Even if you are a minority of one, the truth is the truth. Those were the golden words of Mahatma Gandhi! TRUTH is what this blog is about... truth about Nithyananda and his cult. Don't fall prey to his charming lies... before you learn more about his real intent from the ex-members of his cult.
SATYAMEVA JAYATE (Let truth alone triumph!)
Breaking News
BREAKING NEWS
Nithyananda rape case trial next date: 6 Sept. 2018
Updates from Courts
UPDATES FROM COURTS
Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)
NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012
17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!
14 Retaliatory/falseComplaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)
3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,
4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:
Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned
NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT
Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"
LENINKARUPPAN(DHARMANANDA) RE- ACCUSED NITHYANANDA IN BANGALORE PUBLIC TV PART-8
LENINKARUPPAN(DHARMANANDA) RE- ACCUSED NITHYANANDA IN BANGALORE PUBLIC TV PART-9
LENIN KARUPPAN(DHARMANANDA) RE- ACCUSED NITHYANANDA IN BANGALORE PUBLIC TV PART-5
LENINKARUPPAN(DHARMANANDA) RE- ACCUSED NITHYANANDA IN BANGALORE PUBLIC TV PART-6
பெங்களூரு : நித்யானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த, கர்நாடகா
உயர்நீதிமன்றம், ஒரு வாரம் தடை விதித்து உத்தரவிட்டது. பாலியல்
குற்றச்சாட்டுக்குள்ளான நித்யானந்தாவுக்கு, மருத்துவ பரிசோதனை செய்ய
வேண்டும், என்று சி.ஐ.டி., போலீஸார், ராம்நகர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜூலை 30ல், பெங்களூரு விக்டோரியா
மருத்துவமனையில், நித்யானந்தாவிற்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.
ஆனால், அன்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல், நித்யானந்தா புனித யாத்திரை
சென்றுவிட்டார். ராம்நகர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய, கர்நாடக
உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த கர்நாடகா
உயர்நீதிமன்றம், மருத்துவ பரிசோதனைக்கு தடை விதித்தது. இந்த தடை நேற்றுடன்
முடிவுற்ற நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி
சுபாஷ் ஆதி, நித்யானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய, செப்டம்பர், 7ம்
தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டார்.
TRICHY: A man has complained to the Trichy police that a few disciples
of controversial godman Nithyananda are trying to usurp his Rs 1
crore-worth property on the periphery of Trichy. In his written
complaint to the deputy superintendent of police, the complainant, R
Selvamani, from Navalur Kuttapattu near Trichy said he and his family
members had jointly given power of attorney to one Danushkodi to sell
one acre of his land. Selvamani's family possessed 3.36 acres at a
stretch. Selvamani claimed the piece of land was instead transferred to
godman Nithyananda through a settlement deed without their knowledge.
According to Selvamani, the fact that the land had been clandestinely
transferred to the godman by the man to whom he entrusted power of
attorney (POA) to sell the land, came to light only when his son
Jageeshwaran preferred a litigation to claim his portion of the
family-owned land. The matter became further complicated when the man to
whom the POA had been entrusted passed away recently. Jageeshwaran also
mentioned in his petition to the court that the settlement deed
executed in favor of Nithyananda was illegal and unauthorized.
IBN Tamil Nadu| Posted on Aug 28, 2012 at 01:07pm IST Chennai: Controversial godman
Nithyananda does not have any legal entitlement to function as the head
of Madurai Adheenam for the present, the HR&CE has said in its reply
to a query from advocate R Krishnamurthy. Nithyananda could do so only
if the office of the trustee of the Adheenam fell vacant, the reply
added.
On April 27 this year, Arunagirinathar, chief of the Adheenam,
had announced that ‘‘Nithyananda would be competent to function as my
lawful successor to deal with all movable and immovable properties of
the Adheenam and as successor, he would have absolute right over the
properties and function as was being discharged by us.’’
By a letter dated May 17 this year, advocate Krishnamurthy had
urged HR&CE to take over the Madurai Adheenam and take legal steps
under Section 63 of the Court of Wards Act.In his reply dated August 22
last, the Additional Commissioner (General) of the HR&CE informed
the advocte that there was no provision in the HR&CE Act, except
Section 59 for removal of trusee of a math.
Under Sec 60 of the Act, arrangements could be made by the Assistant
Commissioner whenever vacancies occurred in the office of the trustee
and there was dispute regarding the right of succession to such office,
or when such vacancies could not be filled up immediately. Sec 63 of the
TN Court of Wards Act said that it was the court to decide on the
issue.
சிவகங்கை: ஏலச்சீட்டு நடத்தி வந்த பெண் கொலை தொடர்பாக நித்யானந்தா சீடரை
போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை அருகே ஏரியூரை சேர்ந்தவர்
கலைச்செல்வன். இவரது மனைவி ஜெகதீஸ்வரி(40). இவர் மதகுபட்டி சுற்றுவட்டார
பகுதியில் ஏலச்சீட்டு மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து
வந்தார். கடந்த 14ம் தேதி மதகுபட்டி அருகே ஜெகதீஸ்வரியும், நாமனூரை சேர்ந்த
சுரேந்திரன் மனைவி முத்துமணியும்(25) ஏலச்சீட்டு பணத்தை வசூல்
செய்துவிட்டு ஒரு டூவீலரில் வீடு திரும்பினர்.
அலவாக்கோட்டை
அருகே மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது, இவர்களை பின் தொடர்ந்து
மூன்று டூவீலர்களில் வந்த 4 பேர் இருவரையும் வழிமறித்து கத்தியால்
சரமாரியாக குத்தினர். இதில் ஜெகதீஸ்வரி அதே இடத்திலேயே பலியானார். வசூல்
பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கும்பல் தப்பியது. இருவரும் கழுத்தில்
அணிந்திருந்த நகை கொள்ளை போகவில்லை. படுகாயமடைந்த முத்துமணி மதுரையில் உள்ள
ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலையாளிகளை
பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இதுகுறித்து தனிப்படை போலீசார்
கூறியதாவது: துபாயில் பணியாற்றும் கலைச்செல்வன் கடந்த 20 ஆண்டுகளாக
மனைவிக்கு லட்சக்கணக்கில் பணம் அனுப்பியுள்ளார். இந்த பணத்தை கொண்டு
ஜெகதீஸ்வரி வட்டிக்கு பணம் கொடுப்பது, ஏலச்சீட்டு நடத்துவது போன்ற தொழில்
செய்து வந்தார். இந்நிலையில் இவருக்கும், மதுரையை சேர்ந்த பாண்டிச்செல்வம்
என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. பாண்டிச்செல்வம்
நித்யானந்தாவின் சீடர் ஆவார்.
இருவரும் அடிக்கடி பெங்களூரில் உள்ள
நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்று வந்தனர். இருவருக்கும் நெருக்கம்
அதிகமாகவே தொழில் செய்யப்போவதாக கூறி ஜெகதீஸ்வரியிடம் இருந்து 50 பவுன்
நகைகளை வாங்கி பாண்டிச்செல்வம் அடகு வைத்துள்ளார். துபாயிலிருந்து வீடு
திரும்பிய கலைச்செல்வன் மனைவியிடம் நகை, பணத்தை கேட்டதால் இருவருக்கும்
தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ளக்காதலன் பாண்டிச்செல்வத்திடம் நகையை
திரும்ப கேட்டுள்ளார். அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்ததால் பாண்டிச்செல்வம்
உள்பட 4 பேர் ஜெகதீஸ்வரியை கொலை செய்துள்ளனர். பாண்டிச்செல்வத்திற்கு
ஏற்கனவே மூன்று திருமணம் நடந்துள்ளது. இவ்வாறு தனிப்படை போலீசார்
தெரிவித்தனர். தலைமறைவாகியுள்ள பாண்டிச்செல்வத்தை போலீசார் தீவிரமாக தேடி
வருகின்றனர்.
http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=32021
Updated: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 28, 2012, 17:20 [IST]
சென்னை: நான்தான் மதுரை ஆதீன மடத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளேன்.
எனக்குப் பிறகுதான் நித்தியானந்தா தலைமைப் பொறுப்புக்கு வர முடியும்.
இப்போது நித்தியானந்தா ஒரு இளைய ஆதீனமாக அவரது வேலையைப் பார்த்துக்
கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார் மதுரை ஆதீனம்.
உடல் நலம்
பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்
மதுரை ஆதீனம். அவர் இன்று மாலைமலருக்கு அளித்த பேட்டியில்,
எனக்கு
சுவாச பிரச்சினை உள்ளதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு
செல்கிறேன். டாக்டர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெறுவேன்.
மதுரை
ஆதீனத்தின் சன்னிதானமாக அருணகிரி நாதர் சுவாமிகள் இருப்பதால் அந்த மடத்தின்
நிர்வாகத்தில் தலையிட முடியாது என்று இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர்
விளக்கம் அளித்துள்ளார். இது இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி நேர்மையான
முறையில் தக்க முடிவு என தெளிவுப்படுத்தி உள்ளது.
மதுரை ஆதீனத்தை
பொறுத்தவரை தமிழ்மொழி வளர்ச்சியையும், சைவ நெறிமுறைகளையும் தொடர்ந்து
கடைபிடித்து வருகிறோம். மதுரை ஆதீன மடத்தை தலைமை ஆதீனமாக நான் இருந்து வழி
நடத்தி வருகிறேன்.
எனது காலத்திற்கு பிறகுதான் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டவர் (நித்தியானந்தா) பட்டத்துக்கு வரமுடியும். இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தா அவருக்கு உரிய பணியை செய்து வருகிறார் என்றார் மதுரை ஆதீனம்.
http://tamil.oneindia.in/news/2012/08/28/tamilnadu-i-am-the-head-the-mutt-not-nithyanantha-says-aadheenam-160402.html
நித்திக்கு மருத்துவ பரிசோதனை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2012,00:19 IST பெங்களூரு : மருத்துவப் பரிசோதனைக்கு அவகாசம் கேட்ட நித்யானந்தாவின் மனு மீதான விசாரணையை, நாளை ஒத்தி வைத்து, கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பாலியல் குற்றசாட்டில் சிக்கிய நித்யானந்தாவை, மருத்துவப் பரிசோதனைக்கு ஆஜராகும் படி, சி.ஐ.டி., போலீசார், ஏழு முறை நோட்டீஸ் அனுப்பியும், ஆஜராகாமல் நித்யானந்தா டிமிக்கி கொடுத்து வந்தார். இதையடுத்து, சி.ஐ.டி., போலீசார், நித்யானந்தாவுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தால், வழக்கின் உண்மைத் தன்மை அறிய முடியும் என, ராம்நகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, விசாரித்த நீதிமன்றம், ஜூலை, 30ம் தேதி பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் நித்யானந்தா ஆஜராக வேண்டும். அன்றைய தினம் அவருக்கு ஆண்மை சோதனை, குரல் சோதனை செய்ய வேண்டும் என, உத்தரவிட்டது. ஆனால், நித்யானந்தா, பெங்களூரு வராமல் புனித யாத்திரை சென்றார். நித்யானந்தாவுக்குப் பரிசோதனை செய்ய, கால அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனு நீதிபதி ஜெகந்நாதன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய, நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள், இருநாள் கால அவகாசம் கேட்டனர். இதையடுத்து, வழக்கை ஆகஸ்ட் 24ம் தேதி (நாளை) தள்ளி வைத்து, அன்று அரசு தரப்பில், ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டார். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=534280&Print=1
"எனக்கு கொஞ்சம் டயம் கொடுங்கள்" என்று நித்யானந்தா, வைத்துள்ள கோரிக்கை, ஏற்கப்படுமா என்பது நாளை தெரியவரும். ஆண்மை பரிசோதனை மேற்கொள்வதற்கு கால அவகாசம் கோரும் நித்தியானந்தாவின் மனு நாளை கர்நாடகாவில் விசாரணைக்கு எடுக்கப்படுகிறது.
நங்கையருடன் லீலைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் சிக்கிய நித்தி சுவாமிகளை, ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகுமாறு கர்நாடக சி.ஐ.டி. பொலீஸ் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஒரு தடவைக்கு ஏழு தடவைகள் அனுப்பியும், நித்யானந்தா பாராமுகம் காட்டிவிட்டார். இதற்குமேல் பொலீஸால் என்ன செய்ய முடியும்? கடவுளைப் பற்றி கடவுளிடமே கம்பிளெயின்ட் கொடுக்க முடியாது என்பதால், கோவிலுக்கு போகாமல், ராம்நகர் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
நீதிமன்றமும், தம்மை ஒரு சக்திவாய்ந்த அமைப்பாக கருதி, நித்தியானந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஜூலை 30-ந் தேதியன்று பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் ஆண்மை சோதனை, குரல் சோதனை செய்வதற்காக நித்தியானந்தா வந்து சேர வேண்டும் என்பதே நோட்டீஸ். அந்த நோட்டீஸூக்கும் பெப்பே காட்டிவிட்டார் சுவாமிகள்.
ஆண்மை பரிசோதனை மேற்கொள்வதற்கு கால அவகாசம் தேவை என்று ஒரு மனுவை அனுப்பி வைத்துவிட்டு, ரஞ்சிதா அம்மையார் சகிதம் கைலாய யாத்திரை கிளம்பியிருந்தார் நித்தி. வடக்கே பாஸ்போர்ட் திருவிளையாடல்களை செய்து முடித்துவிட்டு, தமிழகம் திரும்பியுள்ளார் அவர். இதற்கிடையே கர்நாடகா நீதித்துறை சுவாமிகளை விடுவதாக இல்லை. நித்தியின் மனு மீது உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகந்நாதன் முன்னிலையில் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.
"சுவாமிகளின் ஆண்மை பரிசோதனைக்கு அவகாசம் கொடுக்க விரும்புகிறீர்களா?" என அரசுத் தரப்பை கேட்டார் நீதிபதி. இல்லை என்று பதில் வந்தது.
அதையடுத்து, அரசுத் தரப்பில் இருந்து ஆட்சேபனை மனு ஒன்றை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு அரசுத் தரப்பில் இருநாட்கள் அவகாசம் கோரப்பட்டது. நாளை வெள்ளிக்கிழமைக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நித்தி சுவாமிகளுக்கு ஆண்மை சோதனைக்கு கால அவகாசம் கிடைக்குமா, இல்லையா என்பது நாளை தெரிந்து விடலாம். அவகாசம் கொடுக்கப்படா விட்டால், சுவாமிகள் மலையேறிவிடுவார்!
Madurai, Aug21: Two disciples of self-styled godman
Nithyanandha, whose appointment as head of an ancient Saivite mutt here
triggered a controversy, have been shifted out, officials said today.
Madurai Adheenam (Mutt) officials said while one disciple
Swaroopanandha had been shifted to Chennai, Pandiselvam was shifted to
the mutt’s Anna Nagar branch here.
They said senior mutt pontiff
Sri Arunagirinathar Swamy had sought explanation from Nithyanandha
regarding various issues including printing of mutt letter pads having
pictures of Nithyanandha alone.
Nithyanandha was also accused of
not practising the age old traditions,customs and practices of the over
1500 year-old Mutt. Nithyananda’s disciples were also disrespecting the
senior pontiff, they said.
“There was a heated exchange between
Sri Arunagirinathar swamy and Nithyanandha today morning,and
Nithyanandha has left for Kodaikanal in a huff”, officials claimed.
The senior pontiff had reportedly said those who did not listen to him could not stay in the Mutt.
Cases against appointment of Nithyanandha as junior pontiff was pending in Madurai bench of Madras High Court.
Various fora had objected to Nithyananda’s appointment as the 293rd pontiff of the Mutt by Arunagirinathar.
The
self-styled godman is facing a CID probe into allegations of rape and
criminal intimidation levelled against him in 2010 after some TV
channels telecast purported video footage of him in a compromising
position with an actress.
Out on bail after his arrest in 2010,
he had courted fresh trouble on June 8 when police booked him and his
followers for allegedly assaulting a mediaperson during a press meet at
his ashram at nearby Bidadi.
The press conference was held in the
backdrop of a US-based woman alleging that he had sexually abused her
for five years.Nithyananda was granted bail on June 15, a day after his
re-arrest on charges of disturbing peace and lodged in Mysore Central
Prison.
ராகசுதா,
ரஞ்சிதா, யுவராணி, கௌசல்யா வரிசையில் அடுத்து வரப்போவது 'பரபரப்பு புகழ்'
நயன்தாராவாம்! நித்தியானந்தாவை பற்றிய சர்ச்சைகளை நிறையவே கேள்விப்பட்டவர்
தான் நயன்தாரா. ஆனாலும், தற்போது மன நிம்மதியின்றி தவிக்கும் நயன்தாராவை
எப்படியும் மடத்துக்கு கொண்டுவந்து விடலாம் என நினைக்கிறார்கள் நித்தியின்
அடிவருடிகள்.
வழக்குகள்,
பத்திரிக்கைகளின் தாக்குதல்கள், இந்து அமைப்புகளின் எதிர்ப்புகள் எல்லாமே
நித்தியானந்தாவுக்கு சிக்கலாக அமைந்தாலும், ஒருவிதத்தில் அவை அனைத்துமே
அவருக்கு செலவே இல்லாத பிரசித்தியை கொடுப்பதை யாரும் மறுக்க முடியாது.
கார்ப்பரேட் சாமியார்களுக்கு அவசியமானதே சர்ச்சைகளும் பிரபலங்களின்
வருகையும்தான். அரசியல் நிகழ்வுகளையே மாற்றும் சக்தி படைத்தவராக உலா வரும்
சந்திரா சாமி மீது கிளம்பாத சர்ச்சைகளா? நித்தியும் இத்தகைய சர்ச்சைகளை
விரும்பக் கூடியவர்தான். அதனால்தான், இத்தகைய இக்கட்டான சூழலிலும் நயன்தாரா
மீது நித்தியின் கண்கள் நிலைகுத்தி இருக்கின்றன.
பிரபுதேவா பிரிவுக்குப் பிறகு தற்போது தனிமையில் தவிக்கிறார் நயன்.
மறுபடியும் சிம்பு போன்றவர்களின் அழைப்புக்கு இரையாகிவிடக் கூடாது என்கிற
எச்சரிக்கை உணர்வும் அவருக்கு இருக்கிறது. இந்த
சந்தர்ப்பத்தைத்தான் நித்தியின் ஏஜெண்டுகள் சரியாகக் கணித்து நயன்தாராவை
நெருங்கி இருக்கிறார்கள். நித்தியின் ஹீலிங் தெரபி பற்றி இவர்கள் எடுத்துச்
சொல்ல, நயன்தாரா ஆர்வமாகக் கேட்டுக் கொண்டதாகத் தகவல்! அதனால், விரைவில்
நித்தி - நயன் சந்திப்பு நிகழும் என்கிறார்கள் நித்தியின் ஆதரவாளர்கள்.
அதற்குள் நித்தியின் லீலைகள் குறித்து யாராவது நயனுக்கு எடுத்துச் சொன்னால்
நன்றாக இருக்கும். இல்லையேல் எண்ணெய்க்குப் பயந்து நெருப்பி குதித்த
கதையாகிவிடும்!
2012-08-17 18:07:07
கயிலாயத்துக்கு சுற்றுப் பயணம் சென்ற
நித்தியானந்தா விதவிதமான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டார். கயிலாய
சுற்றுப்பயணம் முடிந்து 16ஆந் திகதி நள்ளிரவு தனது சீடர்களோடு திருவண்ணாமலை
வந்தடைந்தார்.
அவரது ஆச்சிரமத்தில் தங்கியவர் இன்று காலை 6.30க்கு
அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
சிவாச்சாரியர்களுக்கு 1000 ரூபா, 500 ரூபா நோட்டுக்களை தட்சனைத் தட்டில்
போட்டவர் கோயிலை வலம் வந்தார். பின் தன் ஆச்சிரமம் திரும்பினார்.
உடனடியாக மதுரைக்கு புறப்பட்டார். உடனே அவ்வாறு புறப்படக்காரணமென்ன என
அவரது சீடர்களிடம் கேட்டபோது, ''மதுரை பெரிய ஆதீனம் பிரச்சனை செய்வதாகத்
தெரிவித்துள்ளனர். அதனால தான் உடனடியா மதுரை போறாரு. இதனால இங்க ஏற்பாடு
செய்திருந்த பல புரோகிராம்கள் ரத்து செய்துட்டாரு "என்றனர்.
மதுரை போன பின் இன்னும் என்னன்ன செய்யப் போகிறார்களோ தெரியவில்லை.
''கயிலாயம்
புறப்படுவதற்கு முன் தமிழகம் திரும்பியபின் கர்நாடகா காவல்துறைக்கு
ஒத்தொழைத்து பரிசோதனைகளை செய்துகொள்வேன்" என்றார். அது செய்வாரா இல்லை
இழுத்தடிக்க ஏதாவது செய்வாரா என்பது இனித் தெரிந்துவிடும்.
Updated: வியாழக்கிழமை, ஆகஸ்ட் 16, 2012, 10:34 [IST]
மதுரை: கர்நாடக கோடிமட ஆதீனம் ரிஷிகுமார் சுவாமிகளை மதுரைக்கு
வரச்சொன்னதும் நான்தான், ஆனால் நித்தியானந்தாவின் http://www.blogger.com/blogger.g?blogID=8548474726098828340#editor/target=post;postID=1648793449844655378அடியாட்களை நினைத்துப்
பார்த்தபோது உள்ளே வர அவர்களை அனுமதிக்காமல் விட்டதும் நான் தான் என்று
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். கர்நாடக சாமியார் ரிஷிகுமார் இன்று முற்றுகை போராட்டம் நடத்தியது தொடர்பாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியதாவது:
கர்நாடகத்தின்
கோடிமட ஆதீனத்தை வரச்சொன்னது நான்தான். ஆனால் மதுரை ஆதீனம் மடத்தி
நித்தியானந்தாவின் அடியாட்கள் இருப்பதால் தகராறு வந்துவிடுமோ எனக் கருதி
அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அவர்கள்தான் நித்தியானந்தாவின் பிடதி
ஆசிரமத்தில் மோதலில் ஈடுபட்டதாக கேள்வியும்பட்டேன். அதனால்தான்
உள்ளேவிடவில்லை என்றார்
மதுரை இளைய மடாதிபதி பொறுப்பில் இருந்து நித்தியானந்தாவை நீக்கிவிடுவார்களா? என்ற கேள்விக்கு பெரியவரிடம் இருந்து நோ பதில்!
English summary
The Madurai Aadheenam Arunagirinadhar expalins why he not allow Karnataka Kamakodi Aadheenam to Madurai Mutt.