Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Tuesday, August 26, 2014

விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் இடைக்கால ஜாமீன் ரத்து செய்யப்படும்


கருத்துகள்


பெங்களூர் : ‘நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்றால் கைது செய்து  நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று நித்யானந்தாவுக்கு ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன் றம் எச்சரிக்கை விடுத்தது.கர்நாடக மாநிலம், ராம்நகரம் மாவட்டம், பிடதியில் உள்ள நித்யானந்த ஆசிரமத்தின் மடாதிபதி நித்யானந்தா மீது கர்நாடகாவில் பல வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் போலீசார் நடத்திய விசாரணையில் தனக்கு ஆண்மை சக்தி இல்லை என்று கூறியிருந்தார். அதை மறுத்த பிடதி போலீசார், நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனையும், ரத்த பரிசோதனையும் நடத்த அனுமதி கோரி ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதையேற்று பரிசோதனைக்கு ஒத்துழைக்கும்படி நித்யானந்தாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா மேல்முறையீடு செய்தார். அதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொ டர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அம்மனு மீதான விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எச். எஸ்.ஹொசகவுடர் முன்னிலையில் நித்யானந்தா வழக்கு நேற்று விசாரனைக்கு வந்தது. அப்போது, நித்யானந்தா சார்பில் ஆஜரான வக்கீல் முத்துமலை, ‘‘நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்துவது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகவே, தீர்ப்பு வெளியாகும் வரையில் இந்த விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’’ என்றார்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சிஐடி போலீஸ் வக்கீல், ‘‘ஆண்மை பரிசோதனை செய்யும் முடிவு மனுதாரர்களின் மெத்தனம் காரணமாக காலதாமதமாகி வருகிறது’’ என்றார். இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, ‘‘நீதிமன்ற விசாரணைக்கு சமூகத்தில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஒத்துழைக்க வேண்டும். அப்படி ஒத்துழைக்கவில்லை என்றால் உங்களுக்கு வழங்கியுள்ள இடைக்கால ஜாமீனை ரத்து செய்வதுடன், கைது செய்து விசாரணையை சந்திக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்து, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=106822

Monday, August 25, 2014

Nithyananda appeared in Ramnagar Chief Judicial Magistrate Court today along with all 5 co-accused

Nithyananda appeared in Ramnagar Chief Judicial Magistrate Court today along with all 5 co-accused in the case filed against them by Karnanataka CID. Nithyananda and all accused had filed various petitions in High Court and Supreme Court to quash the charges against them and to avoid his medical test & voice test. Supreme court however strongly criticised the long delay of 4 years in the case due to several petitions filed by Nithyananda & other accused. Final order of the Supreme Court is awaited. However, the Supreme court refused to stay the proceedings in the lower court, so Nithy and others are required to appear before the Magistrate in continuation of the Trial proceedings in the case. The Magistrate has directed all accused to appear before the court on 27th Aug, failing which Warrants will be issued against them. On 27th the committal proceedings will commence and the case will be committed to trial by the Sessions Court at Ramanagara. The court is also likely to set a date for trial proceedings to start at the Sessions court. If the accused fail to cooperate with the court, it can also be strong grounds to cancel the bail enjoyed by all 6 accused.


Sunday, August 24, 2014

Supreme Court reserves order on Nithyananda's plea against potency test

August 21, 2014, 21:02

New Delhi: The Supreme Court on Thursday reserved its order on self-styled godman Nithyananda's plea for not conducting potency test on him in a 2010 rape case. 

A bench headed by Ranjana Prakash Desai reserved its verdict on an appeal filed by Nithyananda challenging Karnataka High Court's order directing him to undergo potency test.

The bench had yesterday questioned controversial godman for his reluctance to undergo the test saying such examinations were necessary in view of growing number of rape cases. 

"These things are becoming necessary day-by-day in view of rise in rape cases. Can you say that potency test cannot be done? We are at least not party to such (proposition)," the bench had said. 

The apex court had on August 5 stayed the Karnataka High Court order directing Nithyananda to undergo the test.

The high court had on August 1 stayed the non-bailable arrest warrant issued by a Ramanagaram court against Nithyananda and four of his followers in connection with the case. 

PTI
http://zeenews.india.com/news/nation/sc-reserves-order-on-nithyananda-s-plea-against-potency-test_956263.html

Supreme Court reserves verdict in Nithyananda’s case

The Supreme Court on Thursday made it clear to Swami Nithyananda that he should undergo the medical test and face trial in the ‘rape case’ registered against him in a court in Bangalore.
A Bench of Justices Ms. Ranjana Desai and N.V. Ramana, reserved verdict on Nithyananda’s appeal challenging a Karnataka High Court order refusing to stay the trial court’s direction that he should take the test.
The Bench, after hearing senior counsel Mohan Parasaran and C.V. Nagesh appearing for Nithyananda, senior counsel M.N. Rao and counsel Aristotle for Karnataka expressed dissatisfaction over the manner in which the investigation and trial progressed in the case. Justice Desai told Mr. Rao that there was enough suspicion that the State investigating agency was fighting a ‘shadow box’ in merely filing a chargesheet without proper investigation and not appointing a proper public prosecutor to conduct the case.  
When Mr. Mohan Prasaran said the petitioner should not be compelled to undergo second medical test, the Bench observed that such medical examinations had become necessary in view of growing rape cases. Justice Desai said “If the police can’t take blood or hair sample, entire investigation can fall flat. In rape cases, all these tests are done. These tests are becoming necessary day after day in view of rising number of rape cases. In this situation can we say that potency tests should not be done?”
http://www.thehindu.com/news/national/supreme-court-reserves-verdict-in-nithyanandas-case/article6339082.ece?utm_source=RSS_Feed&utm_medium=RSS&utm_campaign=RSS_Syndication

Saturday, August 23, 2014

ஆண்மை சோதனை செய்ய ஏன் இப்படி பயந்து நடுங்குகிறீர்கள்?: நித்யானந்தாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

டெல்லி: ஆண்மை சோதனை செய்து கொள்ள நித்யானந்தா ஏன் பயப்படுகிறார் என்று கேட்ட உச்ச நீதிமன்றம் பலாத்கார வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஆண்மை சோதனை செய்வது அவசியமான ஒன்று என தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தா மீது அவரது சீடரான ஆர்த்தி ராவ் பாலியல் புகார் தெரிவித்தார். இதையடுத்து நித்யானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் நித்யானந்தா தான் ஒரு ஆண்மை இல்லாத ஆள் என்று போலீசாரிடம் தெரிவித்தார். அதை நம்ப மறுத்த போலீசார் அவருக்கு ஆண்மை சோதனை நடத்த அனுமதி கோரி ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நித்யானந்தா ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து நித்யானந்தா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகி கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கடந்த 5ம் தேதி தடை பெற்றார். இந்நிலையில் நித்யானந்தாவின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அவரை ஆண்மை சோதனை செய்ய வலியுறுத்தக் கூடாது என்று தெரிவித்தார். அவரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள் கூறுகையில், 2010ம் ஆண்டு நித்யானந்தா மீது தொடரப்பட்ட வழக்கில் போலீசார் அவருக்கு ஏன் இன்னும் ஆண்மை சோதனை செய்யவில்லை. பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு நிச்சயம் ஆண்மை சோதனை செய்ய வேண்டும். அதுவும் பலாத்கார வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சோதனை மிகவும் அவசியம். நித்யானந்தா எதற்காக இந்த சோதனையை செய்ய அச்சப்பட வேண்டும்? நீங்கள் சோதனை செய்ய தயங்குவதில் இருந்து ஏதாவது நினைக்கத் தோன்றும். 4 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Read more at: http://tamil.oneindia.in/news/india/potency-test-accused-necessary-rape-case-supreme-court-209147.html

குற்றம் இல்லை என்றால் நித்யானந்தா பயப்படுவது ஏன்? 
2014-08-20 22:51:41நித்தியானந்தா வேண்டுமென்றே தன் மீதான பாலியல் வழக்கை காலதாமதுபடுத்துவதாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பெங்களூரை சேர்ந்த ஆர்த்திராவ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த பாலியல் வழக்கில் தன்மீதான ஆண்மை பரிசோதனைக்கு தடை கோரி நித்தியானந்தா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது ஆஜரான நித்தியானந்தாவின் வழக்கறிஞர் இந்த பாலியல் புகார் 2004ம் ஆண்டு முதல் 2009 வரை நடந்ததாக கூறப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இது குறித்து கடந்த 2010ம் ஆண்டு தான் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், 2014ம் ஆண்டு தான் ஆண்மை பரிசோதனைக்கு உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் கர்நாடக உயர் நீதிமன்றம் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதனை மறுத்த கர்நாடக அரசின் வழக்கறிஞர், பரிசோதனைக்கு தயார் என்று நித்தியானந்தாவே எழுத்து மூலம் உறுதி அளித்துள்ளதாக கூறியுள்ளார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் நித்தியானந்தா புதிய மனுக்களை தாக்கல் செய்து வழக்கை இழுத்தடிப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், தன் மீது குற்றம் இல்லை என்றால் ஆண்மை பரிசோதனைக்கு நித்தியானந்தா தயங்குவது ஏன் என்றும் தானாகவே ஆஜராகி நிரபராதி என உறுதி செய்து வழக்கில் இருந்து அவர் விடுதலை ஆகலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
http://newtamils.com/fullview.php?id=4203

Friday, August 22, 2014

ஆண்மை பரிசோதனைக்கு எதிராக மேல்முறையீடு நித்யானந்தா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

வெள்ளி, ஆகஸ்ட் 22,2014, 
புதுடெல்லி
நித்யானந்தா ஆண்மை பரிசோதனைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் வாதங்கள் முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
நித்யானந்தா மேல்முறையீடு
நித்யானந்தாவுக்கு எதிராக அவருடைய முன்னாள் சீடரான ஆர்த்திராவ் அளித்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த பெங்களூர் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நித்யானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் மீது கடந்த 2 நாட்களாக நீதிபதிகள் ரஞ்ஜன் பிரகாஷ் தேசாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன.
நித்யானந்தா சார்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் வாதாடினார். நித்யானந்தாவை துன்புறுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இதுபோன்ற ஆண்மை பரிசோதனையை மேற்கொள்ள போலீஸ் தரப்பில் வற்புறுத்துகின்றனர். இந்த குற்றம் நடைபெற்றதாக கூறப்பட்டபோதே அதனை செய்திருக்க வேண்டும். இப்போது அதுபோன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள சட்டத்தில் இடமில்லை என்று கூறினார்.
ஒத்துழைக்க வேண்டும்
அதற்கு நீதிபதிகள், எப்படி இருந்தாலும் ஆண்மை பரிசோதனைக்கு அவர் ஒத்துழைப்பு அளிக்கத் தான் வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
நடிகை ரஞ்சிதா சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ரங்காச்சாரி, தன்னுடைய கட்சிக்காரர் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர். அவரை தேவையில்லாமல் தொடர்புபடுத்தி சிறுமைப்படுத்த முயற்சிக்கின்றனர். எனவே அவரையும் இந்த வழக்கின் விசாரணையில் சேர்த்துக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்று வாதாடினார். இந்த வேண்டுகோளை நீதிபதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இழுத்தடிக்க முயற்சி
கர்நாடக அரசு சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் எம்.என்.ராவ், நித்யானந்தா தரப்பு புதிது புதிதாக மனுக்கள் தாக்கல் செய்து வழக்கை இழுத்தடிக்க முயற்சிக்கிறது. ஆண்மை பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரும் நித்யானந்தாவின் கோரிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார்.
இதற்கு நீதிபதிகள், கர்நாடக அரசும் இந்த வழக்கை ஏன் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது என்ற கேள்வியை எழுப்பினர். ஆவணங்களும் சரியான வகையில் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்கில் 2–வதாக குற்றம்சாட்டப்பட்டவர் மீது உள்ள குற்றச்சாட்டு என்ன என்றும் நீதிபதி கேட்டார்.
தீர்ப்பு ஒத்திவைப்பு
குற்றப்பத்திரிகை கன்னடத்தில் உள்ளது என்றும் அதன் மொழிபெயர்ப்பு உடனடியாகக் கிடைக்கவில்லை என்றும் வழக்கறிஞர் எம்.என்.ராவ் கூறினார். இதற்கு ஒரு குற்றப்பத்திரிகையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஏன் தாக்கல் செய்யவில்லை என்று உரிய அதிகாரிகளிடம் கேளுங்கள் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.
வழக்கை இழுத்தடிக்க நித்யானந்தா ஏன் முயற்சிக்க வேண்டும் என்றும், தன் மீது தவறு இல்லை என்றால் ஆண்மை பரிசோதனைக்கு உட்பட அவர் மறுப்பது ஏன்? என்றும் நீதிபதிகள் கேட்டனர். வாதங்கள் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
ரஞ்சிதா ஆஜர்
நடிகை ரஞ்சிதா காவி உடையணிந்து நித்யானந்தா படம் போட்ட டாலர் கொண்ட ருத்ராட்ச மாலையை அணிந்து கோர்ட்டுக்கு வந்திருந்தார். உடன் அவருடைய சகோதரியும் வந்திருந்தார். ஆர்த்தி ராவ், நித்யானந்தாவின் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட லெனின் கருப்பன் ஆகியோரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.
http://www.dailythanthi.com/News/India/2014/08/22014227/The-Supreme-Court-appeal-against-the-test-of-masculinity.vpf

நித்யானந்தாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

August 22, 2014 09:46 ISTUpdated: August 22, 2014 09:46 IST


நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
நித்யானந்தா மீதான பாலியல் பலாத்கார வழக்கு கர்நாடக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த விசாரணை நீதிமன்றம் உத்தர விட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, நித்யானந்தா தரப்பில் ஆண்மை பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக் கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சனா தேசாய், என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் விசாரணைக்கு வந்தது. கர்நாடகா சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் குற்றப்பத்திரிகை குறித்த விவரங்களை நீதிபதிகள் கேட்டனர். அவர் குற்றப்பத்திரிகை விவரங் களை சரியாக தெரிவிக்காததால், கோபமான நீதிபதிகள், “வழக்கின் குற்றச்சாட்டு என்ன என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் இருப்பதா?” என்று அதிருப்தியை வெளியிட்டனர்.
பின்னர் கர்நாடக அரசு வழக்கறிஞர் தேடி எடுத்து நித்யானந்தா உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு விவரங் களை தெரிவித்தார்.
நித்யானந்தா சார்பில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் ஆஜராகி, மருத்துவ பரிசோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்தார். அதை நீதிபதி கள் ஏற்க மறுத்தனர்.
இந்த வழக்கின் விசாரணையின் போது நடிகை ரஞ்சிதா காவி உடையில் ஆஜராகி இருந்தார். புகார்தாரர் தரப்பில் ஆர்த்திராவ் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.
நீதிபதிகள் கூறியிருப்பதாவது: ‘இந்த வழக்கில் விசாரணையே நடக்காமல் இழுத்தடிக்கப்படு வதால் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம்.
இந்த வழக்கை இனியும் தாம தப்படுத்தக் கூடாது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும். அப்போது அவர்கள் மீது குற்றம் இல்லை என்பது நிரூபணமானால், வழக்கில் இருந்து விடுதலை பெற முடியும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
http://tamil.thehindu.com

Wednesday, August 20, 2014

Supreme Court Questions Swami Nithyananda; Why Do You Fear for Medical Tests?


SC Slams Nithyananda for Refusing to Undergo Potency Test NEW DELHI:The Supreme Court on Wednesday questioned self-styled godman Nithyananda's reluctance to undergo potency test in a 2010 rape case and the "delay" by the police in conducting it, saying such examinations were necessary in view of growing number of rape cases. "These things are becoming necessary day-by-day in view of rise in rape cases. Can you say that potency test cannot be done? We are at least not party to such (proposition)," a bench headed by Justice Ranjana Prakash Desai said when the controversial godman pleaded that he should not be forced to undergo the test. The bench said that there is no reason why an accused in a rape case should not be subjected to potency test and also questioned the police for delay in conducting the test in the 2010 case. "Nobody (accused) should avoid these tests. Why are you so scared of it? Inferences might be drawn from your reluctance to undergo the test," it said. The bench said that delay in such test is in favour of accused and the accused can be discharge from the case if the report comes negative. It also expressed anguish over the case lingering on for the past four years when the matter was mentioned before it and warned that it cannot allow this to continue and that the investigation has to be completed. The apex court had on August 5 stayed the Karnataka High Court order directing Nithyananda to undergo the test. The high court had on August 1 stayed the non-bailable arrest warrant issued by a Ramanagaram court against Nithyananda and four of his followers in connection with the case. http://www.newindianexpress.com/nation/SC-Slams-Nithyananda-for-Refusing-to-Undergo-Potency-Test/2014/08/20/article2389345.ece

Potency test of accused necessary in rape case: SC

New Delhi, Aug 20 (PTI)The Supreme Court today questioned self-styled godman Nithyananda's reluctance to undergo potency test in a 2010 rape case and the "delay" by the police in conducting it, saying such examinations were necessary in view of growing number of rape cases.

"These things are becoming necessary day-by-day in view of rise in rape cases.

http://www.ptinews.com/news/5053209_Potency-test-of-accused-necessary-in-rape-case--SC.html

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Potency test of accused necessary in rape case: SC


The Supreme today questioned self-styled godman Nithyananda's reluctance to undergo potency test in a 2010 rape case and the "delay" by the police in conducting it, saying such examinations were necessary in view of growing number of rape cases. 

"These things are becoming necessary day-by-day in view of rise in rape cases. Can you say that potency test cannot be done? We are at least not party to such (proposition)," a bench headed by Justice Ranjana Prakash Desai said when the controversial godman pleaded that he should not be forced to undergo the test. 

The bench said that there is no reason why an accused in a rape case should not be subjected to potency test and also questioned the police for delay in conducting the test in the 2010 case. 

"Nobody (accused) should avoid these tests. Why are you so scared of it? Inferences might be drawn from your reluctance to undergo the test," it said. 

The bench said that delay in such test is in favour of accused and the accused can be discharge from the case if the report comes negative. 

It also expressed anguish over the case lingering on for the past four years when the matter was mentioned before it and warned that it cannot allow this to continue and that the investigation has to be completed. 

The apex court had on August 5 stayed the Karnataka High Court order directing Nithyananda to undergo the test. 

The high court had on August 1 stayed the non-bailable arrest warrant issued by a Ramanagaram court against Nithyananda and four of his followers in connection with the case.

http://www.business-standard.com/article/pti-stories/potency-test-of-accused-necessary-in-rape-case-sc-114082001164_1.html
-------------------------------------------------------------------------------------------------------------------------------
స్వామి నిత్యానందకు సుప్రీంకోర్టులో ఎదురుదెబ్బ!
PTI | Updated: August 20, 2014 19:49 (IST)

స్వామి నిత్యానందకు సుప్రీంకోర్టులో ఎదురుదెబ్బ!
న్యూఢిల్లీ: 2010 సంవత్సరంలో నమోదైన రేప్ కేసులో స్వామి నిత్యానందకు సుప్రీంకోర్టులో ఎదురు దెబ్బ తగిలింది. రేప్ కేసులు పెరుగుతున్న దృష్ట్యా ఆరోపణలు ఎదుర్కొంటున్న వ్యక్తులకు లింగ సామర్ధ్య నిర్దారణ పరీక్షలు తప్పనిసరి అంటూ సుప్రీం కోర్టు ఆదేశించింది. తనపై నమోదైన రేప్ కేస్ లో లింగ సామర్ధ్య నిర్దారణ పరీక్షలకు నిత్యానంద అంగీకరించకపోవడంపై సుప్రీంకోర్టు తీవ్రంగా మందలించింది. 
 
ప్రస్తుత కాలంలో రేప్ కేసులు ఎక్కువ మోతాదులో నమోదవుతున్న కారణంగా ఇలాంటి పరీక్షలు తప్పనిసరి అంటూ సుప్రీంకోర్టు వ్యాఖ్యలు చేసింది. లింగ సామర్ధ్య పరీక్షలు నిర్వహించకూడదా అంటూ నిత్యానందను సుప్రీం కోర్టు న్యాయమూర్తి జస్టిస్ రంజనా ప్రకాశ్ దేశాయ్ ప్రశ్నించారు. బలవంతంగా పరీక్షలు జరిపితే తాను అంగీకరించనని నిత్యానంద కోర్టును వేడుకున్నారు. ఈ కేసులో పరీక్షలు జరపడానికి ఆలస్యం ఎందుకు చేస్తున్నారని పోలీసులకు కోర్టు చురకలంటించింది. 


நிரபராதி என்றால் ஆண்மை பரிசோதனைக்கு தயங்குவது ஏன்? வழக்கை இழுத்தடிப்பதாக நித்தியானந்தாவுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம்

புதுடெல்லி: வழக்கை வேண்டுமென்றே காலதாமதுபடுத்துவதாக நித்தியானந்தாவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெங்களுரூவை சேர்ந்த ஆர்த்திராவ் என்பவர் தொடர்ந்த பாலியல் வழக்கில் ஆண்மை பரிசோதனைக்கு தடைக்கோரி நித்தியானந்தா தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சனா பிரதாப் சேதசாய் மற்றும் ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்தியானந்தா  சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மோகன் பராஸ்வரன் பாலியல் புகார் 2004-ம் ஆண்டு முதல் 2009 வரை நடந்ததாக கூறப்பட்டுள்ளதாக கூறினார். 

இது குறித்து 2010-ம் ஆண்டு தான் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் 2014-ம் ஆண்டு தான் ஆண்மை பரிசோதனைக்கு உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது என்றார். இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று அவர் தெரிவித்தார். கர்நாடக உயர் நீதிமன்றம் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் பராஸ்வரன் கூறினார். 

ஆனால் இதனை மறுத்த கர்நாடக அரசின் வழக்கறிஞர் எம்.என்.ராவ் நித்தியானந்தாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் போதிய அவகாசம் கொடுத்த நிலையில் பரிசோதனைக்கு தயார் என்று நித்தியானந்தாவே எழுத்து மூலம் உறுதி அளித்துள்ளதாக கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் நித்தியானந்தா புதிய மனுக்களை தாக்கல் செய்து வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் செயல்படுவதாக கண்டனம் தெரிவித்தனர். 

சரியான நேரத்தில் அரசு வழக்கறிஞரை நியமனம் செய்யாத கர்நாடக அரசுக்கும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். தம் மீது குற்றம் இல்லை எனறால் ஆண்மை பரிசோதனைக்கு நித்தியானந்தா தயங்குவது ஏன் என்று வினவிய நீதிபதிகள் தானகவே முன்வந்து ஆஜராகி நிரபராதி என உறுதி செய்து வழக்கில் இருந்து விடுதலை ஆகலாம் என்றும் கூறினர்.  


http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=105967

Tuesday, August 19, 2014

இளைய ஆதின நியமன வழக்கு – நித்தியனந்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது மதுரை உயர்நீதிமன்றம்! Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/nithyanatha-s-petition-dismissed-madurai-hc-209038.html

மதுரை: மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக நித்தியானந்தாவை நியமித்ததற்கு மதுரை கோர்ட் விதித்த தடையை நீக்கக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்து விட்டது. மதுரை ஆதீன மடத்தின் 292-வது மடாதிபதியாக அருணகிரிநாதர் தற்போது பதவி வகித்து வருகிறார். அந்த மடத்தின் 293-வது மடாதிபதியாக அதாவது இளைய மடாதிபதியாக நித்தியானந்தாவை கடந்த 22.4.2012 அன்று அருணகிரிநாதர் நியமனம் செய்தார். இது பெரும் சர்ச்சைகளையும், எதிர்ப்புகளையும் கிளப்பியது. மதுரை ஆதீன மடத்திற்கு நித்தியானந்தா வந்தபோது பெரும் போராட்டங்களும் நடந்தன. இந்த நிலையில், ஆதீன மடத்தின் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை ஆணையர் மதுரை மாவட்ட முதன்மை சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும், ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடை விதிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, அருணகிரிநாதர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மதுரை ஆதீன மடத்தின் 293-வது மடாதிபதியாக நித்தியானந்தாவை நியமனம் செய்தது ரத்து செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து, இந்து அறநிலையத்துறை தாக்கல் செய்துள்ள முக்கிய வழக்கு முடிவடையும் வரை மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடை விதித்து 26.2.2013 அன்று சப்-கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நித்தியானந்தா, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அப்பீல் செய்தார். அதில், இந்து அறநிலையத்துறை தாக்கல் செய்த மனுவில் என்னை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை. எனது தரப்பு விளக்கத்தை கீழ்கோர்ட் கேட்கவில்லை. எனவே, கீழ்கோர்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அருணகிரிநாதர் தரப்பில் வக்கீல்கள் நாகேந்திரன், ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார். இறுதியில் நித்தியானந்தாவின் அப்பீல் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதுகுறித்து அவர் பிறப்பித்த உத்தரவில், மதுரை ஆதீன மடத்தின் ஆவணங்களை பார்க்கும் போது, ஒரு மடாதிபதி உயிருடன் இருக்கும்போது இன்னொருவரை மடாதிபதியாக நியமிக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதேபோன்று மடாதிபதியாக நியமிக்கப்படுபவர் என்னென்ன தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்பதும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை நித்தியானந்தா பூர்த்தி செய்யவில்லை. நித்தியானந்தாவை இளைய மடாதிபதியாக நியமித்து பிறப்பித்த உத்தரவை அருணகிரிநாதர் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதுதொடர்பான வழக்கு தனியாக உள்ளது. எனவே, கீழ்கோர்ட் பிறப்பித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை. கீழ்கோர்ட் பிறப்பித்த உத்தரவு சரியானது தான் என்று நீதிபதி கூறி விட்டார்.

http://tamil.oneindia.in/news/tamilnadu/nithyanatha-s-petition-dismissed-madurai-hc-209038.html
http://m.vikatan.com/tiny/index.php?module=news&aid=31532
http://www.tutyonline.net/view/32_73679/20140820084025.html
http://www.dailythanthi.com/News/State/2014/08/20083731/nithyanda-pettion-dismissed-in-madurai-court.vpf
மதுரை: மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக தன்னை குறிப்பிட்டு நித்யானந்தா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை ஆதீன மடத்திற்குள் நான் நுழையக்கூடாது எனவும், மடத்தின் பணிகளில் ஈடுபடக்கூடாது எனவும் இந்து அறநிலையத்துறை ஆணையர் மதுரை முதன்மை சப்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சப்கோர்ட் கடந்த 26.2.2013ல் நான் மடத்துக்குள் சென்று, பணிகளில் ஈடுபட இடைக்காலத் தடை விதித்தது. சப்கோர்ட் டில் நடக்கும் வழக்கில் நான், எந்த வகையிலும் சம்பந்தப்பட்டவன் அல்ல. தற்போதைய ஆதீனம் என் பதவியை ரத்து செய்தது தொடர்பாக தனி வழக்கு நிலுவையில் உள்ளது. இதை சப்கோர்ட் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. என் தரப்பு விளக்கத்தை கேட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. 293வது ஆதீனமாக நான் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் எனவும், மடத்தின் மரபுகளுக்கு எதிரானது எனவும் கீழ்கோர்ட் முடிவுக்கு வந்துள்ளது. எனவே சப்கோர்ட் டின் இடைக்காலத் தடையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை நேற்று விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, ‘‘கீழ்கோர்ட்டின் உத்தரவு சட்ட விரோதமானது அல்ல. அதில் குறைபாடு காணமுடியாது. இதற்கான காரணங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அந்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை. ஆவணங்களின் படி ஒரு மடாதிபதி உயிருடன் இருக்கும்போது, இன்னொருவரை மடாதிபதியாக நியமிக்க முடியாது. மேலும் மடாதிபதிகளின் தகுதிகள் குறித்தும், யார் யாரெல்லாம் மடாதிபதியாக முடியும் என்பது குறித்தும், மடத் தின் ஆவணங்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நித்யானந்தா இதில் எந்த தகுதியையும், நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யவில்லை. தற்போதுள்ள ஆதீனம், மனுதாரரது நியமனத்தை ரத்து செய்துள்ளதாக கூறியுள் ளார். நிர்வாகத்தின் தரப்பி லும் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,’’ என உத்தரவிட்டார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=105839

HC dismisses Nithyananda's plea against sub court order

The Madras High bench here today dismissed controversial self-styled godman Nithyanandha Swamy's plea against a sub-court's order barring him from entering Madurai Adheenam Mutt and performing services there. 

Dismissing his plea, Justice V M Velumani said there was no provision as per Mutt record and custom to appoint the 293rd Atheenam even as the 292nd Atheenam was functioning as the Mutt head. 

The judge pointed out that Nithyanandha's appointment as 293rd pontiff had been cancelled by the incumbent Adheenam. This was done as there was a hue and cry from various sections of devotees and Mutt disciples, the judge said. 

There were also qualifications, conditions and eligibility criteria for being appointed as head of Madurai Adheenam and Nithyanandha did not meet those conditions, he said. 

Nithyanandha, appointed to the post on April 22 2012, submitted that a seperate case against his termination was pending in the district court. The trial court should have waited till a finding was given on the issue by this court and not stayed his functioning in the Mutt. 

He denied charges of the Commissioner of Hindu Religious and Charitable Endowments (HR&CE) of trying to take over the properties and said they had been levelled though he was not a party before the trial court which stayed his functioning as 293rd pontiff and doing service in the Mutt. 

Nithyananda's controversial appointment had led to strong protests from mutt disciples who opposed him on the ground that he was unfit as he faced serious criminal charges, including sex scandal, and filed petitions in courts. 

The self-styled godman had first courted controversy after TV channels telecast visuals purportedly showing him in a compromising positition with a Tamil actress, leading to his arrest in 2010. He was subsequently released on bail.

http://www.business-standard.com/article/pti-stories/hc-dismisses-nithyananda-s-plea-against-sub-court-order-114081901468_1.html
http://www.deccanherald.com/content/426440/hc-dismisses-nithyanandas-plea-against.html



Monday, August 18, 2014

Nithyananda Attended To CJM Court In Ramanagar, Court Order's For Gender Test - TV9


ರಾಮನಗರ ಕೋರ್ಟ್‌ಗೆ ಬಂದ ನಿತ್ಯಾನಂದ ಸ್ವಾಮಿ

ರಾಮನಗರ, ಆ.18 : ನಿತ್ಯಾನಂದ ಸ್ವಾಮಿ ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆ ಅರ್ಜಿ ವಿಚಾರಣೆಯನ್ನು ರಾಮನಗರದ ಸಿಜೆಎಂ ನ್ಯಾಯಾಲಯ ಆ.23ಕ್ಕೆ ಮುಂದೂಡಿದೆ. ಬಿಗಿ ಪೊಲೀಸ್ ಬಂದೋಬಸ್ತ್ ನಡುವೆ ಸೋಮವಾರ ನಿತ್ಯಾನಂದ ಸ್ವಾಮಿ ನ್ಯಾಯಾಲಯಕ್ಕೆ ಹಾಜರಾಗಿದ್ದರು. ಸುಪ್ರೀಂಕೋರ್ಟ್ ಆಗಸ್ಟ್ 18ರಂದು ರಾಮನಗರ ನ್ಯಾಯಾಲಯದಲ್ಲಿ ನಡೆಯುವ ವಿಚಾರಣೆಗೆ ನಿತ್ಯಾನಂದ ಹಾಜರಾಗಬೇಕು ಎಂದು ಆದೇಶ ನೀಡಿತ್ತು. ಈ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ ನಿತ್ಯಾನಂದ ಸ್ವಾಮಿ ಜಿಲ್ಲಾ ಮತ್ತು ಸತ್ರ ನ್ಯಾಯಾಲಯಕ್ಕೆ ವಿಚಾರಣೆಗೆ ಆಗಮಿಸಿದ್ದರು. ಸೋಮವಾರ ಐವರು ಶಿಷ್ಯರೊಡನೆ ನಿತ್ಯಾನಂದ ಸ್ವಾಮಿ ರಾಮನಗರ ನ್ಯಾಯಾಲಯಕ್ಕೆ ಹಾಜರಾಗಿದ್ದರು. ಈ ವೇಳೆ ಅರ್ಜಿಯ ವಿಚಾರಣೆಯನ್ನು ಕೋರ್ಟ್ ಆ.23ಕ್ಕೆ ಮುಂದೂಡಿತು. ರಾಸಲೀಲೆ ಹಾಗೂ ಲೈಂಗಿಕ ಕಿರುಕುಳದ ಆರೋಪ ಎದುರಿಸುತ್ತಿರುವ ನಿತ್ಯಾನಂದ ಸ್ವಾಮಿಗೆ ನಡೆಸಬೇಕಿದ್ದ ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆಯನ್ನು ಸುಪ್ರೀಂಕೋರ್ಟ್ ಮುಂದೂಡಿತ್ತು. [ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆ ನಡೆಯುವುದೇ ಅನುಮಾನ?] ಆಗಸ್ಟ್ 6ರಂದು ನಿತ್ಯಾನಂದ ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆಗೆ ಹಾಜರಾಗಬೇಕು ಎಂದು ಹೈಕೋರ್ಟ್ ಆದೇಶಿಸಿತ್ತು. ಇದನ್ನು ಪ್ರಶ್ನಿಸಿ ನಿತ್ಯಾನಂದ ಪರ ವಕೀಲರು ಸುಪ್ರೀಂಕೋರ್ಟ್ ಮೆಟ್ಟಿಲೇರಿದ್ದರು. ಅರ್ಜಿಯ ವಿಚಾರಣೆ ನಡೆಸಿದ್ದ ಕೋರ್ಟ್ ಆ.18ರಂದು ನಿತ್ಯಾನಂದ ಸ್ವಾಮಿ ಖುದ್ದು ರಾಮನಗರ ನ್ಯಾಯಾಲಯಕ್ಕೆ ಹಾಜರಾಗುವಂತೆ ಆದೇಶ ನೀಡಿತ್ತು. ನಿತ್ಯಾನಂದನ ವಿರುದ್ಧ ಸಿಐಡಿ ತನಿಖೆ ಹಾಗೂ ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆ ನಡೆಸುವಂತೆ ರಾಮನಗರದ ಸಿಜೆಎಂ ಕೋರ್ಟ್ ಇತ್ತೀಚೆಗೆ ಆದೇಶಿಸಿತ್ತು. ಆದರೆ ರಾಮನಗರ ಕೋರ್ಟ್ ಆದೇಶವನ್ನು ಪ್ರಶ್ನಿಸಿ ನಿತ್ಯಾನಂದ ಮತ್ತು ಇತರೆ ನಾಲ್ವರು ಭಕ್ತರು ಹೈಕೋರ್ಟ್ ಮೆಟ್ಟಿಲೇರಿದ್ದರು. [ನಿತ್ಯಾನಂದ ವಿರುದ್ಧದ ಜಾಮೀನು ರಹಿತ ವಾರೆಂಟ್ ರದ್ದು]

English summary The Ramanagar court on Monday adjourned the hearing of Swami Nithyananda potency test case to August 23. Swami Nithyananda present in court on Aug 18, Monday as per Supreme Court order.


Read more at: http://kannada.oneindia.in/news/karnataka/swami-nithyananda-potency-test-case-hearing-on-august-23-087019.html