Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Friday, June 7, 2013

என்ன செய்கிறார் மதுரை ஆதீனம்? -மினி தொடர்: பாகம் 6


எல்லாத் தவறுகளையும் நிவர்த்தி செய்துவிட்டேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் மதுரை ஆதீனம். ஆனால், அவரது பதவிக்கு வேட்டு வைப்பதற்கான நடவடிக்கையில் சிலர் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். இத்தனை பிரச்னைகளுக்கும் காரணமான நித்தியோ குஜாலாக இருக்கிறார்.

வழக்குகள்:

மதுரை ஆதீனத்திற்கு எதிராக ஆரம்பத்தில் நிறைய வழக்குகள் தாக்கல் ஆனாலும் கூட, இப்போது 3 வழக்குகள் தான் நிலுவையில் இருக்கின்றன.

1. "நித்தியானந்தாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மீனாட்சிப்பிள்ளைகள் அமைப்பின் சார்பில் தொடரப்பட்ட வழக்கு.

2. "அருணகிரிநாதர் இந்து அறநிலையத் துறையின் அனுமதி பெறாமல் தன்னுடைய சுயலாபத்துக்காக ஆதீனச் சொத்துக்களை விற்று இருக்கிறார். ஆதீனத்தின் நிதியையும் சுயவிளம்பரத்துக்காக செலவு செய்திருக்கிறார். அதனால், அவரை ஆதீனப் பொறுப்பில் இருந்து விடுவித்து மடத்தை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர உத்தரவிட வேண்டும்" - என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கு.

3. "மதுரை ஆதீனத்திற்குள் செல்லவும், பூஜைகள் செய்து வழிபடவும் அனுமதிக்க வேண்டும்" என்று நித்தியானந்தா தொடர்ந்த வழக்கு.
 
இவை அனைத்துமே மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் தான் விசாணையில் இருக்கின்றன. இந்த வழக்குகள் மீதான விசாரணை துரிதமாக நடைபெறவில்லை. வாய்தா...வாய்தா... என்று போய்க் கொண்டிருக்கிறது. இந்த வழக்குகள் போதாது என்று, "நித்தியானந்தா மதுரை ஆதீனத்திற்குள் நுழையக் கூடாது" என்று மதுரை ஆதீனம் தொடர்ந்த வழக்கும் இதே கோர்ட்டில் தான் விசாரணையில் இருக்கிறது. கடைசியாக கடந்த 3ம் தேதி இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அதன் மீதான விசாரணையை மேலும் ஒரு மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது நீதிமன்றம்.

ஜெயலலிதாவுக்கு ஐஸ்:


தனக்கு எதிரான 3 வழக்குகளில் ஆதீனம் மிகவும் பயப்படுவது, இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்த வழக்கைப் பார்த்துத் தான். "அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. ஆதீனச் சொத்து, நிதி தொடர்பான விஷயங்களில் சந்நிதானத்துக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது" என்று அவர் தாக்கல் செய்த மனுவை ஆரம்பத்திலேயே நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆக, அரசாங்கத்தை ஐஸ் வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஆதீனம்.

ஏற்கெனவே, முதல்வர் ஜெயலலிதாவை 'நெருப்பாற்றில் நீந்தி வந்த சிங்கம்', 'தங்கத்தாரகை' என்று வார்த்தைக்கு வார்த்தை புகழும் ஆதீனம், இப்போது அம்மாவின் ஒவ்வொரு திட்டத்தையும் வரவேற்று அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். மதுரையில் தமிழன்னை சிலை அமைக்கும் ஜெயலலிதாவின் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தமிழறிஞர்களே கூட அதை எதிர்த்தார்கள். ஆனால், ஆதீனமோ "ஆகா... அற்புதம்" என்று புகழ்ந்தார். 2 நாட்களுக்கு முன்பு அம்மா உணவகம் திறக்கப்பட்டதைப் பாராட்டி அவர் வெளியிட்ட அறிக்கையில், அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டன் போல, "வாழ்நாளெல்லாம் போதாதே அம்மாவின் புகழ் பாட... வளர்க அம்மாவின் உணவகங்கள்" என்று நெக்குறுகி இருந்தார்.

துரிதப்படுத்தும் அமைப்புகள்:


இதுபற்றி மீனாட்சி பிள்ளைகள் அமைப்பின் தலைவர் ஜெகதலபிரதாபனிடம் கேட்டோம். "மதுரை ஆதீனத்தை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையில் நாங்கள் இன்னமும் உறுதியாக இருக்கிறோம். 1994ல் தன்னுடைய சொந்த அத்தை மகன் சுவாமிநாதனை இளைய ஆதீனமாக நியமித்தார் அருணகிரி. பிறகு, பணத்துக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு எந்தத் தகுதியுமே இல்லாத நித்தியை நியமித்தார். சமீபத்தில் ஒரு சாதித்தலைவரை, அதுவும் கொடும் குற்றப்பின்னணி கொண்டவரை மடத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

இப்போது வைஸ்ணவி குடும்பத்தினருக்கு வாரி வழங்குகிறார். வைஸ்ணவி நிச்சயதார்த்தத்தின் போது, அருணகிரிநாதர் கொடுத்த 5 லட்சம் யாருடைய பணம்? மடத்தின் வருமானத்தை நற்காரியங்களுக்குப் பயன்படுத்தாமல் இப்படி ஆசைப்பட்டவர்களுக்கு எல்லாம் வாரி இறைப்பதன் மூலம் தான் இன்னும் திருந்தவில்லை என்று நிரூபித்திருக்கிறார். எனவே ஆதீன மடத்தை அவரது பிடியில் இருந்து மீட்பதற்காக இந்த வழக்குகளை துரிதப்படுத்துவதற்கான முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கிறோம். அதற்கு அரசும், அறநிலையத்துறையும் உதவ வேண்டும். தன்னைப் புகழந்து ஆதீனம் வாரந்தோறும் வெளியிடும் அறிக்கைகளை நம்பி முதல்வர் ஜெயலலிதா ஒருபோதும் ஏமாற மாட்டார் என்று நம்புகிறோம்" என்றார்.
 
இதே மனநிலையில் தான் அவருக்கு எதிரான மற்ற அமைப்புகளும் இருக்கின்றன. நேற்று (5ம் தேதி) கூட மதுரை ஆதீனத்திற்கு எதிரான மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அந்த போஸ்டரில் வைஸ்ணவிக்கும், ஆதீனத்துக்கும் என்ன உறவு? என்று கேட்டிருக்கிறார்கள் மாணவர்கள்.

என்ன செய்கிறார் ஆதீனம்?

இதுபற்றி ஆதீனத் தரப்பில் பேசினோம். "மதுரை ஆதீனத்தில் உள்ள திருஞானசம்பந்தர் சன்னதியில் தினமும் 3 வேளை பூஜை செய்கிறார் சந்நிதானம். பகல் 11.30 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவதற்காக ஒடுக்கத்தில் காத்திருக்கிறார். பிரச்னைக்கு உரியவர்களையும், பத்திரிகையாளர்களையும் தவிர வேறு யார் வந்தாலும் சந்திக்கிறார். புதிதாக நியமிக்கப்பட்ட தம்பிரான் சுவாமி, அவருக்குத் தேவையான பணிவிடைகள் எல்லாவற்றையும் செய்கிறார்.

தருமை ஆதீனம், திருவாடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், குன்றக்குடி ஆதீனம் ஆகியோருடனான நட்பை புதுப்பித்திருக்கிறார். மதுரை ஆதீனத்தில் நடந்த திருஞானசம்பந்தர் குருபூஜையின் நிறைவாக கடந்த 31ம் தேதி கூட அவர் திருவாடுதுறை, தருமை ஆதீனங்களுக்குச் சென்றார். செய்த தவறுகளை எல்லாம் அவர் உணர்ந்துவிட்டார். சிவ பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் தனக்கு ஆதரவு தர வேண்டும் என்று விரும்புகிறார்" என்கிறார்கள்.

"வைஸ்ணவி ஆதீனப்பணிகளை தொடர்வது உண்மைதான். ஆனால், அவருக்கும், சந்நிதானத்துக்கும் தந்தை- மகள் உறவு தான் இருக்கிறது. அவரது தங்கை கஸ்தூரியும் கூட எல்லா நாட்களும் இங்கே தங்கி இருப்பதில்லை. அவர் கும்பகோணத்தில், எம்.எஸ்சி. ஐ.டி. படித்துக் கொண்டிருக்கிறார்" என்கிறார்கள்.

நித்தியானந்தா என்ன செய்கிறார்? 

நித்தியானந்தாவுக்கு எந்தக் கவலையும் இல்லை. பாதிக்கப்பட்டது அவர் இல்லையே? இழந்த மதுரை ஆதீனப்பதவிக்குப் பதிலான வடநாட்டுச் சாமியார்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து 'மகாமண்டலேஸ்வரர்' பதவியைப் பெற்றுவிட்டார் நித்தி. இது மாவட்ட செயலாளர் பதவி போலத் தானாம். இந்தியாவில் மட்டும் நாற்பது, ஐம்பது 'மண்டலேஸ்வரர்கள்' இருக்கிறார்கள். தன் பெயரிலேயே (நித்தியானந்தா) ஒரு 'மண்டலேஸ்வரர்' மகாராஷ்டிராவில் இருப்பது நித்திக்கு தாமதமாகத் தான் தெரியுமாம்.

இதனால், உலகம் முழுக்க இருக்கும் தனது பக்தர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையை மட்டுமே இப்போது முழு மூச்சாகச் செய்து கொண்டிருக்கிறார் நித்தியானந்தா. 'இன்னர் அவேக்னஸ்' என்ற பயிற்சி தான் அவருக்கு வருமானம் கொழிக்கும் தொழில். அதை சிறப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார். பிடதி ஆசிரமம், ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல் என்று ஒவ்வொரு மாதமும் ஓரிடத்தில் பயிற்சி நடக்கிறது. தற்போது பள்ளி விடுமுறைக்காலம் என்பதால், சிறுவர்கள் கூட மொட்டையும், கொட்டையுமாக வந்து அவரிடம் பயிற்சி பெறுகிறார்கள்.

ஃபிரஷ் சீடர்கள்:


நித்தியானந்தாவின் சீடர்களாக இப்போதும், டாக்டர், என்ஜினீயர், கணினி வல்லுனர்கள் என்று புதிதாக நிறைய இளைஞர்கள் சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அவருக்கு பாத பூஜை செய்வது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். சின்னஞ்சிறு பையன்கள் எல்லாம் நித்தியின் காலணிகளுக்கு பூஜை செய்யும் காட்சியை அவரது இணைய தளத்தில் காண முடிகிறது. தினமும் காலையில் அருளாசி வழங்கும் நித்தி, அதன் வீடியோ காட்சியை அன்றைய தினமே இணையத்தில் பதிவேற்றம் செய்கிறார். (அவரது லேட்டஸ்ட் வீடியோவைப் பார்க்க இதைச் சொடுக்கவும்:
 http://www.youtube.com/watch?v=TS6VadZUeeo&feature=player_embedded#! )

இதைப் போலவே அவரது அன்றாட ஆன்மீகப் பணிகள் பற்றிய புகைப்படங்கள் குறைந்தது பத்தாவது பதிவேற்றம் செய்யப்படுகிறது. அந்தப் படங்களைப் பார்க்கும் போது, இவ்வளவு திறமையான புகைப்படக் கலைஞர்கள் இவரிடம் போய் சிக்கியிருக்கிறார்களே என்று தோன்றுகிறது. சில தனியார் டி.வி.களிலும், தனது பிரத்யேக டி.வி. சேனல், ரேடியோ, இ-மேகஸின் போன்றவற்றிலும் இடைவிடாது அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார் நித்தி. நீண்ட காலம் வாழ்வது எப்படி? இளமையை நீட்டிப்பது எப்படி? ஜீவமுக்தி பெறுவது எப்படி என்று இந்தி, தமிழ், ஆங்கிலம் என்று எல்லா மொழிகளிலும் பேசுகிறார்.

பெண்களிடம் 'தாந்திரிக செக்ஸ் காண்ட்ராக்ட்' செய்தது சர்ச்சை ஆனதால், அதை மாற்றி அமைத்திருக்கிறாராம் நித்தி. அதில் கையெழுத்திட்டுவிட்டு, 16, 18 வயது பெண்கள் எல்லாம் அவருக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறார்கள். முன்பு பெண்களுக்கு அவர் ஜீவமுக்தி வழங்கும் காட்சிகள் புகைப்படமாக பதிவேற்றப்பட்டது. இப்போது ஆண்கள் படத்தை மட்டுமே பதிவிடுகின்றனர். நித்தி பெண்களுடன் இருக்கும் போட்டோவை தரவிறக்கம் செய்து, பத்திரிகைகள் மிஸ்யூஸ் செய்துவிடுவதால் தான் இந்த நடவடிக்கை என்று சொல்கிறார்கள் நித்தியின் சீடர்கள்.
 
   
தவிடு பொடியான வழக்குகள்:

நித்தி-ரஞ்சிதா படுக்கைக் காட்சிகளை வீடியோ எடுத்தவர் வினய் பரத்வாஜ். தன்னை ஹோமோசெக்ஸுக்குக் கட்டாயப்படுத்தியதாக நித்தி மீது பரபரப்பு புகார் கூறியவரும் இவரே. நித்தியின் பிரதான எதிரியான இவர், தற்போது சிறையில் இருப்பதாகச் சொல்கிறார்கள் நித்தி ஆதரவாளர்கள். அமெரிக்காவில் சிறுவன் ஒருவனை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வினய் பரத்வாஜுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 57 மாதம் (சுமார் நான்கரை ஆண்டு) சிறை தண்டனை விதித்துள்ளதாகச் சொல்கிறார்கள். தன் மற்றொரு எதிரியான லெனின் கருப்பன் மீது, ஒரு வருடத்திற்கு முன்பு தன்னுடைய பெண் சீடர் ஒருவர் மூலம் கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் புகார் கொடுத்திருந்தார் நித்தி. அந்த வழக்கை போலீஸார் பதிவு செய்யவில்லை. தற்போது கோர்ட் மூலம் லெனின் கருப்பன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பெற்றிருக்கிறார் நித்தி. இதேபோல ஆர்த்தி ராவை மிரட்டும் நடவடிக்கையிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள் நித்தியின் வழக்கறிஞர்கள்.

நித்தியானந்தா தன்னைத் தாக்கியதாக கர்நாடக செய்திச் சேனல் சுவர்ணா டி.வி. நிருபர் அஜித் கொடுத்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர். ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல கர்நாடகா நவ நிர்மாண் என்ற அமைப்பு கொடுத்த புகாரின் பேரில் நித்தி மீது பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கர்நாடக ஹைகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து இந்தத் தீர்ப்புகளைப் பெற்றிருக்கிறாராம் நித்தி. தன் பண பலத்தால் தன் மீதான வழக்குகள் பலவற்றை நித்தி உடைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
   
மதுரைக்கு வருகிறார் நித்தி!

இந்தக் கொடுமைகளுக்கு மத்தியில், நித்தியானந்தா மீண்டும் மதுரைக்கு வர இருப்பதாக அவரது சீடர்கள் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். "மதுரை ஆதீனப் பதவிக்காக அவர் வர மாட்டார். வரவும் விரும்பவில்லை. தன்னை எதிர்த்து, விரட்டியடித்தவர்கள் மத்தியில் எதையாவது செய்ய வேண்டும் என்ற திட்டம் அவருக்கு இருக்கிறது. எனவே, அழகர்கோவில் அல்லது திருப்பரங்குன்றம் போன்ற ஊர்களில் ஒன்றில் தனது நித்யானந்தா தியான பீடத்தின் கிளையை அமைக்கவிருக்கிறார்" என்கிறார்கள்.

ஆக, ஆதீனம் ஓய்ந்துவிட்டார். மீண்டும் அடிவாங்குவதற்குத் தயாராகி வருகிறார் நித்தியானந்தா!

(தொடர் நிறைவடைந்தது)

2 comments:

  1. மீண்டும் அடிவாங்குவதற்குத் தயாராகி வருகிறார் நித்தியானந்தா!

    ரொம்பப் பொருத்தமான closing statement !

    ReplyDelete
  2. என்ன செய்கிறார் நித்தியானந்தா?" என்று தொடர் எழுதியிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்!

    ReplyDelete