Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Monday, October 27, 2014

நித்யானந்தா மீது பெண் சீடர் தொடர்ந்த கற்பழிப்பு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 26–ந் தேதிக்கு ஒத்திவைப்பு


பெங்களூர்,

பெண் சீடர் தொடர்ந்த கற்பழிப்பு வழக்கில் ராமநகர் கோர்ட்டில் நித்யானந்தா சாமியார் நேரில் ஆஜரானார். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 26–ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

கற்பழிப்பு வழக்கு

பெங்களூர் அருகே பிடதியில் உள்ள தியான பீடத்தில் நித்யானந்தா சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் முன்னாள் சீடரான ஆர்த்திராவ் என்பவர் நித்யானந்தா மீது பிடதி போலீசில் கற்பழிப்பு புகார் கொடுத்தார். அதன்பேரில், பிடதி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினார்கள். பின்னர் சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நித்யானந்தா சாமியாருக்கு ஆண்மை பரிசோதனையும், மடிவாளாவில் குரல் பரிசோதனையும் நடத்தப்பட்டது. அந்த அறிக்கைகளை கடந்த 15–ந் தேதி ராமநகர் செசன்சு கோர்ட்டில் சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர். அன்றைய தினம் வழக்கு விசாரணையை 27–ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

நவம்பர் 26–ந் தேதிக்கு ஒத்திவைப்பு

அதன்படி, ராமநகர் மாவட்ட செசன்சு கோர்ட்டு நீதிபதி ஒசகவுடர் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. நித்யானந்தா சாமியார் தனது சீடர்களுடனும்,  காலை கோர்ட்டுக்கு வந்து நீதிபதி முன் ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 26–ந் தேதிக்கு நீதிபதி  ஒத்திவைத்தார்.

மேலும், பெண் சீடர் ஆர்த்திராவ் தொடர்ந்த வழக்கில் போலீசார் கைது செய்யாமல் இருக்க ஜாமீன் கேட்டு நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மனு மீதான விசாரணையையும் நவம்பர் 26–ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். இதைத்தொடர்ந்து, கோர்ட்டில் இருந்து நித்யானந்தா சாமியார் தனது சீடர்களுடன் புறப்பட்டு சென்றார்.
http://www.dailythanthi.com/News/India/2014/10/27190510/Nithyananda-files-bail-petition-case-adjourned-to.vpf
பாலியல் வழக்கு: நித்யானந்தா ஆஜர்

ராம்நகர்: நித்யானந்தா ஆசிரமத்தின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்திராவ் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு  மருத்துவமனையில் கடந்த மாதம் 7ம் தேதி நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை அறிக்கையை கடந்த வாரம் டாக்டர்கள் கர்நாடக  சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர். வழக்கு தொடர்பாக நித்யானந்தா அக்டோபர் 27ம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என ராம்நகரம்  நீதிமன்ற  நீதிபதி ஹொசகவுடா உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று காலை 11.15 மணிக்கு நிதியானந்தா நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு விசாரணை நவ. 26க்கு  ஒத்திவைக்கப்பட்டது. - 
See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=64759#sthash.grB3AkYF.dpuf

No comments:

Post a Comment