tag:blogger.com,1999:blog-8548474726098828340.post2994955427553396821..comments2023-09-16T13:23:30.623+05:30Comments on Standup For Dharma: SC refuses to stay trial court proceedings against NithyanandaDharma is Truthhttp://www.blogger.com/profile/04920047150031562335noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8548474726098828340.post-7849585426224607412017-03-17T08:30:02.116+05:302017-03-17T08:30:02.116+05:30திருவண்ணாமலை கோவிலில் நுழைய நித்யானந்தா சீடர்களுக்...திருவண்ணாமலை கோவிலில் நுழைய நித்யானந்தா சீடர்களுக்கு எதிர்ப்பு<br />திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள், வெளிநாட்டை சேர்ந்த நித்யானந்தா சீடர்கள், 150 பேர், நேற்று சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால், வெளிப்பிரகாரத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டனர்.<br />திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள நித்யானந்தா ஆஸ்ரமத்தில், நித்யானந்தாவின் கல்பதரு நிகழ்ச்சி நேற்று மாலை, 6:30 மணிக்கு நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக, நித்யானந்தாவின் சீடர்கள், 1,000க்கும் மேற்பட்டோர், அவரது ஆசிரமத்திற்கு வந்தனர். இந்நிலையில், நேற்று காலை, 8:30 மணிக்கு, இவர்களில், 150 வெளிநாட்டு சீடர்கள், அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். கடந்த பிப்., 24 முதல், வெளிநாட்டு பக்தர்கள் கோவிலுக்குள் வந்து சுவாமி தரிசனம் செய்ய, கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால், நித்யானந்தாவின் சீடர்களை உள்ளே செல்லவிடாமல், கோவில் ஊழியர்கள் மற்றும் போலீசார் தடுத்தனர். இதையடுத்து, கோவிலின், நான்காம் பிரகாரத்தில் அவர்கள் அமர்ந்து, 1 மணி நேரம் தியானத்தில் ஈடுபட்டனர். பின் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.<br /><br />http://www.dinamalar.com/news_detail.asp?id=1728705<br /><br />Anonymousnoreply@blogger.com