Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Friday, October 18, 2013

ஆசிரமத்தில் ரெய்டு: மீண்டும் பொலிஸ் வலையில் நித்யானந்தா!

[ வியாழக்கிழமை, 17 ஒக்ரோபர் 2013, 10:36.39 AM GMT +05:30 ]
கர்நாடகாவில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கெண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
25 நாட்களுக்கு முன்பு நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் 100 பேரை தங்கவைத்து அவர்களது விருப்பதை மீறி மொட்டை அடித்து சன்னியாசி ஆக்குகிறார்.
ஆண், பெண் குழந்தைகள் தவறான பாலியல் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் கமிஷனின் செயலாளர் உமேஷ் ஆரத்தியாவுக்கு புகார் வந்தது.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்த நித்யானந்தா ஆசிரமத்துக்கு உமேஷ் ஆரத்தியா சென்றபோது அவரை உள்ளே விடவில்லை. அதனால் அவர் நித்யானந்தாவின் மேல் கர்நாடக அரசிடம் புகார் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா, உமேஷ் ஆரத்தியா மற்றும் ராம்நகர் டெப்டி ஆட்சியர் இருவரையும் பொலிஸ் பாதுகாப்புடன் சென்று ஆசிரமத்திற்குள் சோதனை நடத்தும்படி உத்தரவிட்டார்.

நடத்தப்பட்ட சோதனையில் வெடித்த வன்முறை மற்றும் நித்யானந்தாவின் ஆட்கள் நடந்துகொண்ட விதம் ஆகியவற்றை பற்றி உமேஷ் ஆரத்தியா கர்நாடக அரசுக்கு புதன்கிழமை அறிக்கை கொடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில், நித்யானந்தா இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 100 குழந்தைகளை எந்தவிதமான பாடத்திட்டமும் இல்லாமல் நித்யானந்தா பாடத்திட்டம் என்ற ஒரு பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் மத்திய அரசு மாநில அரசு என எந்த அரசுகளின் கல்வித்துறையின் அனுமதியில்லாமலும் ஒரு உள்ளூர தங்கும் பள்ளியை நடத்தி வருகிறார்.

அதன் மூலம் அவர் கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்களை சம்பாதிக்கிறார். இது சட்ட விரோதம் என உமேஷ் ஆரத்தியா கூறியுள்ளார்.
உமேஷ் ஆரத்தியாவின் அறிக்கையை தொடர்ந்து, நித்யானந்தாவின் பிடதி ஆசிரமம் மேல் நடவடிக்கை எடுக்கும் முடிவுக்கு கர்நாடக அரசு வந்துள்ளது என தெரிகிறது
.
இதனைத் தெரிந்து கொண்ட நித்யானந்தா, கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையாவை, கண்டபடி திட்டி தனது இணையதளத்தில் பேசியுள்ளார்.
என் மேல் நடவடிக்கை எடுத்த முதல்வர்கள் காணாமல் போனார்கள். என் மேல் நடவடிக்கை எடுத்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சதானந்த கவுடா ஆகியோர் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டனர் என்றும் கடவுளான என் மீது காவல்துறையை ஏவும் முதல்வர் சித்தராமையா விரைவில் சின்னாபின்னமாகிவிடுவார் என சாபமிட்டுள்ளார்.
நித்யானந்தாவின் இந்த சாபம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.newindianews.com/view.php?22cMC403JOyce27mKdb2Y0Mad3o44ec3ODL043AlH223WAo2

2 comments:

  1. இந்த கார்பொரேட் களவாணிகளில் எந்தச் சாமியார் சாமானியனாக இருக்கிறான்? எந்த குரு எளிமையாக இருக்கிறார்? பணத்துக்கும், அதிகாரத்துக்கும், புகழுக்குமாக ஏங்கிக் கிடக்கிறார்கள். தங்களது ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் அமைந்த ஆஸ்ரமங்களில்- சொகுசு பங்களாவுக்கு இவர்களின் அகராதியில் ஆஸ்ரமங்கள் என்று பெயர்- லேண்ட் ரோவரில் வலம் வரும் இந்த புண்ணியவான்களின் வருமானம் பற்றி யாராவது கேள்வி கேட்கிறோமோ?

    ஒருவன் பணக்காரன் ஆவது பற்றியோ, சொத்து சேர்ப்பது பற்றியோ எந்தப் பிரச்சினையும் இல்லை. மகராசனாக இருக்கட்டும். ஆனால் மதத்தையும், ஆன்மிகத்தையும் முன்னிறுத்தியல்லவா சுருட்டி வழிக்கிறார்கள். ஒவ்வொரு சாமியாருக்கும் அரசியல்வாதியின் தொடர்பு இருக்கிறது. ஊடகத்தில் ஆட்கள் இருக்கிறார்கள். கையில் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது. தங்களது அத்தனை அழிச்சாட்டியங்களையும் மறைத்துவிட்டு வாய் நிறைய பற்களோடு தாடியைத் தடவிக்கொண்டே ‘போஸ்’ கொடுக்கிறார்கள். சமத்துவம், சமாதானம், அமைதி என்று சொல்லிச் சொல்லியே அத்தனை பேர்களின் கண்களையும் கட்டி வைத்திருக்கிறார்கள்.

    இதையெல்லாம் நாம் பேசினால் இங்கு சுற்றிக் கொண்டிருக்கும் புண்ணியவான்கள் விடுவார்களா? ‘கிறித்துவ சாமியார்கள்தான் மோசம்; இந்து குருமார்கள் நல்லவர்கள்’ என்று சான்றிதழ் அளிப்பார்கள். சிரிப்பு வருகிறது. சாமியார்கள் மீது எனக்கு எந்தக் காழ்ப்பும் இல்லை. ஏதோவொரு மலையிலும், கிராமத்திலும் காவியோ, வெண் உடையோ தரித்து ஆன்மிகப் பணி செய்து கொண்டிருக்கும் சாமியார்களும், பாதிரிகளும் காலகாலத்துக்கும் வாழட்டும். ஆனால் கார்பொரெட் சாமியார்களையும் மதகுருமார்களையும் காட்டி ‘இவரு நல்லவரு வல்லவரு’ என்றெல்லாம் சொல்ல வேண்டாம். அவர்கள் வெறும் பிழைப்புவாதிகள்; பிஸினஸ் புள்ளிகள். பணம் சேர்க்கும் கேடிகள். அவ்வளவுதான்.

    ReplyDelete
  2. நித்யானந்தா இருக்கிறான் பாருங்கள்- ஒருசமயம் எங்கள் கல்லூரிக்கு வந்திருந்தான். அப்பொழுது கருமுத்து தியாகராஜ செட்டியாரின் குடும்பம்தான் அவனை தாங்கிப் பிடித்திருந்தது. எங்கள் கல்லூரியும் அந்தக் குடும்பத்துடையதுதான். அவன் வந்த போது கொடுக்கப்பட்ட வரவேற்பு இருக்கிறதே- இரண்டு பக்கமும் சிவந்த நிறப் பெண்கள் நின்று பூத்தூவ, மங்கள வாத்தியங்கள் முழங்க பற்களைக் கெஞ்சிக் கொண்டே மேடையேறினான். அதோடு நிற்கவில்லை. வந்தவன் ‘டச் ஹீலிங்’ செய்கிறேன் என்று உயரமான இடத்தில் அமர்ந்து கொண்டான். அவனுக்கு இரண்டு பக்கமும் படிகட்டுக்கள். ஒரு பக்கத்திலிருக்கும் படிக்கட்டு வழியாக மேலேறி அவனிடம் சென்று எந்த இடத்தில் வலிக்கிறது அல்லது நோய் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். பற்களைக் காட்டிக் கொண்டு அந்த இடத்தை அழுத்திக் கொடுப்பான். வலியும் நோவும் பறந்து போய்விடுமாம். இன்னொரு படிக்கட்டு வழியாக நாம் கீழே இறங்கி வந்துவிட வேண்டும். இதுதான் ‘டச் ஹீலிங்’ முறை. எந்த நோயும் இல்லாதவர்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. அவன் அருகில் சென்றால் நெஞ்சு மீது கை வைப்பான். ஆசி வழங்குகிறானாம். அதன் பிறகு எந்த நோயும் வராதாம்.

    அவனுக்கு முன்பாக திரண்ட கூட்டம் இன்னமும் கண்களுக்குளேயே இருக்கிறது. இடுப்பிலும், நெஞ்சிலும் வலி என்று வந்த பெண்கள் உட்பட அத்தனை பேருக்கும் ‘டச் ஹீலிங்’கில் வைத்தியம் பார்த்தான். பிறகுதான் அவன் யோக்கியதை பல் இளித்ததே. ஆனால் இன்னமும் பாருங்கள்- அவன் தான் பரமஹம்ஸன். தந்தி டிவியில் அவனுக்கு தனி ஸ்லாட். தினத்தந்தியில் தினமும் அரைப்பக்கம் வண்ண விளம்பரம். காசு கொடுத்தால் எதை வேண்டுமானாலும் தின்னும் ஊடகங்கள் நம்மைச் சுற்றி இருப்பது நம் பெருந்துக்கம்.

    கொஞ்ச நாட்களுக்கு முன்பாக சாய்பாபாவின் பள்ளியறையில் கோடிக்கணக்கான பணமும், தங்க நகைகளும் இருந்ததாகச் சொன்னார்கள். அதன் பிறகு அவையெல்லாம் என்னவாயின? ஏதாவது சப்தம்? மூச்சு விட மாட்டோமே! அவற்றையெல்லாம் காகம் ஒன்று தூக்கிச் சென்றுவிட்டதாம். அதனால் மறந்துவிட வேண்டும். அவருக்கு எப்படி அத்தனை வருமானம் வந்தது என்றால் ‘வெளிநாட்டில் இருந்து வந்தது’ என்று முடித்து விடுவார்கள். அதோடு நம் கேள்வியை நிறுத்திக் கொள்ள வேண்டும். மீறிக் கேட்டால் ‘அவர் எப்படியோ சம்பாதிக்கட்டும் மருத்துவமனை கட்டி ஏழைகளுக்கு இலவச வைத்தியம் செய்தாரே’ என்பார்கள். அதுதான் நமது கடைசிக் கேள்வியாக இருக்க வேண்டும். இதுதான் அவர்களின் கடைசி பதிலாக இருக்கும்

    ReplyDelete