Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Saturday, June 29, 2013

Nithyananda News by Nakkeeran is Truth, Court rules - நித்யானந்தா பற்றி நக்கீரன் செய்திகள் அனைத்தும் உண்மை - நீதிமன்றம் தீர்ப்பு !

In a huge victory for truth and the right of media to publish truths in service of the public, a court in Chennai has ruled that news about Nithyananda published by Nakeeran magazine (since 2010) is truth!! The key points in this judgment (as also the Tamil article below) are summarized here:

  • Nithyananda's defamation case against Nakkeeran fails to establish any motive for defaming him. 

  • Nithy's image was already damaged by the video telecasts on Mar 2nd (2010), as per complaint of Nithyananda's ashram manager. Subsequently many other magazines published many news about him. So Nakkeeran did not do anything additional to bring down his image or defame him.

  • Nithy claims himself to be an avatar of God (as published in his own book) - therefore nothing about him can be private as he is accountable to the public. And hence it is the duty of the media to make public know about such a person.

  • Ashram has itself submitted to the court, the FSL (Forensic Science Lab, premiere Forensic lab of the country) lab report and forensic expert Dr. Chandra Shekar's reports confirming that video is authentic and not morphed. From their own submissions it is clear that Nakkeeran only published the truth

  • Judge has noted that plaintiffs (Nithy's ashram) have themselves admitted that devotees have signed NDA (sex contracts) - which has been published by Nakkeeran and hence no false representation was made.




சனிக்கிழமை, 29, ஜூன் 2013 (9:44 IST)

              நக்கீரன் மீண்டும் ஒரு முறை நீதியின் துணையுடன், பத்திரிகை சுதந்திரத்தையும் கருத்துரிமை யையும் நிலைநாட்டியிருக்கிறது. இந்த முறை நடந்த சட்டப்போர் என்பது அரசியல்வாதிகளுடனோ,  அல்ல ஆன்மிகப் போலியுடன்.

நித்யானந்தா சாமியாரின் போலித்தன்மையை ஆரம்பத்திலேயே அம்பலப்படுத்தியது நக்கீரன்தான். 2008-ம் ஆண்டிலேயே நித்தி கல்லூரி மாணவிகளை கட்டிப்பிடித்து போலித்தனமாக ஆசிர்வாதம் செய்யும் கீழ்த்தரமான நடவடிக்கையை நக்கீரன் அம்பலப்படுத்தியிருந்ததால் அவரைப் பற்றி தொடர்ந்து புலனாய்வு செய்து, ஆன்மிகத்தின் பேரில் தன்னை கடவுளின் அவதாரம் என கூறிக் கொண்டு பொது மக்களிடமிருந்து லட்சக்கணக் கான தொகையை வசூல் செய்து பிரசங்கம் என்ற பெயரில் மோசடி செய்வதையும், இளம் பெண் களிடம் ஒப்பந்தம் போட்டு செக்ஸ் வைத்திருந்த தையும், பாதிக்கப்பட்டவர்களின் பேட்டி, புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களுடன் 2010 மார்ச் மாதத்தில் நக்கீரன் வெளியிட்டது.

தொடர்ந்து தனது அந்தரங்க லீலைகள் மற்றும் மோசடிகள் நக்கீரனால் அம்பலமாவதை தடுக்க, நித்தி பல்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்ததோடு, ரஞ்சிதா மற்றும் நித்தியின் கூட்டாளிகள் பலபேர் தமிழக-கர்நாடக இருமாநிலங்களிலும் நக்கீரன் மீது அடுக்கடுக்காய் வழக்குகள் தாக்கல் செய்தனர். அதில் ஒரு வழக்காக நித்தி டிரஸ்டியாக இருக்கும் தியானபீட சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக அதன் ஒரு டிரஸ்டியான நித்ய சதானந்தா தொடர்ந்த வழக்கில், நித்தி பற்றியோ, தியான பீடத்தை பற்றியோ அதன் பக்தர்கள் பற்றியோ எந்தவிதமான செய்தியோ, புகைப் படங்களோ நக்கீரன் பத்திரிகையிலோ அல்லது நக்கீரன் வெப்சைட்டிலோ வெளியிடக்கூடாது என்று நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று கோரி உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 


சென்னை மாநகர உரிமையியல் 19-வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது வழக் கறிஞர்கள் பி.டி.பெருமாள், எல்.சிவகுமார், வி.வர்கீஸ் ஆகியோர் நமக்காக வழக்கில் ஆஜராகி வாதம் செய்து வந்தார்கள். விசாரணையின் போது நமது தரப்பில், நக்கீரன் செய்தி உண்மையானது எனவும், உள்நோக்கமற் றது எனவும், நித்தி மற்றும் நித்தியின் மடத்திற்கு ஏற் கனவே நற்பெயரோ, மதிப்போ, மரியாதையோ இல்லை எனவும் நக்கீரன் செய்தியால் நித்திக்கும் அவரது மடத்திற்கும் எந்தவித இழப்போ நஷ்டமோ ஏற்பட வில்லை எனவும் நிரூபிக்கும் வண்ணம் 3 சாட்சிகளும் 38 ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

குறிப்பாக, தன்னை கடவுளின் அவதாரம் என்று நித்தி தன்னைப் பற்றிய புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதை நீதிமன்றத்தின் பார்வைக்கு வைத்து, அவர் பொதுமனிதர் என்பதால், ஒரு பொது மனிதரைப் பற்றிய விபரங்களை பொதுமக்களுக்கு தெரிவிப்பது பத்திரிகையின் கடமை என்பதையும் நம் தரப்பு வாதத்தில் எடுத்து வைத்தோம். அத்துடன் பொதுவான சட்டவிதிப்படி தன்னைப் பற்றி செய்தி பிரசுரிக்கக்கூடாது என செய்தி வருவதற்கு முன்பே எவரும் தடை கேட்டு வழக்குத் தொடர முடியாது என வாதிட்ட துடன், பத்திரிகை சுதந்திரம் மற்றும் பத்திரிகையின் கடமை குறித்து நக்கீரன் ஏற்கனவே ஆட்டோ சங்கர் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பெற்றுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பையும் [(1994) 6 Supreme Court Cases 632 R.Rajagopal @ R.R.Gopal Vs State of Tamilnadu] நீதிமன்றத்தின் முன் வைத்தோம்.

செய்தி வெளியானபிறகு பாதிப்பு ஏற்பட்டதாக நித்யானந்தா கருதினால், அவர் தனிப்பட்ட முறையில்தான் வழக்கு தொடர முடியும், தியான பீட டிரஸ்ட் சார்பில் இந்த வழக்கை தொடர சதானந்தாவிற்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை என்பதையும் ஆவணங்களுடன் மேற்கோள் காட்டி வாதாடினார் நமது வழக்கறிஞர் பி.டி.பெருமாள்.

நித்யானந்தா-ரஞ்சிதா ஆகியோரின் நெருக்கமான படுக்கையறைக் காட்சிகள் முதலில் 2-3-2010 அன்று இரவு டி.வி. மீடியாக்களில் வெளியானது. அச்செய்தி, புகைப்படங்களுடன் 3.3.2010 அன்று நக்கீரனில் வெளியானது. அதைத் தொடர்ந்து லெனின் கருப்பன் கொடுத்த புகாரின் பேரில் நித்தி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார். மேலும் பல புகார்கள் நித்தி மீது சுமத்தப்பட்ட நிலையில் பெண்களிடம் ஒப்பந்தம் போட்டு செக்ஸ் வைத்துக் கொண்ட நித்தியின் நடவடிக்கைகள் போலித்தனமானது, சட்ட விரோதமானது, மத உணர்வுக்கு எதிரானது என்பதை பொதுமக்களுக்கு அம்பலப்படுத்தும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் நித்தி சம்பந்தப்பட்ட குற்றச்செய்திகள் அனைத்தையும் நக்கீரன் தனது அடுத்தடுத்த இதழ்களில் வெளிக் கொண்டு வந்தது.

டி.வியில் நித்யானந்தா-ரஞ்சிதா பற்றிய காட்சிகள் வெளியானபோதே, நித்தியின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்பட்டு ஆசிரம சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டதாக அந்த ஆசிரம மேலாளர் ஆத்ம பிரபானந்தா போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகாரில் கூறியிருக்கிறார். எனவே, 2010 மார்ச் 2-ந் தேதி இரவே நித்தியின் புகழ் களங்கப்பட்டுவிட்டது என்பதை அவரது ஆசிரமமே ஒப்புக்கொள்ளும் நிலையில், மார்ச் 3-ந் தேதி நக்கீரன் வெளியிட்ட செய்தியால்தான் நித்தியின் புகழ் களங்க மடைந்தது என வழக்குத் தொடுத்திருப்பது பொருத்தமற்றது எனவும் நமது வழக்கறிஞர் பி.டி.பெருமாள் வாதாடினார்.

நக்கீரன் அம்பலப்படுத்திய நித்தியின் லீலைகள், செக்ஸ் மோசடிகள், அனைத்தும் அதன்பின், 2011-ல் பல்வேறு இதழ்களிலும், செய்தித்தாள்களிலும் வந்திருப்பதையும் சுட்டிக்காட்டி அந்த இதழ்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததோடு, நித்தியின் முன்னாள் பக்தர் ஒருவர் ""சரசம் சல்லாபம் சாமியார்'' என நித்தியைப் பற்றியும், ஆசிரமத்தைப் பற்றியும் ஒரு பத்திரிகையில் 30 வார தொடராக எழுதியதையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அந்தப் பத்திரிகைகளின் மீதெல்லாம் வழக்குப் போடாத நித்தி நக்கீரனை மட்டும் தேர்வு செய்து தடை கேட்கும் இந்த வழக்கு ஏற்புடையதல்ல எனவும் வாதாடினார்.


நித்தி-ரஞ்சி சம்பந்தப்பட்ட வீடியோ உண்மையானதுதான் என தடயவியல் நிபுணர் சந்திரசேகர் அளித்த அறிக்கை, டில்லி தடய அறிவியல் கூடம் அளித்துள்ள அறிக்கை இவற்றை வாதி ஆசிரமமே நீதிமன்றத்தில் அவர்கள் தரப்பு ஆவணங்களாக தாக்கல் செய்திருப்பதை நீதிமன்ற பார்வைக்கு கொண்டு வந்தனர் நமது வழக்கறிஞர்கள். மேலும், 2-3-2010-ல் நித்தி ஆசிரமம் பொதுமக்களால் சூறையாடப்பட்டு நித்தியும் அவரது கூட்டாளிகளும் அவமரியாதைப்படுத்தப் பட்ட செய்திகள் அடங்கிய சி.டி.யும், நீதிமன்றங்கள் மற்றும் காவல்நிலையங்களில் நித்தி தரப்பு கூறும் பொய் பித்தலாட்டங்களை நிரூபிக்கும் ஆவணங்கள் என அனைத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நமது வழக்கறிஞர் பி.டி.பெருமாள் வாதாடினார்.

இருதரப்பு சாட்சியங்களையும், ஆவணங்களை யும் மற்றும் வாதங்களையும் பரிசீலித்த, சென்னை மாநகர உரிமையியல் 19-வது கூடுதல் நீதிபதி திருமதி.அ.கயல்விழி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த நீண்ட தீர்ப்பை வழங்கினார். "ஆசிரமத்திற்கும், நக்கீரனுக்கும் எவ்விதமான முன் தொடர்பும் இல்லை என்பதோடு எந்தவித உள்நோக்கமும் இல்லை என ஆசிரம தரப்பு சாட்சி ஒத்துக் கொள்வ தாலும் இச்செய்தி உள்நோக்கத்துடன் பிரசுரிக்கப்பட்ட செய்தி அல்ல.

அவதூறு வழக்கு சம்பந்தப்பட்ட சட்ட நுணுக்கங்களை ஆராயும்போது, வாதியான ஆசிரமம் முதலில் இந்த செய்திகள் அவதூறானது என்று அறிவிக்க (விளம்புகை) கோரியிருக்க வேண்டும், தடை (உறுத்துகட்டளை) கோர இயலாது. தடை விதிக்க சட்டத்தில் இடம் இல்லை.

மேலும் நித்யானந்தா-ரஞ்சிதா தொடர்பான சி.டி. உண்மையானது தான் மார்பிங் செய்யப்பட்டது அல்ல என சான்றளிக்கப்பட்ட தடய அறிவியல் அறிக்கைகளை நீதிமன்றத்தில் ஆவணங் களாக வாதி ஆசிரமத் தரப்பு தாக்கல் செய்ததன் மூலம், தங்கள் பத்திரிகையில் உண்மைச் செய்திகளையே வெளியிடுவ தாக கூறும் நக்கீரன் தரப்பு வாதத்திற்கு ஆசிரம தரப்பு துணை நின்று, அதனை ஒத்துக்கொள்வதாக இந்நீதிமன்றம் கருதுகிறது.

ஆசிரமத் தரப்பு சாட்சியான அதன் மேலாளர் எனக் கூறும் ஆத்ம பிரபானந்தா தனது சாட்சியத்தில், 2-3-2010-க்கு முன்பே பலமுறை ரஞ்சிதா ஆசிரமத்திற்கு வந்து செல்வார் எனவும், ஆசிரமத்தில் தங்குவார் என்றும் ஒப்புக் கொண் டுள்ளதிலிருந்தும், 2008-ல் சதானந்தா தியான பீடம் சார்பாக நித்யானந்தா பற்றி நக்கீரனுக்கு கொடுத்த அறிக்கைகள் மற்றும் படங்களை நக்கீரன் வெளியிட் டது உண்மைதான் என ஒப்புக் கொள்வதிலிருந்தும், லெனின் கருப்பன், ஆர்த்திராவ் ஆகியோர் தங்கள் ஆசிரமத்தின் பக்தர்கள் என்றும், தியான வகுப்பு களுக்கு வந்து செல்வார்கள் என்று தனது சாட்சியத்தில் கூறுவதிலிருந்தும் பிடதி ஆசிரமத்தில் பயில வரும் பெண்களுடன் ஒப்பந்தம் (சர்ய்லிஉண்ள்ஸ்ரீப்ர்ள்ன்ழ்ங் ஆஞ்ழ்ங்ங்ம்ங்ய்ற்) செய்வது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டு சாட்சியம் அளித்திருப்பதின் மூலமும் நக்கீரனில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் உண்மை செய்திகளே அன்றி தவறான செய்திகள் அல்ல என்பதை வாதி தரப்பே ஒப்புக் கொள்கிறார்கள். 

நக்கீரனில் வெளியான செய்திகள் மூலம் ஆசிரமத்திற்கோ, நித்யானந்தாவிற்கோ எந்தவித இழப்போ நஷ்டமோ ஏற்படவில்லை என்று நக்கீரன் சாட்சிகள் கூறுகின்றனர். இவற்றை மறுத்து நிரூபிக்கும் வகையில் ஆசிரம தரப்பினர் பிரதிவாதி நக்கீரன் சாட்சிகளை குறுக்கு விசா ரணை செய்யவில்லை, எதிர் ஆவணம் எதையும் தாக்கல் செய்யவுமில்லை. இந்நிலையில், ஆசிரமத்தை பற்றியும் நித்யானந்தா பற்றியும் உண்மைச் செய்திகளை  நல்லெண்ண நோக்கத்தோடு நக்கீரன் பிரசுரித்திருப்பதை சாட்சிய ஆவணங்கள் வாயிலாக இந்த நீதிமன்றம் அறிகின்ற வகையில், நித்யானந்தாவிற்கு எதிராக தீய எண்ண அடிப்படையில் எந்த செய்திகளையும் நக்கீரன் பிர சுரிக்கவில்லை என்றும் நக்கீரனில் வந்த உண்மை செய்தியினால் நித்யானந்தாவின் நன்மதிப்பிற்கு இழப்பு எதுவும் ஏற் படவில்லை என்றும், நக்கீரனில் பிரசுர மானது நல்லெண்ண அடிப்படையி லானது என்றும் இந்த வழக்கு நிலைக் கத்தக்கதல்ல என்றும் தியானபீட ஆசிரமம் கோரியது தடை பரிகாரம் மட்டுமே, அந்தப் பரிகாரமும் கிடைக்கத் தக்கதல்ல என தீர்மானித்து இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது' எனத் தீர்ப்பளித்தார்.

அரைகுறை ஆன்மிகத்துடன், மக்களிடமுள்ள கடவுள் நம்பிக்கையைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான கோடி களுக்கு அதிபதியாகி, அற்ப விஷயங் களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கார்ப்பரேட் சாமியார் நித்யானந்தா, தனது சுயரூபத்தை அம்பலப்படுத்திய நக்கீரனைத் தனது பணபலத்தாலும் அதிகாரம் படைத்த சிலரின் நட்பாலும் ஒடுக்க நினைத்தார். ஆனால் போலி ஆன்மிகவாதி நித்தியின்  முகத்திரையை நக்கீரன் கிழித்ததுடன், பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்க மீண்டும் ஒரு சட்டப் போராட்டம் நடத்தி பரபரப்பான இந்த நீதிமன்றத் தீர்ப்பினை பெற்றதன் மூலம் பத்திரிகை சுதந்திரத்திற்கானப் புதிய பரிமாணத்தை நக்கீரன் நிலை நாட்டியுள்ளது.

9 comments:

  1. http://www.youtube.com/watch?v=0K8jaK68i88

    ReplyDelete
  2. English Please.:(.......At least just give a summary of what is written in the note

    ReplyDelete
  3. I heard an interesting discussion/analysis re. Nithyananda, overheard in a coffee shop. One can guess from their conversation that that the coffee shop friends are closely following the Nithyananda case, including the latest document published on his website – a US doctor’s views on Nithya’s sexual impotency! These youngsters seem to have analyzed the whole issue threadbare out of academic interest, but it is indeed very educative and relevant, hence sharing their views below:

    Nithya could have walked in and taken established, simple, direct test to prove his impotency, in the last two years. Why has he not done that? It could have avoided the court ordering the test, but that also he has been avoiding for the last one year! Is it because of the additional voice test that can confirm his audio record, where he confessed and justified his intimacy with the woman in the video?

    The original video has been authenticated by FSL, the foremost forensic lab in India. In addition, an internationally renowned forensic expert Mr.Chandrasekaran of Bangalore has authenticated the original video in print media and through TV channel. If Nithya has no sex urge and is like a 6- 11 year old boy, then what was he doing with an adult female in the video?

    In the publicized report the Dr claims that the low blood count would have been developed over a period of time. Now again the question is how long back can the results be extrapolated, since the complaint of abuse is several years before the blood test? Interestingly, the friends even jokingly remarked – “God only knows whose blood was tested and labeled as Nithya’s!”

    They referred to the testimony of another male victim, which they had seen in a leading kannada channel alleging Nithya’s sexual abuse of him for several years in the name of spiritual liberation.

    They also talked about many herbal treatment that can correct or impair the sexual hormonal balance. Also the side effects of many allopathic drugs and even cigarates, can reduce the blood counts. Interestingly impotency itself is not uniform, as there are many persons who are sexually provoked with a few partners but sterile with most others (and that may include their wives too). And in an interesting twist, it seems over indulgence or excess masturbations can lead to lowering of sex hormone counts!!

    They referred to media report revealing that Nithya had been using condoms and the victim herself has procured it for him! This clever move would certainly insulate him from any risk of STD, in case the victim has any!

    They parted saying that Nithya has all the money to spend on all indirect and complex tests rather than simple direct test and also seek foreign experts to testify as if they are the ultimate!

    Please share it with your readers.

    ReplyDelete
  4. மேலும் நித்யானந்தா-ரஞ்சிதா தொடர்பான சி.டி. உண்மையானது தான் மார்பிங் செய்யப்பட்டது அல்ல என சான்றளிக்கப்பட்ட தடய அறிவியல் அறிக்கைகளை நீதிமன்றத்தில் ஆவணங் களாக வாதி ஆசிரமத் தரப்பு தாக்கல் செய்ததன் மூலம், தங்கள் பத்திரிகையில் உண்மைச் செய்திகளையே வெளியிடுவ தாக கூறும் நக்கீரன் தரப்பு வாதத்திற்கு ஆசிரம தரப்பு துணை நின்று, அதனை ஒத்துக்கொள்வதாக இந்நீதிமன்றம் கருதுகிறது. super finly truth will win !!

    ReplyDelete
  5. http://www.youtube.com/watch?v=UdxrDH0iKxQ&list=PLSaiyHEHOrKOzvs2XAx7HK9SHcDVt7zgK

    Nityananda Rape Case - Aarthi Rao's English Interview

    ReplyDelete
  6. http://www.youtube.com/watch?v=wszfBeKbL4I

    Latest CID Chargesheet 2012-Nithyananda Commits Sex Crimes

    ReplyDelete
  7. Nithyananda admits about sex video to Lenin

    http://www.youtube.com/watch?v=rdyXbCcYFDE

    ReplyDelete
  8. TV9 Discussion : Condoms, Alcohol & Meditation in Nithyananda !!!

    http://www.youtube.com/watch?v=XrlSsUjxsNI

    ReplyDelete
  9. Please provide English translations for all vernacular articles. There are many who are following this case with interest, but are unable to understand articles written in non-English languages. Thanks

    ReplyDelete