Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Thursday, September 11, 2014

பெங்களூருக்கு அருகே உள்ள ஆசிரமத்தை திருவண்ணாமலைக்கு மாற்றம் நித்யானந்தா முடிவு

பெங்களூர்
பெங்களூர் அருகே பிடுதியில் உள்ள தியான பீடம் திருவண்ணாமலைக்கு மாற்றப்படுவதாக நித்யானந்தா அறிவித்து உள்ளார்.
ஆண்மை பரிசோதனை
பெங்களூர் அருகே பிடுதியில் நித்யானந்தா தியான பீடம் அமைந்து உள்ளது. அங்கு நித்யானந்தா சாமியார் தங்கி இருந்து ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரிடம் சீடராக இருந்த ஆர்த்திராவ் என்ற பெண் பெங்களூர் பிடதி போலீஸ் நிலையத்தில் நித்யானந்தா மீது கற்பழிப்பு புகார் கூறினார். இந்த வழக்கு சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை ராமநகர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் நித்யானந்தா சாமியாருக்கு பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஆண்மை பரிசோதனை 5½ மணி நேரம் செய்யப்பட்டது.
சட்டப்படி நடவடிக்கை
இந்த பரிசோதனை முடிந்து நித்யானந்தா தனது தியான பீடத்திற்கு திரும்பியபோது அவரை பின்தொடர்ந்து தொலைக்காட்சி ஊடகங்களை சேர்ந்தவர்கள் செய்தி சேகரிக்க சென்றனர்.
தியான பீடத்தின் முன் பகுதியில் தொலைக்காட்சி ஊடக பிரதிநிதிகள் மீது நித்யானந்தாவின் சீடர்கள் தாக்கியதாக கூறி அவர்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். சில கன்னட அமைப்பினரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். ‘‘தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று போலீஸ் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
நித்யானந்தா இணையதள டி.வி.யில் தினமும் சொற்பொழிவு ஆற்றுகிறார். அதேபோல் அவர் நேற்று இணையதள தொலைக்காட்சியில் தனது பக்தர்களுக்கு ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். சொற்பொழிவை தொடங்கும் முன் ஒரு அறிவிப்பை வெளியிடுவதாக அவர் கூறினார்.
திருவண்ணாமலைக்கு மாற்றம்
அந்த அறிவிப்பை வெளியிட்டு அவர் தொடர்ந்து பேசுகையில், ‘‘பிடுதி தியான பீடத்தை திருவண்ணாமலைக்கு மாற்ற முடிவு செய்துள்ளேன். ஒட்டுமொத்தமாக அனைத்தும் இங்கிருந்து மாற்றப்படுகிறது. தினமும் நடைபெறும் பூஜைகள் உள்பட அனைத்தும் திருவண்ணாமலையிலேயே நடைபெறும். இந்த பிடுதி தியான பீடம் தொடர்ந்து செயல்படும். இனிமேல் நான் வழக்கு சம்பந்தமான விஷயங்களுக்காக மட்டுமே பெங்களூர் வருவேன்’’ என்றார்.
http://www.dailythanthi.com/News/India/2014/09/10011409/Nithyananda-ashram-near-Bangalore-namely-the-decision.vpf

தமிழகத்துக்கு ஆசிரமத்தை மாற்ற நித்யானந்தா முடிவு

கருத்துகள்

How to get rid of wrinkles
பெங்களூர்: பெங்களூர் பிடதியில் உள்ள தியானபீட ஆசிரமத்தை தமிழகத்துக்கு மாற்றப்போவதாக பாலியல் வழக்கில் சிக்கியுள்ள நித்யானந்தா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை அடுத்த பிடதியில் உள்ள தியானபீட ஆசிரமத்தின் மடாதிபதியான நித்யானந்தா மீது அவரது பெண் சீடரான ஆரத்திராவ், போலீசில் பாலியல் புகார் அளித்தார். இந்த குற்றச்சாட்டிற்கு நித்யானந்தா மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் பெங்களூர் சி.ஐ.டி போலீசார் விக்டோரியா மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர் குழுவை கொண்டு ஆண்மை பரிசோதனை செய்தனர். இது குறித்த அறிக்கை சிஐடி போலீசாருக்கு இன்னும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று வழக்கமாக சொற்பொழிவாற்றும் “ஜன்னலை திற காற்று வரும்“ என்ற நிகழ்ச்சியில் கன்னட அமைப்பு மற்றும் கர்நாடக போலீசாரை அவர் குற்றம் சாட்டி பேசினார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது; ஆன்மீகவாதியான என்னை கன்னட அமைப்பு மற்றும் கர்நாடக போலீசார் வேண்டுமென்றே குறை கூறி வருகின்றனர். மேலும் பொய்யான புகார் மற்றும் வழக்குகளை பதிவு செய்து, எனது ஆன்மீக வாழ்க்கைக்கு பங்கம் விளைவிக்கின்றனர். அவர்களது இடையூறில் இருந்து விடுபெறுவதற்காக எனது ஆசிரமத்தை பிடதியில் இருந்து திருவண்ணாமலைக்கு மாற்ற திட்டுமிட்டுள்ளேன். இதற்கு பக்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

அங்கு வழக்கம் போல எனது சொற்பொழிவு நிகழ்ச்சியை தொடருவேன் என்றார். அவரது இந்த கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கர்நாடகத்தை சேர்ந்த சட்ட நிபுணர்கள் குழு, நித்யானந்தா சட்டத்தில் இருந்து தப்பி செல்வதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். ஏனென்றால் கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் போது, தமிழகத்தில் இருந்தால், வழக்கு விசாரணையில் கலந்து கொள்ளாமல், காலஅவகாசம் கேட்கலாம் என்பதற்காக இதுபோன்ற நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=108776


No comments:

Post a Comment