Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Showing posts with label Nithiyananda. Show all posts
Showing posts with label Nithiyananda. Show all posts

Thursday, March 31, 2016

Thursday, February 18, 2016

Madras high court restrains Nithyananda from being head of four mutts

PTI | Feb 17, 2016


CHENNAI: The Madras high court has restrained controversial godman Swami Nithyananda from functioning as the head of four temple mutts in and around Tiruvarur.


Swami Nithyananda. (TOI file photo by K Sunil Prasad)

 Justice R Shivakumar also stayed further proceedings in a suit filed by Nithyananda pending before the principal subcourt in Nagapattinam in respect of properties of the mutts.


The judge granted an interim stay on Nithyananda continuing as the Madadhipathi of Somanatha Swami Temple and Mutt at Thiruvarur, Sri Po Ka Sathukkal Mutt at Vedaranyam, Sri Arunachal Gnanadesikar Swamigal, Sri Palasamy and Sankarasamy Mutt, Thiruvarur, and issued notice to him returnable by March 14.



The order was passed on Tuesday on a civil revision petition by Salem-based Sarada Niketan Samithi Trust members, including Swami Atmananda, who are also trustees of the four mutts.

Originally, Nithyananda filed a suit before the Nagapattinam subcourt seeking a declaration from it that he was the head of these mutts and Athmananda and others were non-trustees. He had also sought a relief of injunction restraining Athmananda from interfering in the administration and meddling with the properties of the mutts.



Athmananda in his petition submitted that Nithyananda had approached them and provided false assurance that he will improve the four mutts. But under the guise of making a donation of Rs 2 crore for the mutts, Nithyanananda filed a suit as if he was the administrator and tried to grab the properties by one way or other.

Stating that the suit was not maintainable and that they were the managing trustees and administrator of the above mentioned mutts, Athmananda and two others prayed before the high court to stay all further proceedings in the matter before the principal subcourt.

Source: Times of India




Saturday, November 21, 2015

Rape accused self-styled godman Nithyananda appears before court

Nov 21, 2015

Ramanagara: Controversial self-styled godman Nithyananda of Bidadi Dhyana Peetha appeared before the Sessions court in Ramanagar on November 21 in connection with the rape case in which he is the main accused.
Rape accused self-styled godman Nithyananda appears before court-1Five of his associates too were present for the questioning.

The CID made a chargesheet against Nithyananda for rape, unnatural sex, cheating, criminal intimidation and conspiracy. The 430-page-long chargesheet is before the CJM, Ramanagara. Nithyananda is facing criminal charges based on complaints made by former disciples in 2011. He was arrested and later released on bail.

Source: NewsKarnataka

 ನಿತ್ಯಾನಂದ ರಾಸಲೀಲೆ ಪ್ರಕರಣ: ವಿಚಾರಣೆ 3 ಗಂಟೆಗೆ ಮುಂದೂಡಿಕೆ
Published 21-Nov-2015





  00:20            00:32  

ಪ್ರಕರಣದ ವಿಚಾರಣೆಯನ್ನು ನ್ಯಾಯಾಲಯ ಮತ್ತೆ  ಮಧ್ಯಾಹ್ನ 3 ಗಂಟೆಗೆ ಮುಂದೂಡಿದೆ. ರಾಮನಗರ ಜಿಲ್ಲಾಸತ್ರ ನ್ಯಾಯಾಲಯದ 3 ನೇ ವಿಭಾಗಕ್ಕೆ ನಿತ್ಯಾನಂದ ಮತ್ತು ಶಿಷ್ಯರು ಹಾಜರಾಗಿದ್ದಾರೆ. 
ಸತ್ಸಂಗದಲ್ಲಿ ತನ್ನನ್ನು ತಾನು ಹೊಗಳಿಕೊಂಡ ನಿತ್ಯಾನಂದ


If above video doesnt work, try here.
 

TRANSLATION:

Ramnagar: In the sex abuse case proceedings Nithyananda and his 5 disciples appeared in Ramnagar court today (see video above)

The court adjourned the hearing of the case to 3 pm in the afternoon. Nithyananda and his disciples attended the 3rd division District Court at Ramanagaram



Source: Eenadu Kannada News
 

Sunday, October 20, 2013

News9 - Nityananda Gurukul

நித்யானந்தா பாதங்களை கழுவி பாத பூஜை செய்தனரா மாணவர்கள்?

அக்டோபர் 19,2013,23:55 IST
பெங்களூரு: 'பிடதி ஆசிரமம் சார்பில் நடத்தப்படும், குருக்கள் பள்ளியில், நித்யானந்தா பாதங்களை கழுவி, பாத பூஜை செய்ய வேண்டும்' என, மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், "மாணவர்களை தன் முன், ஆஜர்படுத்த வேண்டும்' என, ராம் நகர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரில் உள்ள, பிடதி, நித்யானந்தா ஆசிரமம் சார்பில், "ஸ்கூல் ஆப் தாட்ஸ்' என்ற குருக்கள் பள்ளி நடத்தப்படுகிறது. இந்த பள்ளியில், 80 மாணவர்கள் படிக்கின்றனர். கல்வித் துறையின், பாட முறைகள் இங்கு இல்லை. நித்யானந்தா எழுதிய, "உலக சரித்திரம்' என்ற நூலை மையமாகக் கொண்டு, பாடம் நடத்தப்படுகிறது. கடந்த, 2010ல், நித்யானந்தா மீது பாலியல் புகார் எழுந்த பின், இப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, மற்ற பள்ளிகளில், அட்மிஷன் கிடைக்கவில்லை. நித்யானந்தா ஆசிரமம் சார்பில், மலேசியாவில் நடத்தப்படும், குருக்கள் பள்ளியை, நல்ல முறையில் நிர்வகிக்க, பெண் சீடர் ஒருவரை, 2005ல், நித்யானந்தா அனுப்பினார். அந்தப் பெண் சீடரின் மகன், பிடதி ஆசிரம குருக்கள் பள்ளியில் படித்து வந்தான். அந்தச் சிறுவன், திடீரென விஷம் குடித்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அதனால், மலேசியாவிலிருந்து திரும்பும்படி, அவனின் தாயாருக்கு தகவல் அனுப்பப்பட்டது. அந்தப் பெண் சீடரும் பெங்களூரு திரும்பி, மருத்துவமனையில் விசாரித்த போது, மகன் விஷம் குடித்ததை அறிந்தார். இதையடுத்து, போலீசில் புகார் செய்தார். அந்தப் புகாரில், "பிடதி ஆசிரமத்தில், என் மகனை கொடுமை செய்துள்ளனர். அதனால் தான், அவன் விஷம் குடித்துள்ளான். இந்த விவகாரத்தை, ஆசிரம நிர்வாகிகள் மறைக்க முற்படுகின்றனர்' என, தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, கர்நாடகா, குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: நித்யானந்தா ஆசிரம பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, காவி உடை கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வேலைகளையும் அவர்களே செய்ய வேண்டும்; அடிமை போன்று நடத்தப்படுகின்றனர். நித்யானந்தாவின் காலைக் கழுவி, மாணவர்கள், அவ்வப்போது பாத பூஜை செய்ய வேண்டும். பள்ளியை நடத்த, கர்நாடகா அரசிடமோ, குழந்தைகள் நலத்துறையிடமோ, பிடதி ஆசிரமம் அனுமதி பெறவில்லை. அங்கு படிக்கும் பல மாணவர்கள், தற்கொலைக்கு முற்பட்டுள்ளனர். பள்ளியை நீண்ட நாள் நடத்த முடியாது என்று தெரிந்ததும், லண்டனில் நடத்த, நித்யானந்தா, அனுமதி கேட்டுள்ளார். ஜூனில், குழந்தைகள் நலத்துறையினர், பள்ளியை பார்வையிடச் சென்றபோது, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, பிடதி ஆசிரம ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. பள்ளி மீது நடவடிக்கை எடுப்பது பற்றி, அரசு ஆலோசித்து வருகிறது. இவ்வாறு குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், சில மாணவர்களின் பெற்றோர், ராம் நகர் மாவட்ட கலெக்டரிடம், புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், "பிடதி ஆசிரமத்தில், எங்கள் குழந்தைகளை அடிமை போன்று நடத்துகின்றனர்; கொடுமைப்படுத்துகின்றனர். அவர்களை மீட்டுத் தர வேண்டும்' என, தெரிவித்துள்ளனர். இதையடுத்து, "குருக்கள் பள்ளி மாணவர்களை, தன் முன் ஆஜர்படுத்த வேண்டும்' என, பிடதி ஆசிரமத்துக்கு, ராம் நகர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Friday, October 18, 2013

TV9 News: Nithyananda Gurukul Triggers Controversy, Nithya Followers Attack Media


பிடதி ஆசிரமத்தில் கர்நாடக அதிகாரிகள் அதிரடி ரெய்டு.. நித்தியானந்தா சாபம்!

October 17, 2013, 13:15 [IST]

Click Here
செவ்வாய்க்கிழமை காலை உமேஷ் ஆரத்தியாவுடன் காவல்துறையினர் உள்ளே புகுந்தனர். அப்போது நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்கி படிக்கும் 70 குழந்தைகள் குறித்து கணக்கெடுத்தனர். இதற்கு நித்தியானந்தா 

ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வாக்குவாதம் மூண்டது. மேலும் வன்முறையும் மூண்டதாக தெரிகிறது. இதை பல்வேறு டிவிநிறுவனங்களின் செய்தியாளர்கள் படம் பிடித்தபோது அவர்கள் மீது நித்தியானந்தா ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. என்ன பிரச்சினை...? 25 நாட்களுக்கு முன்பு நித்தியானந்தா ஆசிரமத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் 100 பேரை தங்கவைத்து அவர்களது விருப்பதை மீறி மொட்டை அடித்து சன்னியாசி ஆக்குகிறார். ஆண், பெண் குழந்தைகள் தவறான பாலியல் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் கமிஷனின் செயலாளர் உமேஷ் ஆரத்தியாவுக்கு புகார் வந்தது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்த நித்தியானந்தா ஆசிரமத்துக்கு உமேஷ் ஆரத்தியா சென்றபோது அவரை உள்ளே விடவில்லை. அதனால் அவர் 

நித்தியானந்தாவின் மேல் கர்நாடக அரசிடம் புகார் செய்தார். இதையடுத்து தலையிட்ட முதல்வர் சித்தராமையா, உமேஷ் ஆரத்தியா மற்றும் ராம்நகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரை போலீஸ் பாதுகாப்புடன் சென்று சோதனை நடத்த உத்தரவடி்டார். அப்போதுதான் இந்த அடிதடி மோதல் நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார் உமேஷ் ஆரத்தியா. அதில், நித்தியானந்தா, இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 100 குழந்தைகளை எந்தவிதமான பாடத்திட்டமும் இல்லாமல் நித்தியானந்தா பாடத்திட்டம் என்ற ஒரு பாடத்திட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு மாநில அரசு என எந்த அரசுகளின் கல்வித்துறையின் அனுமதியில்லாமல், ஒரு உள்ளுறை தங்கும் பள்ளியை நடத்தி வருகிறார். அதன் மூலம்அவர் கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களை சம்பாதிக்கிறார். இது சட்ட விரோதம் என்று தெரிவித்துள்ளார். இதன் மீது கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு நித்தியானந்தா தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நித்தியானந்தா கருத்து தெரிவிக்கையில், என் மேல் நடவடிக்கை எடுத்த முதல்வர்கள் காணாமல் போனார்கள். என் மேல் நடவடிக்கை எடுத்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சதானந்த கவுடா ஆகியோர் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டனர். கடவுளான என் மீது காவல்துறையை ஏவும் முதல்வர் சித்தராமையா விரைவில் சின்னாபின்னமாகிவிடுவார் என சாபமிட்டுள்ளார்.

 நித்தியானந்தா குருகுல் விளக்கம் மேலும் நித்தியானந்தா குருகுல் அளித்துள்ள ஒரு விளக்கத்தில், சில அதிகாரிகள் குருகுல் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கு கொடுமைகளில் ஈடுபட்டனர். இதுகுறித்து குருகுல் நிர்வாகிகளும், சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களும் சட்டப்பூர்வமான நோட்டீஸ்களை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர். இதுதொடர்பான புகார் கர்நாக முதல்வர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்.பி., கலெக்டர் ஆகியோருக்கும் புகார் நகல் அனுப்பப்பட்டுள்ளது. குழந்தைகளை கொடுமைப்படுத்திய அதிகாரிகள் குறித்து 40க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கடும் எதிர்ப்பும், அதிருப்தியும், கோபமும் வெளிப்படுத்தியுள்ளனர். தங்களது குழந்தைகள் குருகுலத்தி்ல நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary Karnataka women and children welfare commission officials conducted a raid in Nithyanantha gurukul recently.


Read more at: http://tamil.oneindia.in/news/india/karnataka-officials-raid-nithyanantha-gurukul-185502.html

Sunday, September 29, 2013

Malaysian national dies at nithyananda ashram

A 73-year-old Malaysian national, who was visiting Nithyananda
 Dhyanapeetam at Bidadi, died of cardiac arrest on Friday. The deceased, Chua Ahmoi, had come to the ashram along with her daughter on Thursday. Ashram sources said she started vomiting soon after arrival. She was rushed to the BGS Global Hospital where she died. — Special Correspondent



 U  TOLD  

    U HINDU INCARNATION  !!! 


           WHAT HAPPEND NITHI  ?   
                

                 WHY U NOT SAVE  ?              

                          
                           YOUR  DOT'S  ?


http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/malaysian-national-dies-at-ashram/article5177700.ece

Wednesday, September 18, 2013

TV9 News : Nithyananda Brother Married


சிஷ்யையை அண்ணியாக்கினார் நித்தி! நித்தியானந்தாவுடன் பிறந்தவர்கள் இருவர். ஒரு அண்ணன், ஒரு தம்பி. நித்தியானந்தாவின் அப்பா சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் திருவண்ணாமலையில் இருந்த தனது தாயார், தம்பியை தன்னுடன் அழைத்துக்கொண்டார். அவர்கள் பெங்களுரூ பீடதி ஆஸ்ரமத்தில் தன்னுடன் தங்க வைத்துக்கொண்டார். அவரது அண்ணன் மட்டும் திருவண்ணாமலையில் தனிமையில் இருந்து வந்தார். 40 வயதை நெருங்கும் அவரது அண்ணனும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருந்தார். தற்போது திடீரென அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நித்தியானந்தாவின் அண்ணன் செந்தில்குமாருக்கு, மலேசியாவை சேர்ந்த நித்தியானந்தாவின் பக்தையுமான சுபத்ரா (எ) நித்ய கீதானந்தாவுடன் வருகிற 16ந்தேதி பெங்களுரூவில் உள்ள பீடதி ஆஸ்ரமத்திலேயே திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்துக்கான அழைப்பிதழ்கள் புதுக்கோட்டையில் டிசைன் செய்யப்பட்டுள்ளன. திருமண அழைப்பிதழில் நித்தியானந்தர் ஆண்டு 36ஆம் வருடம் ஆவணி மாதம் 31ந்தேதி திருமணம் என்றும் அவதார புருஷர் ஜகத்குரு பகவான் ஸ்ரீ ல ஸ்ரீ பரமஹம்ச நித்யானந்த ஞானசம்மந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் திருவருளால் நடைபெறவுள்ளது என குறிப்பிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ்கள் திருவண்ணாமலையில் தரப்பட்டு வருகின்றன. அழைப்பிதழில் அண்ணனுக்கும், அண்ணிக்கும் தம்பி நித்தியானந்தா ஆசிர்வாதம் செய்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=107140

Saturday, June 8, 2013

VICTORY IN USA AGAINST NITHYANANDA’S INTIMIDATION AND HARASSMENT!

US court dismisses 3 frivolous cases filed by Nithyananda Swami and his agents against victim AarthiRao in Michigan, USA. The dismissal of the complaints filed in Michigan by Nithyananda’s followers is the most recent victory against witness intimidation and harassment. The complaints filed by Nithyananda, his followers and organizations, were regarding defamation, privacy violation, etc, demanding compensation to the tune of more than Rs. 120 crores!

Quoting from the submissions made to the US court:

“Plaintiff has initiated criminal charges against Ms. Rao in India based on the same allegations that she made in this case. Believing that the best defense is a good offense, Nithyananda and his followers have aggressively attacked Ms. Rao in an effort to discredit her. Not only have the pending criminal action and this civil action been started by the plaintiff, but Nithyananda and his assistant have filed a suit (13-93-NZ) in this Court based on the same events, and Nithyananda's foundation has also filed a complaint in this Court (13-157-NZ) based on the same events. The Life Bliss Foundation, which is tied to Nithyananda, also brought suit against Ms. Rao in California (RIC 1105004) on bogus charges of misappropriation of trade secrets. Ms. Rao was forced to abandon that suit due to a lack of financial resources.

Not content to have the Indian courts sort out this drama, Nithyananda and his followers are now attempting to use the United States court system to harass Ms. Rao. Three separate civilcomplaints have been filed against Ms. Rao in Michigan. The factual allegations in the threecomplaints are strikingly similar, and none of them allege any actions in Michigan. This aggressive use of the Michigan court system to deal with what are plainly Indian concerns must stop.”

After considering all the arguments, the Hon’ble David S. Swartz of 22nd Circuit Court for the County of Washtenaw, Michigan, USA dismissed all pending cases against AarthiRao filed by Nithyananda, his followers and various Nithyananda organizations .

It has also come to lightthat amalicious attempt was made to mislead the Hon’ble Michigan Court and obtain default/ex-party judgments against AarthiRao, without her knowledge, to the tune ofRs. 120 crores. Even though Nithyananda and his group were very well aware that AarthiRao was in India during Oct 2012 (as she was appearing live in local TV programs at that time to answer some of the allegations made against her), all court summons and notices were sent only to her USA address and the US court was misled to believe that she was properly informed (when in fact she had absolutely no idea of the complaint nor about the summons, till the last minute). Further misrepresenting that AarthiRao was ignoring the summons, the court was moved to give a default judgment (i.e. without properly hearing her side) for compensation of more than Rs. 120 crores. 

AarthiRao is the victim and prime witness in the charge sheet CC No. 204/2010, filed by Karnataka CID in Nov 2010 against Nithyananda and his 5 secretaries. Over the past 2½ years, after the charge sheet was filed in 2010, at least 13 criminal and civil cases have been filed in retaliation by Nithyananda, directly or through his followers and organizations, against AarthiRaoin India and USA. What could be Nithyananda's motive behind filing so many false/frivolous complaints in so many courts, and pressing for default judgments? Is it to harass AarthiRao legally & financially by forcing her to appear in so many different courts? Is it to use these cases to pressurize her into silence, in exchange for some peace of mind? Or is it merely to collect as many judgments against her from as many courts as possible (without a proper trial where all the facts can be examined by the court), 

so that the judiciary, authorities and public in India can be misled to believe that she is guilty of several crimes in various courts, thereby discrediting her as a victim/witness during Nithyananda’s trial in India. It’s probably all of these. Remember Nithyananda's notorious press meets in Jun 2012, where he claimed that AarthiRao was convicted of fraud by a California court; but in reality there is no such judgment even as of May 2013. This clearly brings out their malafide intentions.It is not surprising that his organization and his secretaryGopal Reddy Sheelum (@ NithyaBhaktananda) were found guilty of fraud by a California court after trial for two years.

Needless to say, such continuing harassment can devastate any individual financially and mentally;butAarthiRao continues to bravely stand and fight for the truth and the social cause of exposing a fraud!

SatyamevaJayate!

அமெரிக்க வழக்குகளை உடைத்த ஆர்த்தி ! விடாது துரத்தும் நித்தி...

அமெரிக்க வழக்குகளை உடைத்த ஆர்த்தி ! விடாது துரத்தும் நித்தி...

Friday, June 7, 2013

என்ன செய்கிறார் மதுரை ஆதீனம்? -மினி தொடர்: பாகம் 6


எல்லாத் தவறுகளையும் நிவர்த்தி செய்துவிட்டேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் மதுரை ஆதீனம். ஆனால், அவரது பதவிக்கு வேட்டு வைப்பதற்கான நடவடிக்கையில் சிலர் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். இத்தனை பிரச்னைகளுக்கும் காரணமான நித்தியோ குஜாலாக இருக்கிறார்.

வழக்குகள்:

மதுரை ஆதீனத்திற்கு எதிராக ஆரம்பத்தில் நிறைய வழக்குகள் தாக்கல் ஆனாலும் கூட, இப்போது 3 வழக்குகள் தான் நிலுவையில் இருக்கின்றன.

1. "நித்தியானந்தாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மீனாட்சிப்பிள்ளைகள் அமைப்பின் சார்பில் தொடரப்பட்ட வழக்கு.

2. "அருணகிரிநாதர் இந்து அறநிலையத் துறையின் அனுமதி பெறாமல் தன்னுடைய சுயலாபத்துக்காக ஆதீனச் சொத்துக்களை விற்று இருக்கிறார். ஆதீனத்தின் நிதியையும் சுயவிளம்பரத்துக்காக செலவு செய்திருக்கிறார். அதனால், அவரை ஆதீனப் பொறுப்பில் இருந்து விடுவித்து மடத்தை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர உத்தரவிட வேண்டும்" - என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கு.

3. "மதுரை ஆதீனத்திற்குள் செல்லவும், பூஜைகள் செய்து வழிபடவும் அனுமதிக்க வேண்டும்" என்று நித்தியானந்தா தொடர்ந்த வழக்கு.
 
இவை அனைத்துமே மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் தான் விசாணையில் இருக்கின்றன. இந்த வழக்குகள் மீதான விசாரணை துரிதமாக நடைபெறவில்லை. வாய்தா...வாய்தா... என்று போய்க் கொண்டிருக்கிறது. இந்த வழக்குகள் போதாது என்று, "நித்தியானந்தா மதுரை ஆதீனத்திற்குள் நுழையக் கூடாது" என்று மதுரை ஆதீனம் தொடர்ந்த வழக்கும் இதே கோர்ட்டில் தான் விசாரணையில் இருக்கிறது. கடைசியாக கடந்த 3ம் தேதி இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அதன் மீதான விசாரணையை மேலும் ஒரு மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது நீதிமன்றம்.

ஜெயலலிதாவுக்கு ஐஸ்:


தனக்கு எதிரான 3 வழக்குகளில் ஆதீனம் மிகவும் பயப்படுவது, இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்த வழக்கைப் பார்த்துத் தான். "அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. ஆதீனச் சொத்து, நிதி தொடர்பான விஷயங்களில் சந்நிதானத்துக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது" என்று அவர் தாக்கல் செய்த மனுவை ஆரம்பத்திலேயே நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆக, அரசாங்கத்தை ஐஸ் வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஆதீனம்.

ஏற்கெனவே, முதல்வர் ஜெயலலிதாவை 'நெருப்பாற்றில் நீந்தி வந்த சிங்கம்', 'தங்கத்தாரகை' என்று வார்த்தைக்கு வார்த்தை புகழும் ஆதீனம், இப்போது அம்மாவின் ஒவ்வொரு திட்டத்தையும் வரவேற்று அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். மதுரையில் தமிழன்னை சிலை அமைக்கும் ஜெயலலிதாவின் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தமிழறிஞர்களே கூட அதை எதிர்த்தார்கள். ஆனால், ஆதீனமோ "ஆகா... அற்புதம்" என்று புகழ்ந்தார். 2 நாட்களுக்கு முன்பு அம்மா உணவகம் திறக்கப்பட்டதைப் பாராட்டி அவர் வெளியிட்ட அறிக்கையில், அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டன் போல, "வாழ்நாளெல்லாம் போதாதே அம்மாவின் புகழ் பாட... வளர்க அம்மாவின் உணவகங்கள்" என்று நெக்குறுகி இருந்தார்.

துரிதப்படுத்தும் அமைப்புகள்:


இதுபற்றி மீனாட்சி பிள்ளைகள் அமைப்பின் தலைவர் ஜெகதலபிரதாபனிடம் கேட்டோம். "மதுரை ஆதீனத்தை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையில் நாங்கள் இன்னமும் உறுதியாக இருக்கிறோம். 1994ல் தன்னுடைய சொந்த அத்தை மகன் சுவாமிநாதனை இளைய ஆதீனமாக நியமித்தார் அருணகிரி. பிறகு, பணத்துக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு எந்தத் தகுதியுமே இல்லாத நித்தியை நியமித்தார். சமீபத்தில் ஒரு சாதித்தலைவரை, அதுவும் கொடும் குற்றப்பின்னணி கொண்டவரை மடத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

இப்போது வைஸ்ணவி குடும்பத்தினருக்கு வாரி வழங்குகிறார். வைஸ்ணவி நிச்சயதார்த்தத்தின் போது, அருணகிரிநாதர் கொடுத்த 5 லட்சம் யாருடைய பணம்? மடத்தின் வருமானத்தை நற்காரியங்களுக்குப் பயன்படுத்தாமல் இப்படி ஆசைப்பட்டவர்களுக்கு எல்லாம் வாரி இறைப்பதன் மூலம் தான் இன்னும் திருந்தவில்லை என்று நிரூபித்திருக்கிறார். எனவே ஆதீன மடத்தை அவரது பிடியில் இருந்து மீட்பதற்காக இந்த வழக்குகளை துரிதப்படுத்துவதற்கான முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கிறோம். அதற்கு அரசும், அறநிலையத்துறையும் உதவ வேண்டும். தன்னைப் புகழந்து ஆதீனம் வாரந்தோறும் வெளியிடும் அறிக்கைகளை நம்பி முதல்வர் ஜெயலலிதா ஒருபோதும் ஏமாற மாட்டார் என்று நம்புகிறோம்" என்றார்.
 
இதே மனநிலையில் தான் அவருக்கு எதிரான மற்ற அமைப்புகளும் இருக்கின்றன. நேற்று (5ம் தேதி) கூட மதுரை ஆதீனத்திற்கு எதிரான மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அந்த போஸ்டரில் வைஸ்ணவிக்கும், ஆதீனத்துக்கும் என்ன உறவு? என்று கேட்டிருக்கிறார்கள் மாணவர்கள்.

என்ன செய்கிறார் ஆதீனம்?

இதுபற்றி ஆதீனத் தரப்பில் பேசினோம். "மதுரை ஆதீனத்தில் உள்ள திருஞானசம்பந்தர் சன்னதியில் தினமும் 3 வேளை பூஜை செய்கிறார் சந்நிதானம். பகல் 11.30 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவதற்காக ஒடுக்கத்தில் காத்திருக்கிறார். பிரச்னைக்கு உரியவர்களையும், பத்திரிகையாளர்களையும் தவிர வேறு யார் வந்தாலும் சந்திக்கிறார். புதிதாக நியமிக்கப்பட்ட தம்பிரான் சுவாமி, அவருக்குத் தேவையான பணிவிடைகள் எல்லாவற்றையும் செய்கிறார்.

தருமை ஆதீனம், திருவாடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், குன்றக்குடி ஆதீனம் ஆகியோருடனான நட்பை புதுப்பித்திருக்கிறார். மதுரை ஆதீனத்தில் நடந்த திருஞானசம்பந்தர் குருபூஜையின் நிறைவாக கடந்த 31ம் தேதி கூட அவர் திருவாடுதுறை, தருமை ஆதீனங்களுக்குச் சென்றார். செய்த தவறுகளை எல்லாம் அவர் உணர்ந்துவிட்டார். சிவ பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் தனக்கு ஆதரவு தர வேண்டும் என்று விரும்புகிறார்" என்கிறார்கள்.

"வைஸ்ணவி ஆதீனப்பணிகளை தொடர்வது உண்மைதான். ஆனால், அவருக்கும், சந்நிதானத்துக்கும் தந்தை- மகள் உறவு தான் இருக்கிறது. அவரது தங்கை கஸ்தூரியும் கூட எல்லா நாட்களும் இங்கே தங்கி இருப்பதில்லை. அவர் கும்பகோணத்தில், எம்.எஸ்சி. ஐ.டி. படித்துக் கொண்டிருக்கிறார்" என்கிறார்கள்.

நித்தியானந்தா என்ன செய்கிறார்? 

நித்தியானந்தாவுக்கு எந்தக் கவலையும் இல்லை. பாதிக்கப்பட்டது அவர் இல்லையே? இழந்த மதுரை ஆதீனப்பதவிக்குப் பதிலான வடநாட்டுச் சாமியார்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து 'மகாமண்டலேஸ்வரர்' பதவியைப் பெற்றுவிட்டார் நித்தி. இது மாவட்ட செயலாளர் பதவி போலத் தானாம். இந்தியாவில் மட்டும் நாற்பது, ஐம்பது 'மண்டலேஸ்வரர்கள்' இருக்கிறார்கள். தன் பெயரிலேயே (நித்தியானந்தா) ஒரு 'மண்டலேஸ்வரர்' மகாராஷ்டிராவில் இருப்பது நித்திக்கு தாமதமாகத் தான் தெரியுமாம்.

இதனால், உலகம் முழுக்க இருக்கும் தனது பக்தர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையை மட்டுமே இப்போது முழு மூச்சாகச் செய்து கொண்டிருக்கிறார் நித்தியானந்தா. 'இன்னர் அவேக்னஸ்' என்ற பயிற்சி தான் அவருக்கு வருமானம் கொழிக்கும் தொழில். அதை சிறப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார். பிடதி ஆசிரமம், ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல் என்று ஒவ்வொரு மாதமும் ஓரிடத்தில் பயிற்சி நடக்கிறது. தற்போது பள்ளி விடுமுறைக்காலம் என்பதால், சிறுவர்கள் கூட மொட்டையும், கொட்டையுமாக வந்து அவரிடம் பயிற்சி பெறுகிறார்கள்.

ஃபிரஷ் சீடர்கள்:


நித்தியானந்தாவின் சீடர்களாக இப்போதும், டாக்டர், என்ஜினீயர், கணினி வல்லுனர்கள் என்று புதிதாக நிறைய இளைஞர்கள் சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அவருக்கு பாத பூஜை செய்வது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். சின்னஞ்சிறு பையன்கள் எல்லாம் நித்தியின் காலணிகளுக்கு பூஜை செய்யும் காட்சியை அவரது இணைய தளத்தில் காண முடிகிறது. தினமும் காலையில் அருளாசி வழங்கும் நித்தி, அதன் வீடியோ காட்சியை அன்றைய தினமே இணையத்தில் பதிவேற்றம் செய்கிறார். (அவரது லேட்டஸ்ட் வீடியோவைப் பார்க்க இதைச் சொடுக்கவும்:
 http://www.youtube.com/watch?v=TS6VadZUeeo&feature=player_embedded#! )

இதைப் போலவே அவரது அன்றாட ஆன்மீகப் பணிகள் பற்றிய புகைப்படங்கள் குறைந்தது பத்தாவது பதிவேற்றம் செய்யப்படுகிறது. அந்தப் படங்களைப் பார்க்கும் போது, இவ்வளவு திறமையான புகைப்படக் கலைஞர்கள் இவரிடம் போய் சிக்கியிருக்கிறார்களே என்று தோன்றுகிறது. சில தனியார் டி.வி.களிலும், தனது பிரத்யேக டி.வி. சேனல், ரேடியோ, இ-மேகஸின் போன்றவற்றிலும் இடைவிடாது அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார் நித்தி. நீண்ட காலம் வாழ்வது எப்படி? இளமையை நீட்டிப்பது எப்படி? ஜீவமுக்தி பெறுவது எப்படி என்று இந்தி, தமிழ், ஆங்கிலம் என்று எல்லா மொழிகளிலும் பேசுகிறார்.

பெண்களிடம் 'தாந்திரிக செக்ஸ் காண்ட்ராக்ட்' செய்தது சர்ச்சை ஆனதால், அதை மாற்றி அமைத்திருக்கிறாராம் நித்தி. அதில் கையெழுத்திட்டுவிட்டு, 16, 18 வயது பெண்கள் எல்லாம் அவருக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறார்கள். முன்பு பெண்களுக்கு அவர் ஜீவமுக்தி வழங்கும் காட்சிகள் புகைப்படமாக பதிவேற்றப்பட்டது. இப்போது ஆண்கள் படத்தை மட்டுமே பதிவிடுகின்றனர். நித்தி பெண்களுடன் இருக்கும் போட்டோவை தரவிறக்கம் செய்து, பத்திரிகைகள் மிஸ்யூஸ் செய்துவிடுவதால் தான் இந்த நடவடிக்கை என்று சொல்கிறார்கள் நித்தியின் சீடர்கள்.
 
   
தவிடு பொடியான வழக்குகள்:

நித்தி-ரஞ்சிதா படுக்கைக் காட்சிகளை வீடியோ எடுத்தவர் வினய் பரத்வாஜ். தன்னை ஹோமோசெக்ஸுக்குக் கட்டாயப்படுத்தியதாக நித்தி மீது பரபரப்பு புகார் கூறியவரும் இவரே. நித்தியின் பிரதான எதிரியான இவர், தற்போது சிறையில் இருப்பதாகச் சொல்கிறார்கள் நித்தி ஆதரவாளர்கள். அமெரிக்காவில் சிறுவன் ஒருவனை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வினய் பரத்வாஜுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 57 மாதம் (சுமார் நான்கரை ஆண்டு) சிறை தண்டனை விதித்துள்ளதாகச் சொல்கிறார்கள். தன் மற்றொரு எதிரியான லெனின் கருப்பன் மீது, ஒரு வருடத்திற்கு முன்பு தன்னுடைய பெண் சீடர் ஒருவர் மூலம் கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் புகார் கொடுத்திருந்தார் நித்தி. அந்த வழக்கை போலீஸார் பதிவு செய்யவில்லை. தற்போது கோர்ட் மூலம் லெனின் கருப்பன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பெற்றிருக்கிறார் நித்தி. இதேபோல ஆர்த்தி ராவை மிரட்டும் நடவடிக்கையிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள் நித்தியின் வழக்கறிஞர்கள்.

நித்தியானந்தா தன்னைத் தாக்கியதாக கர்நாடக செய்திச் சேனல் சுவர்ணா டி.வி. நிருபர் அஜித் கொடுத்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர். ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல கர்நாடகா நவ நிர்மாண் என்ற அமைப்பு கொடுத்த புகாரின் பேரில் நித்தி மீது பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கர்நாடக ஹைகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து இந்தத் தீர்ப்புகளைப் பெற்றிருக்கிறாராம் நித்தி. தன் பண பலத்தால் தன் மீதான வழக்குகள் பலவற்றை நித்தி உடைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
   
மதுரைக்கு வருகிறார் நித்தி!

இந்தக் கொடுமைகளுக்கு மத்தியில், நித்தியானந்தா மீண்டும் மதுரைக்கு வர இருப்பதாக அவரது சீடர்கள் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். "மதுரை ஆதீனப் பதவிக்காக அவர் வர மாட்டார். வரவும் விரும்பவில்லை. தன்னை எதிர்த்து, விரட்டியடித்தவர்கள் மத்தியில் எதையாவது செய்ய வேண்டும் என்ற திட்டம் அவருக்கு இருக்கிறது. எனவே, அழகர்கோவில் அல்லது திருப்பரங்குன்றம் போன்ற ஊர்களில் ஒன்றில் தனது நித்யானந்தா தியான பீடத்தின் கிளையை அமைக்கவிருக்கிறார்" என்கிறார்கள்.

ஆக, ஆதீனம் ஓய்ந்துவிட்டார். மீண்டும் அடிவாங்குவதற்குத் தயாராகி வருகிறார் நித்தியானந்தா!

(தொடர் நிறைவடைந்தது)