரமம் பெங்களூரை அடுத்த பிடதியில் உள்ளது. 2010-ம் ஆண்டு நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை யறையில் உள்ளது போன்ற வீடியோ ஊடகங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பிடதியில் உள்ள அவரது ஆசிரமத்தை பல்வேறு கன்னட அமைப்பினர் அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்தினர்.

நித்யானந்தா மீது பல்வேறு புகார்கள் குவிந்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்திருக்கும் அவர், பிடதி ஆசிரமத்தில் நடத்தும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக் கின்றன. மேலும் நித்யானந்தா உடனடியாக கர்நாடகாவை விட்டு வெளியேற வேண்டும் என போராடி வருகின்றன.

குரு பூர்ணிமா பூஜை

இந்நிலையில் பிடதி ஆசிரமத்தில் சனிக்கிழமை குரு பூர்ணிமா பூஜை நடைபெற இருக்கிறது.இதனையொட்டி அவரின் சீடர்கள் வெள்ளிக்கிழமை பெங்களூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 25 கி.மீ. தூரத்திற்கு பக்தர்களை வரவேற்கும் போஸ்டர்களையும் பிளெக்ஸ் பேனர்களையும் வைத்துள்ளனர். பிடதி ஆசிரமத்திற்கு செல்லும் வழியில் நித்யானந்தாவின் பிரம்மாண்ட கட் அவுட்டையும் வைத்துள்ளனர். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த கன்னட சலுவளி கட்சி தொண்டர்கள் வெள்ளிக்கிழமை அந்த போஸ்டர்களை கிழித்தெறிந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அக்கட்சியின் மாநில தலைவர் மது கவுடாவும் தொண்டர்களுடன் சேர்ந்து சாலையின் இரு பக்கங்களிலும் வைக்கப்பட்டிருந்த நித்யானந்தாவின் பிளெக்ஸ் பேனர்களை கிழித்தார். நித்யானந்தாவிற்கு எதிராக ஆபாச கோஷங்களை எழுப்பிய கன்னட அமைப்பினர், பேனர்களை தீயிட்டும் கொளுத்தினர்.

முற்றுகை போராட்டம்

இதனிடையே மது கவுடா செய்தியாளர்களிடம் பேசுகை யில், “ஆபாச வீடியோவில் சிக்கிய நித்யானந்தா இன்னமும் சாமியார் எனக்கூறி மக்களை ஏமாற்றுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. ஜாமீனில் வெளிவந்திருக்கும் அவர் பிடதியில் எவ்வித ஆன்மீக நிகழ்ச்சியிலும் ஈடுபட கூடாது. பொதுமக்களை திரட்டக் கூடாது என ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் சட்டத்தை மதிக்காமல் நித்யானந்தா தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறார். தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடக மக்களை ஏமாற்றும் நித்யானந்தாவை கூடிய விரைவில் இந்த மண்ணை விட்டு துரத்துவோம். எங்களது எதிர்ப்பையும் மீறி போலி சாமியார் நித்யானந்தா சனிக்கிழமை பூஜையில் ஈடுபட்டால், ஆசிரமத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்''என்றார்.

143 (?????????)நாடுகளுக்கு நேரலை
இந்நிலையில் பிடதி ஆசிரமத்தை தொடர்பு கொண்டு விசாரித்த போது, ‘‘பிடதி ஆசிரமத்தில் இதுவரை தொடர்ந்து 12 ஆண்டுகள் குரு பூர்ணிமா விழா நடத்தி இருக்கிறோம். எங்களுடைய சுவாமிஜி ஒரு முறை ஒரு நிகழ்ச்சியை அறிவித்து விட்டார் என்றால், யார் தடுத்தாலும் அதை நிறுத்த முடியாது.
காலை 9 மணியில் இருந்து இரவு 10 மணி வரை சுவாமிஜி பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். இது நேரலையாக 143 (??????????)நாடுகளில் உள்ள பக்தர்களுக்கு தடங்கலின்றி ஒளிபரப்பாகும்'' என்றனர்.
http://tamil.thehindu.com/india/http://tamil.thehindu.com/india/
http://tamil.oneindia.in/news/india/extern-nithyananda-from-karnataka-activists-205780.html#slide758295

Sunday, June 29, 2014

Nithyananda game (நித்தியானந்தா)


வெள்ளி, ஜூன் 27, 2014





லத்த எதிர்ப்பால் பொதுமக்களைச் சந்திக்க பயந்துகொண்டிருந்த ’மன்மத சாமியார்’ நித்தியானந்தா, தற்போது பாத பூஜை நிகழ்ச்சிகளுக்காக 15 நாட்கள் தமிழகம் முழுக்க டூரை தொடங்கியிருக் கிறார். ஆன்மிகத்தை அசிங்கப்படுத்தியதால், பொதுமக்கள் தன்னைத் தாக்கலாம் என்ற அச்சத்தில், தலைக்கு தினசரி 5 ஆயிரம் கூலி பேசி, 30 பவுன்ஸர்களை பாதுகாப் புக்காக தன்னோடு இந்த டூரில் வைத்துக் கொண்டிருக்கிறார். பவுன்ஸர்கள் என்பது அடியாட்களின் மாடர்ன் பெயர். பல்வேறு அசிங்கமான வழக்குகளில் சிக்கியிருக்கும் நித்தி, எப்படி சுதந்திரமாக டூர் வருகிறார்? அவர் மீதான வழக்குகள் என்ன ஆயிற்று? என விசாரணையில் இறங்கினோம். 



துரத்தப்பட்ட நித்தி

ரஞ்சிதாவுடனான ஆபாச சி.டி. வெளியாகி,  சிறைக்கு சென்று வந்தபிறகு நித்தியின் சாமியார் இமேஜ் முழுதாகச் சரிந்தது. அவரது சீடர்கள் எல்லாம்  அவரை விட்டு விலகத் தொடங்கினர். போகிற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் நித்தி மீது கோபத்தைக் காட்டத் தொடங்கினர். கர்நாடக மக்க ளும் அவரைத் துரத்தியடித்ததால்... திகைத்துப்போன நித்தி, மதுரை ஆதீனத்தை தனக்கே உரிய ’சாம பேத தண்டங்களால்’ மயக்கி, இளைய ஆதீனமாய் முடிசூட்டிக்கொண்டார். இதற்கு பக்தர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதாலும், தமிழக அரசுத் தரப்பின் கோபப் பார்வை நித்தி மீது திரும்பிய தாலும், நித்தியை மடத்தில் இருந்து, மதுரை ஆதீனம் துரத்தி யடித்தார். 

இதன்பின் தமிழகத்தில் அதிகம் தலைகாட்ட பயந்து, அங்கே இங்கே என ஒளிந்து திரிந்த நித்தி, தற்போது வெளியே முகம் காட்ட ஆரம்பித்திருக்கிறார். 


பாதபூஜை ஏஜண்டுகள்

கடந்த 13-ந் தேதி மும்பையில் 200 பேர்களைத் திரட்டி, தியான நிகழ்ச்சியை நடத்திய நித்தி, 16-ந் தேதி ஹைதராபாத்தில்  தியானக் கூட்டத்தை ஏற்பாடு செய் திருந்தார். அவருக்கு எதிராக பக்தர்கள் திரளுவதை அறிந்த நித்தி, மழை பெய்யாத நிலையிலும்... மழை வரலாம் என்று கூறி அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு, ரஞ்சிதா சகிதம் திருப்பதி கோயிலுக்குப் போய் தரிசனம் செய்தார். அங்கு அவரை எவரும் கண்டுகொள்ளாத போதும், தானாக திருப்பதி பக்தர்கள் பக்கம் திரும்பி கையை உயர்த்தி, ரெடிமேட் சிரிப்புடன் அவர்  ஆசிர்வாதம் செய்தது பரிதாபமாக இருந்தது. இந்த நிலையில்தான் நித்தியின் தமிழக ஏஜண்டுகளான  மூவர், 15 நாள் பாத பூஜை நிகழ்சியை ஏற்பாடு செய்தனர். யாரந்த ஏஜண்டுகள்? அரசு போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக அதிகாரி நடராஜன்,  பி.எஸ்.என். எல் அதிகாரி கண்ணன், சேலம் ஓட்டல் அதிபர் ரிஷி ஆகியோர்தான் அந்த மூவர்.

நித்தி மீதான செக்ஸ் வழக்கு

ஆசிரம பக்தைகளை மிரட்டியும் ஒப்பந்தம் போட்டும் கற்பழித்து மோசடி செய்தது, கொலை மிரட்டல் விடுத்தது என நித்தி மீது, லெனின் கருப்பன் கொடுத்த புகார், கர்நாடக ராம்நகர் காவல் நிலையத்தில் வழக்காகப் பதிவு செய்யப்பட்டது.  இது தொடர்பான குற்றப்பத்திரிகை ராம்நகர் நீதிமன்றத்தில் 2010 நவம்பர் 27-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. எனினும் அந்த வழக்கில் நித்தி உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு இன்னும் குற்றப்பத்திரிகை வழங்கப்படவே இல்லை. 

இதேவழக்கில், நித்தியின் முன்னாள் சீடர் வினய் பரத்வாஜ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், 2012 மார்ச்சில் இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆசிரமத்திற்கு வரும் பக்தைகளிடம், மா சதானந்தா என்கிற ஜமுனாராணி, செக்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியதை யும் அதற்கு அவரது கணவரான சதானந்தா என்கிற தனசேகரன் உடந்தையாக இருந்ததையும் தன் வாக்குமூலத்தில் குறிப்பிட்டி ருந்தார் வினய் பரத்வாஜ்.  இருந்தும் அந்த வழக்கை சகல உபாயங்களையும் கையாண்டு இழுத்தடித்தபடியே இருக்கிறது நித்தி தரப்பு. எப்படி?

அரசு வழக்கறிஞர்களை மாற்றிய நித்தி தரப்பு

நித்தி டீம் மீது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்ட நிலையில் 2011 ஜனவரியில், வழக்கில் இருக்கும் ஏ-2 கோபால் சீலம்ரெட்டி, ஏ-3 சிவ வல்லபனேனி என்கிற சச்சிதா னந்தா, ஏ-4 தனசேகரன் என்கிற சதானந்தா, ஏ-5 ராகினி (சச்சிதானந்தாவின் மனைவி) இந்த நால்வரும் கர்நாடக ஹைகோர்ட்டுக்கு போய், தங்கள் மீதான குற்றப்பத்திரிகையை நிறுத்தி வைக்கும்படி கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி.யின் பப்ளிக் பிராஸிகியூட்டர் சி.ஹெச்.ஜாதவ் ஆஜ ரானார். வழக்கை விரைந்து டிரையலுக்குக் கொண்டுவரவேண் டும் என இவர் நீதிமன்றத்திடம் பெட்டிஷன் செய்ததோடு வழக்கில் தீவிரம் காட்டினார். இதைக்கண்டு திகைத்துபோன நித்தி தரப்பு, வழக்கில் சி.பி.சி.ஐ.டி சார்பில் ஜாதவ் ஆஜராகக் கூடாது என்றது.  இதைத் தொடர்ந்து  சி.பி.சி.ஐ.டி.யின் பப்ளிக் பிராஸிகியூட்டராய் கோவிந்தன் நியமிக்கப்பட்டார். இவர் ராஜீவ்காந்தி கொலையாளிகளான சிவராஜன், தணு தொடர் பான வழக்கில் பெங்களூரில் ஆஜரானவர். இவரும் அதிரடியாக வாதம் வைப்பார் என்பதைப் புரிந்து கொண்ட நித்தி தரப்பு, இவரும் சி.பி.சி.ஐ.டி. சார்பில் ஆஜராகக் கூடாது என்று நீதி மன்றத்தில் போராடியது. இதைத்தொடர்ந்து அவரையும் வழக்கி லிருந்து ஒதுக்கிய நீதிமன்றம், சாதாரண அரசு வழக்கறிஞரே ஆஜராகட்டும் என்று சொல்லிவிட்டது.

குற்றவாளிகளுக்காக வாதம் செய்த அரசு வழக்கறிஞர்

இந்த வழக்கு 2011 ஜூனில் இருந்து 2013 பிப்ரவரி வரை டிரையலுக்கு வரவே இல்லை. எனவே 2013 மார்ச்சில் லெனின் கருப்பன், நித்தி தரப்பு மீதான வழக்கை விரைவில் விசாரிக்க வேண்டும்’ என கர்நா டக ஹைகோர்ட்டில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.  இதை நித்தி தரப்பு எதிர்த்தது. இதில் ஆச்சரியமில்லை. ஆனால் சி.பி.சி.ஐ.டி. சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞரே, லெனின் கருப்பன் இதில் பாதிக்கப்பட்டவ ரல்ல, எனவே அவர் இந்த பெட்டிஷனைப் போடக்கூடாது’என குற்றவாளிகளான நித்தி தரப்பிற்கு சாதகமாக வாதம் செய்தார். இதைத் தொ டர்ந்து கர்நா டக ஹை கோர்ட், லெனின் கருப்பனின் மனுவைத் தள்ளுபடி செய்தது. 

ஆர்த்திராவுக்கு எதிர்ப்பு தெரிவித்தநித்தி தரப்பு

நித்தியால் வல்லுறவுக்கு ஆளான ஆர்த்திராவ், 2014 பிப்ரவரியில், தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக்கொள்ள வேண்டும்’ என அதே ஹைகோர்ட்டில் முறையிட்டார். உடனே நித்தி தரப்பு, ஆர்த்திராவ் இந்த வழக்கில் புகார்தாரரல்ல. எனவே இவரையும் வழக்கில் சேர்க்கக் கூடாது’ என வாதிட்டது. ஆர்த்தி தரப்பிற் காக சுப்ரீம்கோர்ட் வழக்கறிஞர் ஆஜராக, 8  மணி நேரம் கடும் வாதம் நடந்தது. இந்தநிலையில் நித்தி தவிர்த்த நான்கு குற்றவாளிகளும், நித்திக்கு ஜூன் 2012-லேயே மெடிக்கல் டெஸ்ட் எடுத் திருக்கவேண்டும். வழக்கிற்கு அடிப்படை யான இந்த டெஸ்ட்டே இன்னும் எடுக்கப்படாததால், ஆர்த்திராவ் இந்த வழக்கில் சேர்க்கப்படக் கூடாது’ என தனித்தனியாக மனு போட்டனர். வழக்கை விசாரித்த கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி சத்ய நாராயணராவோ, ஆர்த்திராவை வழக்கில் சேர்க்கலாமா  கூடாதா என்ற தீர்ப்பை ரிசர்வ் பண்ணி வைத்துவிட்டார். 

அவகாசம் கேட்ட அரசு வழக்கறிஞர்

தீர்ப்பு தங்களுக்கு எதிராக வரும் என்று யூகித்த நித்தி தரப்பு மேலும், வழக்கை இழுத்தடிக்க, பகீரதப் பிரயத்தனங் களில் இறங்கியது. இந்த நிலையில் ஜூன் 13-ல் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நித்தியின் வழக்கறி ஞர் தனக்கு உடல்நலம் சரியில்லை என்றும், எனவே வழக்கைத் தள்ளிவைக்க வேண்டும் என்றும் முறையிட் டார். இதைத் தொடர்ந்து ஜூன் 17-க்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டது. 17-ந் தேதி இந்த வழக்கு விசா ரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர் ஆஜராகி ‘வழக்கு ஆவணங்களை நான் முழுதாகப் படிக்க, கால அவகாசம் வேண்டும்’ என்றார். இதைத் தொடர்ந்து வழக்கு ஜூன் 27-க்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. வழக்கில் ஆர்த்திராவ் சேர்க்கப்பட்டால், அடுத்து நித்திக்கு ஆண்மை சோதனை நடத்தும் வேலைகள் தொடங்கிவிடும். அது முடிந்து அவரது ஆண்மை நிரூபிக்கப்பட்டால், ராம்நகர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் 2 குற்றப் பத்திரிகைகளின் அடிப்படையில், இறுதிக்கட்ட விசாரணை நடக்கும். எனவே தனது தலைக்கு மேல் கத்தி தொங்குவதை உணர்ந்த நித்தி, பீதியில் ஏறுக்கு மாறாக நடக்க ஆரம்பித்திருக்கிறார்.

நிலுவையில் இருக்கும் நித்தி வழக்குகள்

நித்தி தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆர்த்திராவ்,  2012 அக்டோபரில், கர்நாடக மாநில ஹென்னூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அப்படியே பெண்டிங்கில் இருக்கிறது. எவரும் விசா ரிக்கவில்லை. தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நித்தி மீது லெனின் கருப்பன்,  அங்குள்ள விதான் சௌதா காவல்நிலையத்தில் 2010-ல் கொடுத்த புகாரும் விசாரிக்கப்படாமல் அப்படியே பெண்டிங்கில் இருக்கிறது. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் லெனின் கருப்பன், நித்தி மீது அடுத்தடுத்துக் கொடுத்த 2 கொலை மிரட்டல் புகார்களும் பெண்டிங்கில் வைக்கப்பட்டிருக்கிறது. திருச்சி, ராஜபாளையம், சேலம், ஹைதராபாத் ஆகிய இடங்களில் நிலங்களை அபகரித்ததாக நித்தியால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார்களும் விசாரிக்கப்படவே இல்லை. செக்ஸ் புகார்களைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் இருக்கும்  நித்தியின் ஆசிரமத்தை கைப்பற்ற, தமிழக அரசின் அறநிலையத்துறை மேற்கொண்ட முயற்சிகளும் ஸ்ட்ரக் ஆகி நிலுவையில் நிற்கிறது.

நித்தியின் பொய்ப் புகார்கள்

தனக்கு எதிராகப் புகார் கொடுத்தவர்கள் மீதெல்லாம், ஆசிரமப் பெண்களைக் கற்பழிக்க முயன்றதாகவும் பணம் கேட்டு மிரட்டியதாகவும் புகார் கொடுப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறார் நித்தி. இந்த பாணியில் அவர் கொடுத் திருக்கும் சில புகார்களை மட் டும் பார்க்கலாம். நடிகை ரஞ்சிதா வை கற்பழிக்க முயன்றதாக லெனின் கருப்பன் மீது வழக்குப் போட்டிருக்கிறது நித்தி தரப்பு. நித்தி-ரஞ்சிதா ஆபாச வீடியோ தொடர்பாக மட்டும் ராம்நகர் கோர்ட்டில் லெனின் கருப்பன் மீது 9 வழக்குகள் இருக்கின்றன. இதே வழக்கு வாரணாசியிலும் போடப்பட்டிருக்கிறது. இந்த ஆபாச வீடியோவின் அடிப் படையில் அமெரிக்காவில் இருக்கும் கலிபோர்னியாவில் லெனின் மீதும் ஆர்த்திராவ் மீதும் வழக்கு போடப்பட்டி ருக்கிறது. அமெரிக்காவுக்கு ஒரு முறை கூட போகாத, பாஸ் போர்ட்டே இல்லாத லெனின் கருப்பன், அமெரிக்காவில் கற் பழிப்பு முயற்சியில் ஈடுபட்டதாக, அங்குள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நீதி மன்றத்தில் வழக்கு போட்டிருக் கிறது நித்தி தரப்பு. நித்தியிடம் நிலத்தை தானமாகக் கொடுத்த சிலர்,  நித்தியின்  சுயரூபம் தெரிந்து, நிலத்தைத் திருப்பிக் கேட்ட தால், அவர்கள் மீதெல்லாம் கற்பழிப்பு முயற்சி வழக்கைப் போட் டிருக்கிறார் நித்தி.  ஆசி ரமத்துக்கு கம்ப்யூட்டர் இணைப்புகள் கொடுத்த தற்கான பண பாக்கியைக் கேட்ட பள்ளிப்பாளையம் செங்குட்டுவேல் மீதும் கற்பழிப்பு முயற்சி வழக்கு பாய்ந்திருக்கிறது.

ஆர்த்தியைக்குறி வைத்துத் துரத்தும் நித்தி

ஆர்த்திராவ் கர்நாடக ஹைகோர்ட்டில் போட்ட பெட்டிஷனால் தனக்கு ஆபத்து நெருங்குவதை உணர்ந்த நித்தி, அந்த வழக்கு விசாரணைக்கு வரும்முன், அவரை தனது பண பலத்தால் அமெரிக்க சிறையில் அடைக்கும் முயற்சியில் இருக்கி றார். இதற்காக அமெரிக்காவின் மெக்ஸிகன் மாநிலம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் வழக்குகள் போடப் பட்டிருக்கிறது. அதில் ஒரு வழக்கை தீவிரப்படுத்தி ஆர்த்தி ராவை எப்படியும் கைது செய்து அமெரிக்க சிறையில் அடைந்து விட வேண்டும் என நித்தி தரப்பு ஜரூராக இருக்கிறது. அமெரிக்க சட்டப்படி, ஒருவர் கைதானால் ஜாமீனே கிடையாது. 2 ஆண்டு சிறைவாசத்துக்குப் பின்னர்தான், வழக்கில் அவர் அப்பீலே செய்ய முடியும். இதைத் தெரிந்துகொண்ட நித்தி, வினய் பரத்வாஜை பொய்ப் புகார் கொடுத்து அமெரிக்க சிறையில் அடைத்தது போலவே, ஆர்த்திராவையும் அமெரிக்க சிறையில் அடைத்து வைத்துவிட்டால், இங்குள்ள வழக்கில் ஆர்த்தி ராவ் ஆஜராக முடியாது. அதை வைத்து நாம் தப்பிவிடலாம் என்பதுதான் நித்தி  போட்டு வைத்திருக்கும் வில்லங்கக் கணக்கு. 

சாமியார் வேடத்தில் தவறு செய்தவர் நித்தி. அதை கண்டு பிடித்து இனியும் யாரும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று அம்பலப்படுத்தியவர்கள் நக்கீரனும், லெனின் கருப்பனும், ஆர்த்தியும். ஆனால், நித்தி பணத்தை வைத்துக்கொண்டு தப்பிப்பதோடு மற்றவர்கள் மீது பொய் வழக்குகளையும் போட்டு கொடுமைப்படுத்துகிறார். இதற்கும் சிலர் ஆதரவு உள்ளது. 

நித்தி தனது பண பலத்தால், தன்னால் பாதிக்கப் பட்ட பலரையும் தோற்கடித்துவரும் நிலையில், நமது நக்கீரன் சட்டரீதி யாகப் போராடி, தகுந்த ஆதாரங் களைக் கொண்டு நிரூபித்து, "நித்தி யைப் பற்றி நக்கீரன் வெளியிட்ட செய்தி கள் உண்மையான வை' என நீதிமன்றத் தில் வெற்றித் தீர்ப் பைப் பெற்றிருக் கிறது. இதுவே நித்தியின் யோக்கிய தையைக் காட்டும்.

Wednesday, June 18, 2014

sex swmi Nithyananda visits Tirumala along with Ranjitha - Tv news


நித்யானந்தா– ரஞ்சிதா திருப்பதியில் சாமி தரிசனம்

திருப்பதி, ஜூன். 18–
nithi rajni thrupathi
nithi ranji 18.6.2014
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை ரஞ்சிதா.
இவர் சாமியார் நித்யானந்தாவுடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இருவருக்கும் எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டது. நித்யானந்தாவின் ஆசிரமங்கள் தாக்கப்பட்டன. கர்நாடக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதற்கிடையே தனக்கும், நித்யானந்தாவுக்கும் இடையே குரு– பக்தை உறவு மட்டுமே இருப்பதாகவும், சிலர் தேவையில்லாமல் அவதூறு கிளப்பி வருவதாகவும் ரஞ்சிதா கூறினார்.
கடந்த டிசம்பர் மாதம் சாமியார் நித்யானந்தாவின் பிறந்தநாளில் அவரிடம் முறைப்படி தீட்சிதை பெற்று ரஞ்சிதா சன்னியாசியானார்.
இந்த நிலையில் சாமியார் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா உள்ளிட்ட சீடர்களுடன் திருப்பதியில் இன்று காலை சாமி கும்பிட்டார்.
அவர் தங்க நகைகளை கழுத்தில் அணிந்து இருந்தார். அங்குள்ள பக்தர்கள் அவரை கண்டு கொள்ளவில்லை. அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கிவிட்டு நித்யானந்தா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Saturday, January 4, 2014

திருச்செங்கோட்டில் நித்தியானந்தா சீடர்களை கண்டித்து கணவன்–மனைவி உண்ணாவிரதம்

திருச்செங்கோடு, ஜன. 3–

திருச்செங்கோடு வீரராகவர் தெருவை சேர்ந்தவர் செங்கோட்டுவேல் (40), இவரது மனைவி சுகந்தி (37). இவர்கள் இந்த பகுதியில் பிரவுசிங் சென்டர் நடத்தி வருகிறார்கள்.

இவர்கள் நித்தியானந்தாவின் தியான வகுப்புகளை இணைய தளத்தில் விளம்பரம் செய்ய திருச்செங்கோடு தியான பீட நிர்வாகிகளிடம் ஒப்பந்தம் செய்தனர். அதன்படி தனசேகர் என்கிற சதானந்தா உள்ளிட்ட நிர்வாகிகள், பணத்தை தரவில்லை என்று கூறி பிரவுசிங் நடத்தி வந்த தம்பதியினர் திருச்செங்கோடு டவுன் போலீசில் புகார் செய்தனர். ஆனால் இதுவரை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து நித்தியானந்தா தியான பீடத்தினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, திருச்செங்கோடு வீரராகவர் தெருவில் உள்ள தங்களது வீட்டின் முன்பாக செங்கோட்டுவேல், அவரது மனைவி சுகந்தி ஆகியோர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

http://www.maalaimalar.com/2014/01/03103231/Tiruchengode-nithyananda-follo.html
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?PVN=114092