Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Wednesday, February 13, 2013

SEX SWMI Nithyananda as Maha Mandaleshwar in Kumba Mela


TV9 - Nithyananda as Maha Mandaleshwar in Kumba Mela

4 comments:

  1. நம்ம நித்தி சுவாமிகள் மீண்டும் ஒரு ரவுண்ட் வர தயாராகிவிட்டார். அதற்கு புத்துணர்ச்சி ஏற்றிக்கொள்ள மகா கும்பமேளாவின் மிக முக்கியமான ராஜ குளியலில் கலந்து கொள்ள மவுணி அமாவாசை தினத்தன்று அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் ஆஜரானார், நித்தியானந்தா. திரிவேணி சங்கமத்தின் கரையில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 75 கூடாரங்களில், சினிமா செட் போல பளபளத்தது நித்தியின் சுமார் 100 பக்தர்களை பெங்களூருவில் இருந்து அழைத்து வந்து இறக்கி அசத்தினார் நித்தி. நட்சத்திர ஹோட்டலுக்குக் குறைவில்லாத வசதிகளுடன் இருந்த நித்தியின் கூடாரத்தில், கடுமையான கட்டுக் காவல். அனுமதி இன்றி உள்ளே யாரும் நுழைய முடியாது.

    ராஜக் குளியல் செய்வதற்காக நித்தி, ஆளுயர ரோஜா மாலையுடன் வித்தியாசமான கெட்டப்பில் ஊர்​வலமாக வந்தார். ஊர்வலத்துக்காக செட்டப் செய்யப்பட்டிருந்த ரதத்தில் நித்திக்காக வெள்ளி சிம்மாசனம் வைக்கப்பட்டிருந்தது.
    நித்திக்குப் பாதுகாப்பாகத் துப்பாக்கி ஏந்திய இரு கமாண்டோக்களும் உடன் வந்தது அங்கு வந்திருந்த சாதுக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. யார் இந்த வி.ஐ.பி. சாது என்று அக்கம் பக்கத்தில் விசாரித்துக் கொண்டனர்.

    சரி.. துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு கொடுத்தது யாரு? மத்திய அரசா? உ.பி. அரசா ?

    நித்தி வட்டாரங்களில் விசாரித்தபோது, தனியார் பாதுகாப்பு ஏஜென்சி ஒன்றுக்கு பணம் கொடுத்து பெறப்பட்ட பாதுகாப்பு என்றார்கள். இதற்கு அந்த மாநில அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்கிறார்கள். பாதுகாப்பு ஏஜென்சியின் யூனிபார்மில் இல்லாமல், கமாண்டோ பாணியில் உடையணிந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பது, நித்தி விடுத்த கோரிக்கையாம்! (அந்த டிரெஸ்ஸூக்கு மேலதிக கட்டணம் உண்டு)

    அட, இப்படியொரு செட்டப்பில் மதுரை வந்து, அருணகிரியாரை மிரள வைக்கலாமே!
    http://www.cinekolly.com/2013/02/blog-post_2224.html

    ReplyDelete
  2. நித்யானந்தா பீடம் வழக்கு: தமிழக அரசு மேல் முறையீடு
    By dn, சென்னை
    First Published : 16 February 2013 01:29 AM IST
    திருவண்ணாமலை நித்யானந்தா பீடம் மாநில இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வராது என்ற உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

    திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா பீடத்தை கையகப்படுத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கடந்த ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி அந்த பீடத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

    இந்த நோட்டீûஸ ரத்து செய்யக் கோரி பீடத்தின் மேலாளர் நித்ய பரமானந்தர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே. சந்துரு, நித்யானந்தா பீடம் இந்து மத ஆகம விதிகள் அடிப்படையில் செயல்படும் அமைப்பு அல்ல.

    அனைத்து மத, ஜாதியினரும் அங்கு செல்கின்றனர். அந்த பீடம் இந்து சமய அறநிலையத் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வராது. ஆகவே அந்த பீடத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

    இந்த நிலையில் தனி நீதிபதியின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல் முறையீட்டு மனு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    நித்யானந்தா பீடத்தில் தியானம், யோகா முதலானவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்து மத அர்ச்சகர்கள் மூலமாக பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    இந்த மதச் சடங்குகளின் அடிப்படையிலேயே அந்த பீடத்தின் அன்றாட செயல்பாடுகள் உள்ளன என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மேல் முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
    http://dinamani.com/tamilnadu/article1465741.ece

    ReplyDelete
  3. நித்யானந்தா ஆசிரமத்துக்கு அனுப்பிய "நோட்டீஸ்' ரத்து:ஐகோர்ட்டில் அரசு அப்பீல் மனு தாக்கல்

    பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2013,03:47 IST
    கருத்தை பதிவு செய்ய
    சென்னை:திருவண்ணாமலையில் உள்ள, நித்யானந்தா ஆசிரமத்துக்கு, இந்து சமய அறநிலையத் துறை அனுப்பிய, "நோட்டீஸ்' ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு, அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளது.திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் கிரிவலப் பாதையில், நித்தியானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இங்கு, கடவுள் சிலைகள் அமைத்து, தினமும் பூஜை நடந்து வருகிறது. "இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் வரம்புக்குள், ஆசிரமத்தை கொண்டு வர ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது' என, நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதற்கு தடை விதிக்கவும், ரத்து செய்யவும் கோரி, நித்யானந்தா தியான பீடத்தின் மேலாளர், நித்ய பிரானநந்தா, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்திருந்தார்.

    மனுவை விசாரித்த, நீதிபதி சந்துரு, "நித்யானந்தா தியான பீடம், வழிபாட்டு தலம் அல்ல என்பது, அறக்கட்டளை ஆவணம் மூலம் தெரிய வருகிறது. தியான பீட அறக்கட்டளையை, கையகப்படுத்துவது தொடர்பாக கொடுக்கப்பட்ட, நோட்டீஸ் அடிப்படை ஆதாரமற்றது. இந்து சமய அறநிலையத்துறை, இதை கையகப்படுத்த முடியாது. எனவே, நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனு:
    இந்து சமய அறநிலையத் துறையின், உதவி கமிஷனர் பிறப்பித்த நோட்டீசை, தனி நீதிபதி ரத்து செய்திருக்கக் கூடாது. ஆசிரமத்தில், இந்து மத கடவுள் சிலைகள் உள்ளன. நோட்டீஸ் பெற்ற பின், அங்கு புத்தர் சிலை கொண்டு வரப்பட்டது. யோகா, தியானத்தை பரப்புவது தான், தியான பீடத்தின் நோக்கம் என, கூறப்பட்டுள்ளது.

    இந்து மதத் தத்துவத்தில், யோகாவும் ஒரு அம்சம். இதை, தனி நீதிபதி பரிசீலிக்கவில்லை. பவுர்ணமி தினத்தன்று அன்னதானம் வழங்குவது, பொதுமக்களை அழைத்து சிலை வழிபாடு நடத்துவது, இந்து மதத்தின் அம்சங்களாகும். இந்து மதத்தின் பாரம்பரியப்படி, அங்கு பூஜைகள், சடங்குகள் நடத்தப்படுகிறது. இதற்காக, அர்ச்சகர் உள்ளார். இதை, தனி நீதிபதி பரிசீலிக்கவில்லை. எனவே, கடந்த மாதம், 30ம் தேதி, பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, அப்பீல் மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த அப்பீல் மனு, அடுத்த வாரத்தில், விசாரணைக்கு வருகிற
    http://www.dinamalar.com/news_detail.asp?id=649231

    ReplyDelete
  4. Pls post this news (may be old, not sure)- I will continue as Adeenam head - Nithyananda Swamy, Chennai:
    http://www.citymirchi.com/cm-lv-14189-I-will-continue-as-Adeenam-head---Nithyananda-Swamy-Chennai.html

    ReplyDelete