Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Wednesday, January 1, 2014

Koppiyam - Actress Ranjitha Turns Sanyas


நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்று சன்னியாசி ஆனார் நடிகை ரஞ்சிதா! பெங்களூரு: சாமியார் நித்தியானந்தாவுடன் சேர்ந்து இருப்பது போன்று வெளியான வீடியோ காட்சிகளால் பரபரப்புக்குள்ளான நடிகை ரஞ்சிதா சன்னியாசி ஆனார். இதற்கு மடாதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். "நாடோடி தென்றல்" படம் மூலம் அறிமுகமான நடிகை ரஞ்சிதா, தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் பெங்களூர் அருகே பிடதியில் நித்தியானந்தா நடத்தி வரும் ஆசிரமத்திற்கு அடிக்கடி வந்து சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நித்தியானந்தா-நடிகை ரஞ்சிதா தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நித்தியானந்தா கைது செய்யப்பட்டார். இது தொடர்பான பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில், நித்தியானந்தாவின் பிறந்த தினத்தையொட்டி கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள அவரது பிடதி ஆசிரமத்தில் நேற்று விழா நடைபெற்றது. இந்த விழாவில் அவரது சீடர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது நித்தியானந்தாவிடம் இருந்து தீட்சை பெற்று நடிகை ரஞ்சிதா சன்னியாசி ஆனார். அதனை தொடர்ந்து நடிகை ரஞ்சிதா, இனி "மா ஆனந்தமயி" என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருடன் மேலும் சில பெண் சீடர்களும் சன்னியாசியாகி தீட்சை பெற்றனர். நடிகை ரஞ்சிதா சன்னியாசியாகி தீட்சை பெற்றதற்கு கர்நாடகத்தை சேர்ந்த பல மடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சன்னியாசி தீட்சை பெறுவது என்பது சுலபமானது அல்ல. தியாக மனோபாவம் இருக்க வேண்டும். அதற்கென்று சாஸ்திர சம்பிரதாயங்கள் உள்ளன. அவை எல்லாம் கடைப்பிடிக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். http://news.vikatan.com/article.php?module=news&aid=22800

6 comments:

  1. இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்கள ....

    ReplyDelete
  2. அட பொப்பா...! இது என்னமொ புதுசு பொல

    ReplyDelete
  3. நித்ய தர்மம் தொடர்கிறது.. சம்பவாமி யுகே யுகே.. ஆட்டு மந்தை மக்கள் இருக்கும் வரை ஆட்டம் நிற்காது. அவதார புருசரின் அடுத்த லீலை என்னவோ?

    ReplyDelete
  4. இனி என்ன ! என்றென்றும் "ஆண்மிக" ஆராய்ச்சிகளுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது ! முழுக்க நனைந்த பிறகு முக்காடெதெற்கு ? பேசாமல் இருவரும் மணம் புரிந்து கொண்டு தொடர்ந்து முழு உரிமையுடன் "ஆண்"மிக ஆராய்ச்சிகளில் ஈடு படலாமே! ! தீட்சையாம் ! சந்நியாசியாம் ! யாரை ஏமாற்றுகிறர்கள்? "சாமியார்கள் , ஆஸ்ரமம் , சந்நியாச வாழ்க்கை " என்ற எல்லா உயர் நிலைமைகளுக்கும் என்றென்றும் தீராத அவப்பழியை அல்லவா இருவரும் சேர்ந்து உண்டாக்கிவிட்டார்கள்! பாவம் திருமதி ரஞ்சிதா அவரது கணவரும் மற்றும் அவர் உறவினர்களும்!

    ReplyDelete
  5. Don't know whether to laugh or scold these people !! Common men should be clever enough ....

    ReplyDelete
  6. http://www.dinamalar.com/news_detail.asp?id=887344
    http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=114092
    http://www.maalaimalar.com/2014/01/03103231/Tiruchengode-nithyananda-follo.html
    திருச்செங்கோட்டில் நித்தியா
    னந்தா சீடர்களை கண்டித்து கணவன்–மனைவி உண்ணாவிரதம்
    திருச்செங்கோடு, ஜன. 3–

    திருச்செங்கோடு வீரராகவர் தெருவை சேர்ந்தவர் செங்கோட்டுவேல் (40), இவரது மனைவி சுகந்தி (37). இவர்கள் இந்த பகுதியில் பிரவுசிங் சென்டர் நடத்தி வருகிறார்கள்.

    இவர்கள் நித்தியானந்தாவின் தியான வகுப்புகளை இணைய தளத்தில் விளம்பரம் செய்ய திருச்செங்கோடு தியான பீட நிர்வாகிகளிடம் ஒப்பந்தம் செய்தனர். அதன்படி தனசேகர் என்கிற சதானந்தா உள்ளிட்ட நிர்வாகிகள், பணத்தை தரவில்லை என்று கூறி பிரவுசிங் நடத்தி வந்த தம்பதியினர் திருச்செங்கோடு டவுன் போலீசில் புகார் செய்தனர். ஆனால் இதுவரை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதையடுத்து நித்தியானந்தா தியான பீடத்தினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, திருச்செங்கோடு வீரராகவர் தெருவில் உள்ள தங்களது வீட்டின் முன்பாக செங்கோட்டுவேல், அவரது மனைவி சுகந்தி ஆகியோர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    ReplyDelete