Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Sunday, January 6, 2013

"நித்தி' பிறந்த நாள் ஆடம்பரமாக கொண்டாட முடிவு

ஜனவரி 05,2013,02:07 IST


திருவண்ணாமலை: நித்தியானந்ததா இந்தாண்டு பிறந்த நாளை சிறப்பாக பக்தர்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளார். அவரது நேரடி கண்காணிப்பில் விழா ஏற்பாடு நடந்து வருவதால், திருவண்ணாமலை தியான பீடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நித்தியானந்தாவுக்கு, 2012ம் ஆண்டு மிகவும் சோதனையான ஆண்டாக அமைந்தது. அவர் பல்வேறு இன்னல்களை சந்தித்து, மிகுந்து மன உளைச்சலுக்கு ஆளாகினார். இதில், கடந்தாண்டு ஏப்ரல், 29ம் தேதி, 203வது மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டபோது, மிகுந்து மகிழ்ச்சியில் திளைத்த போதும், மற்றொருபுறம் ஹிந்து அமைப்புகள் , பிற ஆதீனம், பிற மடத்தை சேர்ந்தவர்களின் எதிர்ப்பு போன்றவை இவரது நிம்மதியை பறித்தது.

ஏற்கனவே நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் சர்ச்சை ஓயாத நிலையில், இளைய ஆதீன பொறுப்பு ஏற்றதும் அதற்கு வந்த எதிர்ப்பாளர்களையும் சமாளிக்க முடியாத நிலைஏற்பட்டது. பிடதி ஆசிரமத்தில் நிருபர்களுடன் மோதல் ஏற்பட்டு, கடந்த ஜூன், 12ம் தேதி பிடதி ஆஸ்ரமம் சீல் வைக்கப்பட்டு, மறுநாள் கர்நாடகா போலீஸாரால், நித்யானந்தா கைது செய்யப்பட்டதால், அடுத்த சறுக்கல் ஏற்பட்டது,
நேரடி தலையீட்டால் பரபரப்பு :

அக்டோபர், 16ம் தேதி, "மதுரை ஆதீனத்தின் இளையமடாதிபதியாக நியமித்தது செல்லாது' என, தமிழக அரசு அறிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனால், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நித்யானந்தாவை இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து நீக்கினார். இதனால், கடந்தாண்டு இவருக்கு அடிமேல் அடியாக, ஆண்டு முழுவதும் நித்யானந்தாவுக்கு சோதனையாக அமைந்தது. இவரது சீடர்கள் சிலர் விரக்திக்கு ஆளாகினர். சிலர் நித்யானந்தாவின் சீடர் என சொல்வதை தவிர்த்து அவரிடமிருந்து விலகி செல்ல துவங்கினர். அதனால், அவருக்கு கடந்த காலங்களை போல் சீடர்கள் கூட்டம் இல்லாமல் குறைந்து விட்டனர். இதனால், அவரது சீடர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்து மீண்டும் தன் பழைய இமேஜை கொண்டு வர அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.அதற்காக, 2013ம் ஆண்டில் அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார். அவரது பிறந்த நாள் நட்சத்திரம் நாளை வருவதால் அவரது, 36வது பிறந்தநாளை, 36வது அவதார பெருநாளாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தியான பீடத்தில் கொண்டாட முடிவு செய்துள்ளார். 
இதற்காக தியான பீடத்தில் பிரமாண்டமாக பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது, அன்னதானம் வழங்க, அங்கு போதுமான இடம் இல்லாததால், அவரது தியான பீடத்தின் எதிரில் உள்ள சீனுவாசா உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 
எப்போதும் தியான பீடத்தில் எந்த விழா நடந்தாலும், அவரது சீடர்களே ஏற்பாடு செய்வது வழக்கம், ஆனால், இந்த முறை விழா சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக, மூன்று நாட்களுக்கு முன்னதாகவே திருவண்ணாமலைக்கு வந்துவிட்ட நித்தியானந்தா, விழா ஏற்பாடுகளை தன் நேரடி பார்வையில் செய்து வருகிறார். அவரது ஆஸ்ரமத்திற்கு வெளியூரிலிருந்து, சீடர்கள் வருகை தர துவங்கி விட்டனர். 
இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் ஹிந்து அற நிலையத்துறை அதிகாரிகளும், போலீஸாரும் தியான பீடத்தில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=620006

13 comments:

  1. அடப்பாவி உனக்கு பிறந்தநாள் ஒரு கேடா.

    ReplyDelete
  2. ஆஹா சாமியோட அற்புதமான போஸ் பாருங்கள். சாமீ கண்டிப்பா பிறந்தநாள் கொண்டனுமா? ரொம்ப முக்கியம்.

    ReplyDelete
  3. வருமானவரித்துறை திரும்பவும் தூங்குமா? இவரை எளிதில் பிடிக்க அது ஒன்றே வழி....

    ReplyDelete
  4. திருவண்ணாமலை ரமண மகரிஷியால் புகழ் & புனிதம் பெற்ற தளம் இங்க வந்து இந்த ஆளு இப்படி செயிரானே

    ReplyDelete
  5. இந்த ஆளின் ஆசிரமத்தை கிரி வல பாதையிலிருந்து அகற்றனும்

    ReplyDelete
  6. எந்த வயது பெண் வந்தாலும் தள்ளி நில்லு. இல்லை என்றால் குண்டர் சட்டம்தான்

    ReplyDelete
  7. சாமியார்களும் அரசியல்வாதிகளும் எவ்வளவு கற்பழிப்புகள் வேண்டுமானாலும் செய்யலாம் . சட்டம் நத்தை வேகத்தில் பாயும் . ஆர்த்தி ராவ் போன்றவர்கள் இந்தியாவில் நியாயம் கிடைக்கும் என்று நீதி மன்றத்தை நாடியுள்ளது நகைப்புக்குரியது.

    ReplyDelete
  8. நித்திக்கு கிட்டி அடி எப்போது?...

    ReplyDelete
  9. என்ன்னடா இது சாமியார பத்தி விஷயங்கள் கொஞ்ச நாளா பேப்பர்லே வரலேயே, சாமியார் எதாவது மாமியார் வீட்லே இருக்காறான்னு' ஜனங்க மண்டையே பிய்த்துகொண்டு இருந்ததில் பலர் வழுக்கைத் தலையர்களாக ஆகிவிட்டார்கள். ஆனாக்க இப்போதான் தெரியுது அவர் தனது 36 ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி நிரல் ஏற்பாடுகள் செய்வதில் மும்முரமாக இருக்கிறார் என்று அறியும்போது. பிறந்த நாள் நிகழ்சிகளில் ஒரு பகுதியாக பீடத்தில் புதிய அங்கத்தினர்கள் சேர்ப்பு நிகழ்ச்சி ஏதாவது இருந்தால் பலர் தங்க பஸ்பம் (புகையிலை இல்லை) காய கல்பம் போன்ற காணிக்கைகளுடன் சேர காத்துகொண்டு இருக்கிறார்கள். சரி என்று சாமியாரின் ஒரு சிறிய தலை அசைப்பு அவர்களை விழாப் பந்தல்முன்பு கியூ வரிசயில் நிற்க வைத்து விடும். சீடர்கள் இருக்கும் வரை உங்களுக்கு எந்த குறையும் வராது. அள்ள, அள்ள குறையாது. கிள்ள கிள்ள வலிக்காது. ஜமாயுங்கோ சாமியாரே

    ReplyDelete
  10. கரகாட்டக்காரன் கவுண்டமணி செந்தில் ஜோக் நினைப்புக்கு வந்தது...அந்த சினிமாகாரங்கதான் செலவு செஞ்சு பிறந்த நாள் கொண்டாடுவாங்க...இப்ப சாமியாரும் செலவு செஞ்சு பிறந்த நாள் கொண்டாடுவாங்க போல ...

    ReplyDelete
  11. சாமி அடுத்த ஆட்டத்துக்கு ரெடி ஆகிட்டார்.மதுரை அருணகிரிக்கும் மதுரை மக்களுக்கும் தான் கொடுத்து வைக்கவில்லை ,விடிய விடிய ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் .....36வது பிறந்தநாளை, 36வது அவதார பெருநாளாக கொண்டாட போகிறார்களாம்,சாமி இன்னும் எத்தனை அவதாரம் எடுக்க போகிறாரோ?

    ReplyDelete
  12. சீரியஸாக போய்க் கொண்டிருக்கும் கதைக்கு நடுவே கொஞ்சம் காமெடி கலந்திருக்கிறீர்கள். குத்தாட்டம் உண்டா என்று கேட்டு சொல்லுங்கள். கையில் ரூபாய் நோட்டை வைத்து கொண்டு காத்திருக்கிறது ஒரு கூட்டம்

    ReplyDelete
  13. யாராவது வீடியோ எடுத்து அடுத்த எபிசோட ரிலீஸ் பண்ணுங்க.....

    ReplyDelete